பெற்றவன் மடி தேடி அலைகிறது
பிள்ளை,
இங்கு பிணங்களின் நடுவே
வாழ்வதை தவிர
வேறெந்த வழியும் எமக்கு இல்லை!
ஆயுதம் தாங்கிய கரங்களுக்கு நடுவே,
அநாதையாய் நிற்கிறது எங்கள்
அமைதி!
கடல் அலைகள் கரையத் தொடும்
போதெல்லாம்,
எம் மரண ஓலங்கள் காற்றில் ..!
கரைகிறது!
நிழல் தந்த வீடுகள் இடிபாடுகளாக,
நினைவுகள் அனைத்தும்
சாம்பலாகிறது!
காலணிகள் மட்டும் தெருவில் கிடக்க,
கால்கள் எங்கே என்று தேடுகிறது
காலம்!
“உயிரை சுமந்து திரியும்
உடல்களுக்கு,
உணர்வுகள் எப்போதோ
உறைந்துவிட்டன!
சொந்த நாட்டின் எல்லைகளைக்
தாண்டும் போது,
எங்கள் இதயத்தின் பாதியும் அங்கேயே
நின்றுவிடுகிறது.“
விடைபெற்றுச் செல்கிறோம் எம்
கண்ணீர்க் கடலே....
குழந்தையின் அழுகையை அடக்க
தண்ணீரில் உப்பை கலந்து கஞ்சி
என்று பொய்யாக விளித்தார்கள்.
“மே 18“: ஒரு அதி உச்ச இன அழிப்பின்
கரியநாள்..🥺🚩💔 #🔥❤️ஈழத்தமிழர் 🇱🇰 #😫சோக ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #⚔️வேலுப்பிள்ளை பிரபாகரன் ⚔️ #💪தமிழன்டா ஸ்டேட்டஸ்