ShareChat
click to see wallet page

கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி அதிமுகவை புகழ்ந்து பேசியதாக கிஷோர் கே சாமி தவறாக பரப்பி வருகிறார். ராகுல்காந்தி பேசியதன் தமிழ் மொழிபெயர்ப்பு இது தான். “எங்கேயெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கேயெல்லாம் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு, அதன்பின்னர் டெல்லியில் இருந்து அந்தப் பகுதியை ஆள நினைக்கிறது பாஜக. ஆனால் இதை தமிழ் மக்களிடம் நேரடியாக சொல்வதற்கு அவர்களுக்கு தைரியமில்லை. அதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் பெரிய வரலாற்றை உடைய ஒரு இயக்கத்தை (அதிமுக) இப்போது கைவசப்படுத்தி இருக்கிறார்கள். அதிமுக தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. தமிழ்நாட்டை உண்மையிலே பிரதிநிதித்துவப்படுத்திய அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு வெற்றுக் கூடாக மாறியிருக்கிறது. தற்போது அதிமுக பாஜக தமிழ்நாட்டில் நுழைவதற்கான கருவியாக மாறிப்போய் இருக்கிறது. அதிமுகவின் இன்றைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தால் இன்று மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்திருக்கிறார்கள்”. ராகுல்காந்தி பேசியதன் சிறு பகுதியை மட்டும் எடுத்து அவர் அதிமுகவை புகழ்ந்து பேசியதாக தவறாக கிஷோர் கே சாமி பரப்புகிறார். Proof : https://www.youtube.com/live/5wENud9dcZo?si=2xrXu6FGp6n9QznM&t=3783 #youturn #factcheck 🧐

2K ने देखा
3 दिन पहले