தவெக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியானால்...
நிரந்தர அரசியல் மாற்றம் நிகழ்ந்துவிட்டது எனலாம். மொத்த ஓட்டு எண்ணிக்கையில் அதுதான் மூன்றாவதாக வர வாய்ப்பு உள்ளது. அதில் சந்தேகம் இல்லை. நாம் சொல்ல வருவது சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றாவதாக வருவதைப் பற்றி.
இதை நாம் சொல்வதற்குக் காரணம், காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை விட தவெகவிடம் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டும், திமுக அல்லது அதிமுகவால், விஜயின் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.
ஒருவேளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் எதிர்பாராத அளவிற்கு அதிர்ச்சிகரமாக விஜய் 40 முதல் 60 இடங்களில் ஒருவேளை வென்றுவிட்டால் அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.
மாற்றத்தை விரும்பும் மக்கள் விஜயை ஏமாற்ற மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ஆரூடங்கள் ரெக்கை கட்டிப் பறக்கின்றன.
தமிழகத்தில் திமுக 1967இல் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.
இன்று தமிழக அரசியலில் இருப்பது இரண்டே இரண்டு நிலைப்பாடுகள்தான் -
மாற்றம் தேவையா?
மாற்றம் தேவையில்லையா?
மக்கள் தீர்ப்பு எப்படியும் இருக்கலாம், எதுவும் சொல்வதற்கில்லை!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை