ShareChat
click to see wallet page

என் அப்பன் குதிருக்குள் இல்லை... முன்பு மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் அன்று தவறான நேரத்தில் ஒரு தவறான முடிவினை எடுத்தன. கம்யூனிஸ்டுகளின் பாரம்பரியமே அதுதான். இந்தி எதிர்ப்பு போராட்ட காலங்களிலிருந்து இன்று வரை மக்களுடைய மனநிலைக்கு எதிரான முடிவுகளை எடுப்பதே அவற்றின் வாடிக்கை. அதே கம்யூனிஸ்டுகள் காலம் கடந்த காலத்தில் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டு தமது நிலைப்பாடு தவறானது என்று ஒப்புக்கொள்வார்கள். இத்தகைய முரண்பாடுகளால் அவர்களது வளர்ச்சியானது தமிழகம் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையானது. திருமாவளவனும் அவர்களுடன் சேர்ந்து அதே அரசியலைத்தான் செய்கிறார். இவர்கள் திமுக கொடுத்த சில இடங்களுக்காக வஞ்சகமில்லாமல் இன்னும் திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மக்கள் மனநிலைக்கு எதிரான நிலைப்பாட்டில் இன்று தங்களுடைய கட்சிகள் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை என்றே தெரிகிறது. பிறகு என்ன சொல்வது? முந்தாநாள் விஜயகாந்தின் செல்வாக்கினை ஓவர் எஸ்டிமேட் செய்து அரசியல் செய்து அசிங்கப் பட்டார்கள். நேற்று விஜயின் செல்வாக்கினை அண்டர் எஸ்டிமேட் பண்ணி அரசியல் செய்தார்கள். இன்று நேரங்கெட்ட நேரத்தில் கூட்டணி தர்மம் என்று பேசிக்கொண்டு திமுகவை தூக்கிப் பிடிக்கிறார்கள். கழகங்கள் தங்களுக்கு தேவைக்கேற்ப யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்பார்கள், அல்லது கழற்றி விடுவார்கள். இவர்களிடம் கேட்பதில்லை. அதுதான் கழகங்களின் வரலாறு. உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான். அவர்கள் காங்கிரசை எதிர்ப்பதும் சரி ஆதரிப்பதும் சரி மாறி மாறி நிகழ்வதுதான். பிஜெபி ஆனாலும் அதில் மாற்றமில்லை. கழகங்களின் தேர்தல் சூறாவளியில் சிக்கித் தவித்தது கூட்டணிக் கட்சிகளே. ஆனால், ஆட்சியில் பங்கா? மூச்! விஜய் ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்பதில் மட்டுமல்லாமல் இதர விஷயங்களிலும் தனது நிலைப்பாடுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். கம்யூனிஸ்டுகளை விட்டுத் தள்ளுங்கள். விசிகவிற்கு என்ன குழப்பம்? விஜய்க்கு விசிக ஆதரவு தர வேண்டுமா வேண்டாமா என்பதை திமுகவுடன் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? அப்படியென்ன நிர்ப்பந்தம்?பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்காக "நாங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கிறோம் (என் அப்பன் குதிருக்குள் இல்லை என்க.)" என்று வீர வசனம் பேசலாமா? உள்கட்சி விவகாரங்களில் சுதந்திரமாக முடிவெடுத்து செயல்பட முடிந்திருந்தால் திருமாவளவன் தான் விரும்பியபடி காட்டுமன்னார் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கியிருப்பாரா? சாண் ஏறினால் முழம் சறுக்கும் இப்பேர்ப்பட்ட கட்சிகள், வளர்ச்சிப் பாதையில் எப்போது நடைபோடத் துவங்கும்? தமிழக இடதுசாரித் தலைவர்கள் அனைவரும் இப்படியே தாங்கள் இருக்கும் வரை அடங்கி ஒடுங்கி காலத்தை ஓட்டினால் போதும் என்று நினைக்கிறார்களா? பின்னே, காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது, முதுகில் குத்தி விட்டது என்று திமுகவினர் ஏன் பேசமாட்டார்கள்? அதைத்தானே நீங்களும் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுத்தீர்கள்? பிறகு காங்கிரஸ் மீதான திமுக வின் கண்டனங்கள் உங்களுக்கு ஏற்புடையதா? #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

657 ने देखा
3 दिन पहले