எங்கே செல்லும் இந்த பாதை
===========///=============
Raja Rajendran Tamilnadu நன்றி சகா
தேர்தல் பத்திர ஊழல் மட்டுமல்ல,
PM Care Fund ஊழல்,
ரஃபேல் பேர ஊழல்,
முந்த்ரா மற்றும்
விஸ்வகர்மா யோஜனா கடன் ஊழல் என்று உலகமகா ஊழல்களை பீஜேபீ மிகவும் துணிந்து செய்து பல இலட்சம் கோடிகளை பல வழிகளிலிருந்தும் உறிஞ்சி எடுத்திருக்கிறது.
இந்தப் பணங்களை வைத்து இந்திய ஊடகங்களை மட்டுமல்ல உலக ஊடகங்களையே அவர்கள் ஒட்டுமொத்தமாக வாங்க முடியும்.
எந்த சமூக வலைத்தளங்களையும் அவர்களால் எளிதில் கட்டுப்படுத்த முடியும். மார்க், மஸ்க் என்று யாரையும் பணத்தால் அடித்து வாயை அடைக்குமளவு பகிரங்கக் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.
இவர்கள் யாரிடமெல்லாம் ஏமாற்றி அந்தப் பணத்தைக் கொள்ளையிட்டனரோ அவர்கள் அனைவரும் மேலே ஆட்சி மட்டும் மாறினால் அடுத்த நிமிடம் திவாலாகி நடுத்தெருவில் நிற்பார்கள்.
அதாவது அம்பானி, அதானி, வேதாந்தாக்களைச் சொல்லவில்லை.
அதைச் செய்யறேன், இது வராம கவனிச்சிக்கிறேன் என்று பல பொய் வாக்குறுதிகளைத் தந்து இவர்கள் சுரண்டியிருப்பது அதிகம்.
உதாரணத்துக்கு, பலருக்கும் தொழில் முனைவோர் கடனை தேசிய வங்கிகளுக்கு அழுத்தம் கொடுத்து வாங்கித் தருகிறார்கள். கடன் தொகை க்ரெடிட் ஆனதும் குறுந்தொகையை கட்சிக்கும், பெருந்தொகையை தரகாகவும் பெறுகிறார்கள். அப்புறம் எங்கிட்டு மிச்சம் இருக்கும் ? அதற்கு என்ன உத்திரவாதம் தருகிறார்கள் தெரியுமா ? நாலஞ்சு மாசம் கட்டு. அப்புறம் கட்டாத. உன் மேல கேஸ் கீஸ் வராம நாங்க பாத்துப்போம். நீ எங்க பரிவாருக்குள்ள வந்துடுவ.
இப்படி வங்கிகள் இந்தச் சங்கிகளால், இழந்த தொகை அளவு நிச்சயம் மயக்கத்தை வரவழைக்கும். இன்னும் சில நாட்களில் அது little boy குண்டைப் போல வெடிக்கும்.
எனவேதான் நியுஸ் 18 போன்ற டிவிக்களில் குருட்டாம்போக்கு கருத்துக் கணிப்புகள் தரப்படுகின்றன. தேர்தல் ஆணையத்தையே தங்களை கைக்குள் வைத்து அந்த நம்பருக்கேற்ப ரிசல்ட் நம்பரை வரவைக்க வேண்டுமென ரகசியக் கட்டளைகள் இடப்பட்டிருக்கின்றன !
அர்விந்த், அகிலேஷ், தேஜஸ்வி, மம்தா, உத்தவ், சரத்பவார், கம்யூனிஸ்ட் சித்தராமய்யா, ஹேமந்த், ஜெகன்மோகன், பீஜூநவீன், தெலங்கானா & இமாச்சல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட அனைவரும் மண்ணைக் கவ்வுவார்களாமாம்.
அதாவது ஒடிசாவில் கூட பீஜேபீயே அதிகம் வெல்லுமாம். அவர்களுக்கு கீழேதான் பீஜூ ஜனதா வாங்குமாம். மம்தாவை கீழிறக்கி பீஜேபீ அதிகம் அள்ளுமாம். டெல்லியில் அர்விந்த் + ராகுல் சேர்ந்தாலுமே 7/7 பீஜேபீதானாம்.
ஏனோ தமிழ்நாட்டில் மட்டும் 9 என்கிற நம்பரை கொடுத்துள்ளார்கள். நியாயமாக பீஜேபீ 25, எடப்பாடி 13, திமுக 1 என்று சொல்லியிருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.
மேற்கு வங்கத்தில் மம்தா 42% வாக்கு வாங்குவாராம், பீஜேபீயும் 42% தான் வாங்குமாம். ஆனால் பீஜேபீ 25 வெல்லுமாம், மம்தா 17 தான் வெல்வாராம். சூப்பர்ல்ல ?
