அன்பு எனும் தவம்
❤️❤️❤️❤️
தோற்றத்தை பார்த்து வெறுத்த உறவுகள்
நான் ஒதுங்கி நின்னேன் உறவுகளின்றி
அன்புக்கு ஏங்கினேன் கிடைக்காமல் தவித்தேன்
தனிமையில் இருந்தேன் நொந்த மனமுடன்
என்னையும் ஒருத்தி காதலிப்பாளென்று எண்ணவில்லை
மனதை அறிந்தாள் அன்பால் அணைத்தாள்
தவமாய் கிடைத்தாள் தாய்போல் ஆதரித்தாள்
என்னவள் ஆனாள் என் மனமறிந்து
அவள் யாரென்று நிரூபித்து விட்டாள்
குழந்தை மனம் கொண்டவள் இவளென்று
எம். அமுதா
#என் காதல் கவிதை