❤️அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அதிக நன்மைகள் பெற்றுத் தரக்கூடிய சிறந்த 10 திக்ருகள்!
❤️1) சுப்ஹானல்லாஹ்
பொருள்: அல்லாஹ் தூயவன்!
சிறப்பு: ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன!
நூல் : முஸ்லிம் 5230
❤️ 2) அல்ஹம்துலில்லாஹ்
பொருள்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
சிறப்பு: (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும்.
நூல் : - முஸ்லிம் 381
❤️ 3) அல்லாஹு அக்பர்
பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்!
சிறப்பு: ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்!
நூல் : முஸ்லிம் 1302
❤️4) சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி
பொருள்: அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது.
நூல்: - முஸ்லிம் 381
சிறப்பு: வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்டதாகும்!
❤️5) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி
பொருள்: அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்!
சிறப்பு: கடலின் நுரை அளவிற்கு (அதிகமாக) பாவங்கள் இருந்தாலும் அனைத்தும் மன்னிக்கப்படும்.
நூல்: - புஹாரி 6405
❤️6) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன். அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்!
சிறப்பு: நன்மை தீமை நிறுக்கப்படும் மீஸான் என்னும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை.
நூல்: - புஹாரி 7563
❤️7) அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா
பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.
சிறப்பு: இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள் கிடைக்கின்றன!
நூல்: - முஸ்லிம் 1052
❤️8) அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி
பொருள்: (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது)
சிறப்பு: 12 வானவர்கள் இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம்
நூல் : முஸ்லிம் 1051
❤️9) லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (100 முறை)
பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்.
சிறப்பு: 10 அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், 100 நன்மைகள் எழுதப்படும். 100 தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் இருக்கும்.
நூல்: - புஹாரி 3293
❤️10) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி ( 3 முறை)
பொருள்:(அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
நூல்: முஸ்லிம் : 5272.
நூல்:முஸ்லிம் : 1051
இந்தப் பத்து திக்ருகளை நாம் அதிகமாக ஓதி அல்லாஹ்விடம் அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்!
இன் ஷா அல்லாஹ்!
#🕋யா அல்லாஹ்