இந்த வீடியோ பதிவிலே பேசக்கூடிய குவைத் நாட்டுடைய மிக பிரபலமான காரிமிர்களில் ஒருவரான அஹமத் அல் நுபைஸ் பின்வருமாறு கூறுகிறார் .
" என்னுடைய தாய் கூறுவதண்டு நான் மக்களுக்கு தொழுகை நடத்தும் பொழுது தனக்கு ஏற்படும் பெருமிதத்தின் காரணமாக அங்கே வீட்டிரிக்கும் அனைத்து பெண்கள் மத்தியிலும் இவர் என்னுடைய புதல்வன் என்று உரத்த குரலில் சொல்வதற்கு என் மனதில் தோன்றுவதுண்டு "
நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கு
இவ்வுலகில் செய்யும் மிகப்பெரும் உபகாரம் அல்குர்ஆனை சுமந்த ஓர் ஹாபிளாக இந்த உலகில் வாழ்வதாக இருக்கலாம்.
நீங்கள் அல்குர்ஆனை மனனமிட்டு ஹாஃபிழாக வாழ்வது உலகிலே கிடைக்கும் முதுமாணிப் பட்டம் கலாநிதி பட்டத்தை விடவும் பன்மடங்கு மேலானது.
நீங்கள் பெற்றோராக என்னுடைய மகன் ஓர் கலாநிதி பட்டம் பெற்றவர் என்று சொல்வது நல்ல விடயம் தான். அதில் மாற்று கருத்துக் கிடையாது. இருந்த போதிலும் என்னுடைய மகன் அல் குர்ஆனை மனனமிட்ட அதன் அறிவிப்பாளர் வரிசையை பெற்றவர் ( سند، إجازة).( Narration chain) என்று சொல்லும் பொழுது அதில் இருக்கும் இன்பமோ வேறுவிதமானது.
அதாவது அது அல்லாஹ்விடம் நேரடியாக போய்ச் சேரக்கூடிய ஓர் அறிவிப்பாளர் வரிசை.
அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் மூலமாக நபியவர்களுக்கு கிடைக்கப்பெற்ற அந்த அல் குர்ஆனின் அறிவிப்பாளர் வரிசைக்கு சொந்தக்காரனாகுவது பெருமைப்படத் தகுந்த விடயம் தான். #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 #🕋ஜும்மா முபாரக்🤲