ShareChat
click to see wallet page

ஆவது போல் ஆகிக் கெடும்... இதுவரை பெற்ற வெற்றி எல்லாம் ஒரு வெற்றி இல்லை, அடைந்த தோல்வியெல்லாம் ஒரு தோல்வி இல்லை. ஆனால் 2026 தேர்தலில், இன்று திமுக அடைந்த தோல்வி ஒரு மறக்க முடியாத, மற்றும் மாற்றவே முடியாத நிஜமான தோல்வியாக அமையும் என்பதே தேர்தலுக்குப் பிந்தைய தமிழக அரசியல் நிலவரம் தரும் செய்தி ஆகும். அதிமுகவைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை! Already written off even before the elections. அதிமுக தோன்றிய பின்னர் திமுகவும் அதிமுகவும் பிரதான கட்சிகளாக தமிழக தேர்தல் களத்தில் மோதி வந்தன. காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமலே போனது. அப்போதெலாம் சில தேர்தல்களில் திமுக வரலாறு காணாத வெற்றியடைந்தது உண்டு. அதேபோல வரலாறு காணாத தோல்வியை அடைந்ததும் உண்டு. உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 28 எம்.எல்.ஏ.க்களைக் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. அந்தத் தேர்தலில் திமுக வெறும் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், 2021இல் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. திமுகவோ அல்லது அதிமுகவோ பெற்ற வரலாறு காணாத வெற்றியும் வெற்றியில்லை; தோல்வியும் தோல்வியில்லை. ஏனென்றால், அவை ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கூட்டணிக் கணக்குகள் மற்றும் இலவச வாக்குறுதிகள் போன்ற பல்வேறு சலசப்புகள் காரணமாக அடுத்த தேர்தல்களில் கணக்குகள் மாறும்போது வெற்றி தோல்வியும் நிலைமாறுகிறது. இது வரை திராவிடக் கட்சிகளுக்குள் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. 2026 தேர்தல் வித்தியாசமானது. இது மேற்கு வங்காளத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்திற்கு ஒப்பானது. இரு கழகங்களும் இந்தத் தேர்தலில் வாங்கியது மரண அடி! ஒருவகையில் EPS செய்த அலப்பறைகளும் இன்று திராவிடக் கட்சிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறி ஆனதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. காங்கிரசினால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. கம்யூனிஸ்டுகளின் அராஜகங்கள் எல்லை மீறின. மம்தா பானர்ஜி சரியான தருணத்தில் விசுவரூபம் எடுத்தபின் நிலைமை தலைகீழானது. சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த மக்களும் மம்தாவை நம்பி ஆதரித்தனர். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. மம்தா கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தார். கம்யூனிஸ்டுகளின் அராஜகம், அடக்குமுறை மற்றும் வன்முறையை அனுபவித்த மக்கள் அதை மறக்கவில்லை; அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பே வழங்கவில்லை. இலவசங்கள், உரிமைத்தொகை, உதவித்தொகை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவை ஓட்டுக்களுக்காக விரிக்கப்படும் வலைகள் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். கண்ட மேனிக்கு கடன்களை வாங்கி திமுக தலைவர்கள் "வள்ளல்" வேஷம் போட்டு "மஞ்சக்குளிச்சதும்" அவர்களுக்குத் தெரியும். 2026 தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எத்தனை தொகுதிகளை வென்றது? சொல்வதற்கு நமக்கே கூச்சமாக உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 (ஒரே ஒரு) தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. நாளை தமிழகத்தில் அதே நிலை திமுகவிற்கு ஏற்பட்டால் அதில் ஆச்சரியம் இல்லை. தேர்தலுக்கு முன்னால் திமுக தலைவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் ? "ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன?" என்ற கண்ணதாசனின் பாடல்தான் நினைவில் நிழலாடுகிறது. "ஆவது போல் ஆகிக் கெடும்" என்பது ஒரு திருக்குறளின் சுருக்கமான பழமொழி வடிவமாகும். குறள்: "களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்" பொருள்: அறநெறிக்கு மாறாகத் திருட்டு அல்லது நேர்மையற்ற வழியில் சேர்க்கப்படும் செல்வம், பல மடங்கு பெருகி வளர்வது போல் தோன்றும். ஆனால், அது நிலைக்காமல் இறுதியில் அடியோடு அழிந்துவிடும். Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel! #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴

724 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்