குதிரை பேரமும் கழுதை பேரமும்...
காட்சி 1:
25 MLA க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சொல்லி அதிமுகவினர் சபாநாயகரிடம் மனு கொடுப்பார்களாம்.
காட்சி 2:
நீங்கள் என்னய்யா மனு கொடுப்பது? நாங்களே MLA பதவிகளை ராஜினாமா செய்கிறோம் என்று அவர்களில் சிலர் ரோஷத்துடன் முடிவெடுத்தால், அதை குதிரை பேரம் என்பார்களாம்!
பிறகு?
கூட்டணிக்குள் கட்சிகள் இருக்கலாம். ஆனால் ஒரு கட்சிக்குள் பல கூட்டணிகள் இருந்தால் அது அதிமுக. அதில் ஒன்று வெளியேறினால் எடப்பாடி வேறென்ன சொல்வார்! மற்றவர்கள் ஏன் போனார்கள்? ஏன் திரும்பி வந்தார்கள்? அவர்கள் மீண்டும் கட்சியில் இணைய என்ன பேரம் நடந்தது?அதில் வெற்றியா தோல்வியா - விலாவாரியாகப் பேசலாமா?
சரி, உதயநிதி என்ன பேசினார்?
இது குதிரை பேர அரசியலின் மூலம் உருவாக்கப்பட்ட தற்காலிக ஆட்சி; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முழுமையான பெரும்பான்மை அரசு அல்ல, மாறாக ஒரு சிறுபான்மை அரசு (Minority government), என்று சாடினார். இது தோல்வி தந்த ஆத்திரம்!
ஜெ மூச்சுக்கு மூச்சு முன்பு திமுக அரசினை "மைனாரிட்டி அரசு" என்று பேசியது மறந்துவிட்டதா? ஜனநாயகத்தின் உயரிய விழுமியங்களைப் பற்றி மற்ற கட்சிகளை அரட்டி உருட்டி ஒரு மைனாரிட்டி அரசு நடத்திய திமுக பேசலாமா? மேலும், அதிகாரத்தில் பங்கு கேட்ட கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை மைனாரிட்டி ஆட்சி நடத்திய திமுக என்றைக்காவது ஏற்றுக் கொண்டதுண்டா?
நாகரீகமாகக் குதிரை பேரம் என்று சொன்னாலும் சரி, கழுதை பேரம் என்று கழுவிக் கழுவி ஊற்றினாலும் சரி, மக்களுக்கு காசு கொடுத்து ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் யாருக்கும் நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு இதைப் பற்றிப் பேச அருகதையே இல்லை.
சுருக்கமாகச் சொன்னால், குதிரைபேரம் என்பது இன்றைக்கு திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாயத்து! இது மக்களுக்குத் தெரியாதா? மக்கள் இடைத் தேர்தலில் முடிவெடுக்கட்டும் பார்க்கலாம்! இல்லையென்றால், அதனால் தவெக ஆட்சி வலுப்பெற்றுவிடும் என்ற பயமா? ஏன், இப்போது திருமங்கலம் ஃபார்முலா மீது நம்பிக்கை இல்லையா?
பொதுவாக, நீட் தேர்வு, கச்சத் தீவு பிரச்சினை, காவேரி இழுபறி, GST மாதிரியான விஷயங்கள், திமுகவினருக்கு அவர்கள் ஆதரித்தபோது நியாயமாக இருந்தது. அவர்களே அந்தப் பிரச்சினைகளுக்கு விதை போட்டுவிட்டு, அவை வளர்ந்து பெரிதானதும், வேறு யாராவது அவற்றை ஏன் தீர்க்கவில்லை என்று, ஆக்ரோஷமாகக் காதுவரை வாய்கிழியப் பேசுவார்கள்.
இவர்கள் எதைச் செய்தாலும் அது நியாயம். அதையே அடுத்த கட்சிகள் செய்தால் அநியாயம்.
அதாவது, இவர்களுக்கு வந்தால் அது இரத்தம். அதுவே மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பதே திராவிட மாடல் கோட்பாடு. இனிமேல் மக்கள் ஏமாற மாட்டார்கள். அந்த காலம் மலையேறிவிட்டது.
அதெல்லாம் சரி, பிற கட்சிகளை வற்புறுத்தி உங்கள் சின்னங்களிலேயே நிற்கச் சொல்வது எந்த ஊர் ஜனநாயக நியாயம்? அந்தக் கட்சிகள் உங்களுக்கு நீங்கள் ஆட்டுவித்தபடி ஆடவேண்டிய அடிமைகள் என்றால் அது என்ன ஜனநாயகம்?
திராவிடக் கட்சிகள் உள்கட்சி ஜனநாயத்தைப் பேணிக்காக்கிற பாங்கினை நாடே நன்கறியும்! இவர்களா மக்களிடம் ஜனநாயக மரபுகளின் பாதுகாவலர்களாக நாடகம் போடுவது? எல்லோரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரி ஜனநாயக தத்துவங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டால் எப்படி? அதை நாடு தாங்குமா?
Have you subscribed to our channel?
If not, please subscribe now. This is your channel!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை