ShareChat
click to see wallet page

காதலியின் கல்யாணத்தில் 1001 மொய்வைத்து திரும்புகையில் அவளது அப்பா ஓடிவந்து கைகொடுத்தார். 'சாப்பிட்டுட்டு போங்க' என்ற அவளது அண்ணன் உட்காரவைத்து எனது இலையில் இரண்டு முறை கறி வைக்கச் சொன்னார். அவளது அம்மா கையைப் பிடித்து இழுத்துப் போய் அவள் பக்கத்தில் நின்று போட்டோ எடுக்கவைத்தார். என் கையை ஒடித்த அவளது சித்தப்பாதான் பஸ்ஸ்டாப்பில் வைத்து சிகரெட் டப்பாவை திறந்து நீட்டினார். ஒன்று எடுத்துக்கொண்டேன். நிழற்குடையில் உட்கார்ந்திருந்தவர் 'சூராணத்துக்கு அடுத்த பஸ் 5 மணிக்குதான் தம்பி ' என்றார். பைக்,ஆட்டோக்களில் ஏறப் பிடிக்காது ஒரு பெரிய தரிசுக்காட்டை நடந்து கடக்க ஆரம்பித்திருந்தேன். கல்யாண வீட்டில் மைக் செட்காரர் அரண்மனைக் கிளி ஆல்பத்தை அப்போதுதான் போட்டிருந்தார். அம்மன் கோயில் .... அடி பூங்குயிலே... வான்மதியே வான்மதியே... ராசாவே உன்னை... ராத்திரியில் பாடும் பாட்டு... நட்டுவச்ச.... இந்தப் பெருவெளியில் இவ்வளவு நேரமாக நடக்க நடக்க கொஞ்சம் கொஞ்சமாக பாடல் சத்தம் குறைந்தபடியே வந்து கடைசிப் பாடலில் சத்தம் சுத்தமாக நின்றிருந்தது. ஆள் அரவமற்ற காய்ந்து கிடக்கிற ஒரு நீண்ட தரிசுக் காட்டை இப்படி ஒரு உயிர்போகிற வலியான துயரமிக்க கோடைநாளின் பின்மதிய தனிமை நடையின் வெறுமையை இரண்டு கிலோமீட்டர் தாண்டி வந்து இப்போதுதான் நான் உணர்கிறேன். எனில் இத்தனை தூரம் என்னைத் தூக்கிவந்தது யார்? அசரிரீ இளையராஜா என்றது.... போகிற வழியெங்கும் உன் இசை வழித்துணையாய் வந்து கொண்டே தான் இருக்கிறது..❣️❣️ உன் இசையின்றி வேறு அருமருந்து இல்லை இளைப்பாறுபவர்களுக்கு,காயப்பட்டவர்களுக்கும் 🖤 நேற்று இல்லை நாளை இல்லை என்றுமே இசைக்கு நீ தான் ராஜா🔥🔥🔥 #இளையராஜா ❤ #HBDலெஜெண்ட் #🎂Happy Birthday🥳 #🌻வாழ்த்துக்கள்💐 #🎶இசைஞானியின் இன்னிசை

720 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்