எல்லோரும் டிரம்ப் மாதிரி பேச ஆரம்பித்தால் எப்படி?
விஜய்க்கு எதிராக 60% மக்கள் இருக்கிறார்களாம். திருமாவளவன் அவர்களின் அரிய கண்டுபிடிப்பு! இது ஒரு பொறுப்புள்ள தலைவர் பேசுகிற முறையான பேச்சாகத் தெரியவில்லையே! எல்லோரும் டிரம்ப் மாதிரி பேச ஆரம்பித்தால் எப்படி?
"விஜய்க்கு எதிராக 60% மக்கள்" என்று திருமாவளவன் பேசியது முட்டாள்தனமானது!
தமிழக மக்கள் விஜய்யை எதிர்ப்பதற்கு -
* விஜய் ஊழல் செய்தாரா?
* பொது மக்கள் சொத்தை கொள்ளையடித்தாரா?
* அரசு பணத்தினை கையாடல் செய்தாரா?
* தமிழக மக்களுக்கு வேறு என்ன துரோகம் செய்தார்?
தமிழக மக்கள் விஜய்யை எதிர்ப்பதற்கு என்ன முகாந்திரம் உள்ளது? உங்கள் எதிரிகளை எல்லாம் மக்கள் எதிரிகளாக சித்தரிப்பதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா? இப்படிக்கூட அவர் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்கே தந்தியின் படத்தை அப்படியே தந்துள்ளோம் யாகாவாராயினும் நாகாக்க!
ஒருபக்கம் ஆதரவு கொடுத்துக்கொண்டே மறுபக்கம் ஊசியை வைத்துக் குத்திக் குடைச்சல் கொடுக்கிற பண்பாட்டை மக்கள் ரசிக்க மாட்டார்கள். அதிலும் கேப்பையில் நெய் வடிகிற கதையாக மாணாங்காணியாக பேசுவதை ஏற்பதற்கில்லை என்றாலும், பொதுவாவாக இவரது பேச்சை யாரும் பொருட்படுத்துவது இல்லை.
கோமணத்துல காசிருந்தா, கோழி கூப்பிடப் பாட்டு வரும் என்கிற கதையாக, இவர் பேசவில்லை - தமிழக அரசியல் இருக்கும் இக்கட்டானதொரு சமயத்தில் - இவர் வசம் இருக்கும் இரண்டு MLA சீட்டுக்கள் பேசுகின்றன. அப்படி இல்லையென்றால் ஒருவேளை இவருக்கு என்ன இக்கட்டான சூழ்நிலையோ...
திருமாவளவனுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் ஆதரவு வாக்குகள்; விஜய்க்கு விழாத வாக்குகள் எல்லாம் எதிர்ப்பு வாக்குகளா?அப்படிப் பார்த்தால், திமுகவிற்கு விழாத வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு எதிரான வாக்குகள் என இவர் மறைமுகமாகச் சொல்வது போலத் தெரிகிறது.
பாவம், சொல்லிவிட்டுப் போகட்டும்! ஏனென்றால் அதுதான் உண்மை. அதை நேரடியாக இவரால் சொல்ல முடியாது என்பதால் விஜய்யை வைத்து சுற்றி வளைத்துப் பேசுகிறார். இப்படித்தான் சீமானைப் பற்றி ஏடாகூடமாகப் பேசி சுடச்சுட வாங்கிக் கட்டிக்கொண்ட வரலாற்றுக்கு இவர் சொந்தக்காரர்.
போகிறபோக்கில் எதையாவது பேசி புழுதியை வாரித் தூற்றுவது அவர் கண்களிலும் வந்து விழும்... சரி, என்ன மனநிலையில் இருந்தாரோ, ஏதோ பேசிவிட்டார். பேசிவிட்டுப் போகட்டும், விட்டுத் தள்ளுவோம்!
#📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை