*ஸ்ரீபாத ஸப்ததி*
புதிய தொடர் பதிவு!
*ஸ்ரீபாத ஸப்ததி* *ஸ்லோகம்:18*
பூர்வம் ஜஹ்னுஸுதா ஸக்ருன் முரரிபோ: ஸ்ரீபாதஸம்க்ஷாலனாத் புண்யாதீத்ருசவைபவா ஸமபவத் கோவிந்தவந்த்யே சிவே ஸேயம் ஸம்ப்ரதி சம்புமெளலிநிலயா மானப்ரஸங்கானதௌ நித்யம் த்வச்சரணாவஸேசனபுவா புண்யேன கீத்ருக்பவேத்
ஸ்ரீகோவிந்தன் வணங்கும் அம்பிகையே!
முன்பு ஒரு தடவை ஜஹ்னு மகரிஷியின் புத்திரியான கங்கை ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஸ்ரீபாதங்களை நனைத்த புண்ணியத்தினால் அந்த கங்கைக்கு இம்மாதிரியான (அதாவது மூன்று உலகங்களையும்) பரிசுத்தமாக்கும் வைபவம் கிடைத்தது.
இப்போது ஸ்ரீபரமேஸ்வரனின் சிரஸிலிருக்கும் கங்கை பிரணய கலகத்தில் அவர் உன் ஸ்ரீபாதங்களில் நமஸ்கரிக்கும் போது
உன் ஸ்ரீசரணங்களில் ஸ்பரிசித்துக் கிடைக்கும் புண்ணியத்தினால் இன்னும் எந்த வைபவத்தை அடையப் போகிறது?
ஸ்ரீமகாவிஷ்ணு வாமனாவதாரத்தின் போது தன்னுடைய உயரத் தூக்கிய பாதத்தினால் விண்ணுலகை அளந்தார்.
பிரம்மாவின் ஸத்யலோகத்தில் வந்தடைந்த அந்த பாதத்திற்கு பிரம்மா
தன் கமண்டலத்தின்
தீர்த்தத்தினால் பிரக்ஷாலனம் செய்தார்.
அப்போது கீழே விழுந்த அந்த தீர்த்தம் தான் கங்கையாக உருவெடுத்தது.
மேற்கண்ட ஸ்ரீபாத ஸப்ததி ஸ்லோகம்
18ன் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏அம்மன் துணை🔱 #மந்திரங்கள் #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #அம்மன் பக்தி பாடல்கள் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
2K views • 2 months ago • Made with AI