கவிதைகளென்பது
காதலிக்க தூண்டுவது..
கவிதைகளென்பது
காதலித்திட வைப்பது..
கவிதைகளென்பது
காதலை உணர்வது...
கவிதைகளென்பது
காதலை ரசிப்பது...
கவிதைகளென்பது
காதலிக்க படுவது...
கவிதைகளென்பது
காதலித்தே கிடப்பது...
கவிதைகளென்பது
ஒன்றன் பின் ஒன்றாக
கற்பனை கொண்டு கோர்த்தெழுதப்படும்
வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல..
அவைகள் தன்
மேடு பள்ளங்களை
சேலையால் மூடி மறைத்து
விழி வழியாக இனம்புரியா
மொழிகளில் பேசி சிரித்து
சிறிது கண்மை
சிறிது குங்குமம்
சிறிது மஞ்சள் கலந்து
எளிமையாக தங்களை
அலங்கரித்து
வெட்கங்கள் சூடி
உயிர்களை களவாடி செல்லும்....
#நான்_ரசித்த_கவிதைகளென்பது
வெறும் வார்த்தைகளால்
மட்டும் ஆனதல்ல ...!
#ஜேசுதாஸ் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #❤️எங்கேயும் காதல்