ShareChat
click to see wallet page

*லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற பலனை தரும்* *பாக்ய ஸுகூர்த்த* (பாக்ய ஸூக்தம்) *மந்திரம்* (பாக்ய ஸூக்தம்) ஸுகூர்த்தம் என்றால் கொடுப்பினை என பொருள். கேரளாவில் விஷ்ணு கோவில்களில் இந்த வழிபாடு பிரசித்தி பெற்றது. குருவாயூர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் க்ஷேத்திரம், திருப்றையார் போன்ற. விஷ்ணு கோவில்களில் வழிபாடு செய்வார்கள், முடியாதவர்கள் உங்கள் இல்லங்களில் பாக்ய ஸுகூர்த்தம் மந்திரம் சொல்லி வழிபாடு செய்யலாம், எதற்கு? ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பாக்யஸ்தானம். அந்த பாக்யாதிபதி சூரியனுடன் கூடி அஸ்தங்க தோஷம், பாக்யாதிபதி வக்கிரம், மறைவு போன்றவவை உண்டானால் பெரும்பாலும் பெண்களுக்கு பிள்ளைபேறு நல்ல கணவன் போன்ற பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் பாவம் சம்மந்தப்பட்ட காரியங்கள் நன்கு சீராக நடைபெற தங்களின் அதிதேவதையை மனதில் நன்கு வேண்டி இந்த மந்திரம் சொல்லி வர வேண்டும், பாக்ய ஸுகூர்த்த முதல் மந்திரத்தில் அக்னி பகவான், இந்திரன், மித்ர வருணதேவன் தேவலோக வைத்தியர்களாகிய அஸ்வினி தேவர்கள் தேவகுருவாகிய ப்ரகஸ்பதியையும் மந்திரத்தால் வணங்கப்படுகிறது, மீதமுள்ள ஆறு மந்திரங்களில் ஆதித்யன், மற்றும் பிற தேவர்களை வணங்கப்படுகிறது *இந்த மந்திரத்தை* *அதிகாலை பிரம்ம* *முகூர்த்தத்தில் ஜெபம்* *செய்தால் லட்சம் சிவன்* *கோவில்களுக்கு* *சென்ற புண்யம்* *கிடைக்கும் என்பது* *ப்ரமாணம்* ஒன்பதாம் பாவத்திற்க்கான காரியங்கள் சித்தியாகும் 1.ஓம் ப்ராதரக்னீம் ப்ராதரிந்த்ரம் ஹவாமஹே, ப்ராபாதர்மித்ரா வருணா ப்ராதசின்யன, ப்ராதர்பஹம் பூஷணம் ப்ரம்ணஸ்பதிம் ப்ராதஸஸ்ஸோமமுத ருத்ரம் ஹுவேம. பொருள் : அக்னி. இந்திரன், மித்ர வருணதேவன்மார்கள், அஸ்வினி தேவன்மார்கள், பூஷன். ப்ரகஸ்பதி, ஸோமன், ருத்ரன். என்கின்ற தேவர்களை வந்தனை செய்யப்படுகிறது, 2.ப்ராதர்ஜிதம் பஹமுகம் ஹுவேம வயம் புத்ரமதிதேரேய்யா வியாதா ஆத்யஞ்சிதய்யம் மன்யமானஸ்து ரஞ்சித்ராஜா சைத்யம் பஹம் பக்ஷித்யாஹ, பொருள் ; பாவப்பட்டவர்களும், இராஜாக்கன்மார்களும் ப்ராத்திக்கின்ற ஆதிதியுடைய புத்ரனாகிய பஹனை எல்லாவித ஐஸ்வர்யமும் உண்டாகும்படி வணங்குகிறோம், 3. பஹ ப்ரணதர் பகஸத்யா ராதோ பஹே மாந்திய முதவததண பகப்ரணோ ஜனய கோபிரசைர் பஹப்ரன்ய ப்ர்ன்யவம் தஸ்யாம பொருள் : எல்லா ஐஸ்வர்யங்களின் மூர்த்தியாகிய தெய்வமே எங்களுக்கு சத்ய தர்மங்களின் மூலம் வாழ நல்ல புத்திகள் நல்கி அனுக்கிரகியுங்கள், 4.உதேதானீம் பகவல்ஸ்யா மோத ப்ரபித்ய உத மத்யே அஹனாம் உதோதினா மகவன் ஸுரஸ்ய வயம் தேவானாம் ஸுமுதௌ ஸ்யாம, பொருள் :ஈஸ்வர்ய அனுகிரகத்தால் எனக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்லவர்கள் ஸகவாசத்தை பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற்று பெற்றவர்கள் ஆகிய. எங்களுக்கு பேரூம் பெருமைகளை தேடி தரும்படி ஈஸ்வரனை வேண்டுகிறோம். 5.பஹ ஏவ பகவாஹம் ஆஸ்தூ தேவா ஸ்தேன வயம் பகவல்ஸ்யாம தந்த்யா பக ஸர்வ இஜ்ஜோஹவீமி ஸனோ பக பூர ஏதா பவேஹ.. பொருள் ; பகவானே எங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமலும். தன கஷ்டத்தை போக்கியும் நீங்கள் எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும், 6. ஸமயய்ராயோ ஷஸோனமந்த ததி வேவ ஸுச்சயே பதாய அர்வாசீனம் வஸுவிதம் பகணோ ரதமி வாஸ்ய வாஜின ஆவாஹந்து பொருள் ; இரக்ஷகனாகிய வனங்களில் குதிரைகளுக்கு நீங்கள் எவ்வளவு பலம் கொடுத்திரிக்கிறீர்களோ அவ்வளவு பலத்தை எனது குடும்பம் காக்கக பலத்தை கொடுங்கள், 7.ஆஸாய்யவதீர்கோமதீர்ண உஷாஸோ வீரபதீஸ்ஸதமு ச்சந்து பத்ரோ ஹல்யதந்துஹானா விஸுத்ய ப்ரவீனா யுயம் பாத ஸ்யஸ்திபீஸ்ஸதான பொருள் ; இந்த குடும்பத்தின் கிரக நாதியாகிய பெண்ணான எனக்கு நீங்கள் கூட இருந்து பலத்தை தந்து என் கணவன், பிள்ளைகளுக்கு நோய் நொடிகள் வராமல் தந்தை ஸ்தானத்தில் ஈஸ்வரனாகிய நீங்கள் என்னை காப்பாற்றி கொண்டே இருக்க வேண்டும் ஓம் ஸாந்தி! ஓம் ஸாந்தி!! ஓம் ஸாந்தி!!! பாக்ய ஸூக்தம் மந்திரத்தின் ஒலி வடிவ காணொளிக்காட்சி கீழே!👇👇🚩🕉🪷🙏🏼 #🙏ஆன்மீகம் #🕉️🕉️அர்த்தமுள்ள இந்து மதம்🕉️🕉️ #இந்து மத நம்பிக்கை💐 #சுலோகம் மற்றும் மந்திரங்கள் #மந்திரங்கள்

605 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்