தேர்தல் பத்திரங்கள் வாங்கித்தான் உங்கள் நன்றிக்கடனை காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை. இப்படியான குமாரசாமி கணக்கு போல, எங்கேயோ எழுதி அனுப்பப்பட்ட ஸ்க்ரிப்டையும் கருத்துக்கணிப்பு என ஒளிபரப்பலாம்.
அந்த நிகழ்ச்சியிடை இடையே மேரா பாரத் மேரா பரிவார் விளம்பரங்கள் நூறை ஒளிபரப்பலாம். அதற்கு கட்டணங்கள் தேவையில்லை. சில நூறு கோடிகளுக்கு பாண்ட் வாங்கியதற்கு நிகரான சேவை.
வெறும் பத்து கோடி மட்டுமே மதிப்புடைய மதன்லால் நிறுவனம் எப்படி 377 கோடிக்கு நன்கொடை தரமுடியும் என்கிற கேள்விகளை வலைத்தளமெங்கும் நண்பர்கள் எழுப்பியிருந்தனர்.
அதேபோல, தமிழ்நாட்டின் மார்ட்டின் நிறுவனம் எப்படி இந்தியாவிலேயே அதிகமாக (நம்பர் 1) நன்கொடைகளை அளிக்க முடிந்தது என்றும்.
CBI, IT, ED ரெய்டுகள் மூலமாகத்தான் அவர்களுக்கு இத்தகைய யோசனைகளே வழங்கப்படுகின்றன. அதிகாரிகள்தான் வழங்குகிறார்கள் என்றர்த்தம் அல்ல. அவர்கள் வெறும் ட்ரோன்கள். இயக்குபவர்களுக்கேற்ப மேலே கீழே இடம் வலம் வேகம் நிதானம் எனச் செயல்படுவார்கள்.
இவ்வளவு அதிபயங்கர ஊழல்வாதிகள்தான் நம்மிடம் குடும்ப அரசியல், ஊழல் ஆட்சி என்றெல்லாம் சொறிந்துக் கொண்டு கிடப்பார்கள்.
இதெல்லாம் recorded scams.
அதானி துறைமுகங்களில்
பிடிபடும் போதைப்பொருட்கள்,
பிடிபடாத கப்பல்கள்,
பிடிபட்ட போதைப் பொருட்கள் மாயமான கொடூரங்கள்,
நாட்டை விட்டு ஓடிப்போகும் தொழிலதிபர்கள் வீசிச்சென்ற கோடிகள்,
நடுத்தர மக்களிடம் அதீத வட்டி ஆசை காண்பித்து சுருட்டும் பல்லாயிரக் கோடி சுரண்டல் முதலைகளுக்கு கட்சியில் தரும் அடைக்கலம், பாதுகாப்பு என்று தரவுகள் இல்லாமல் திரட்டப்படும் பணமும் இந்தியா முழுக்க சில இலட்சம் கோடிகள் வரும் !
இவைகளெல்லாம் நம் கண்களுக்கு முழுமையாகத் தெரிய தனியொருவனாக சுப்ரீம் கோர்ட் மட்டுமே போராட முடியாது.
வட இந்தியர்கள் மனம் வைக்க வேண்டும். மக்களிடம் இதை விளக்கி தாமரையை அவர்கள் வெறுக்கச் செய்திட வேண்டும். மேலே திடமான மாற்று ஆட்சி வர வேண்டும்.
அப்படி வரவில்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவை ஹிட்லர் ஒருவரே ஆள்வார்.
1945 ல் ஜெர்மனி எப்படி அழிந்ததோ அப்படி நம் நாடும் சீரழியும்.
அதை மீட்க குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தேவைப்படும் !!!
#bjpscams2024
#INDIAPARLIMENTELECTION2024
#போதை_கம்பெனி_பாஜக #பாகிஸ்தான்_கைக்கூலி_பாஜக #தேர்தல்_நிதி_ஊழல் #சிலிண்டர்_மானியம்_எங்கே #சீனா_கைக்கூலி_பாஜக #கோவிட்_தடுப்பூசி_ஊழல் #வசூல்_ராஜா_மோடி #VasoolRajaModi #ஊழல்_பெருச்சாளி_மோடி #ஊழல்_மன்னன்_மோடி
#தமிழ்நாடு_போராடும்_தமிழ்நாடு_வெல்லும் #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #ஸ்டாலின்தொடரட்டும்_தமிழ்நாடுவெல்லட்டும் #சங்கிங்க_வீட்டுக்கும்_நாட்டுக்கும்_கேடு #சங்கிகள்_தனிமனிதனுக்கு_வீட்டுக்கு_நாட்டுக்கு_கேடு #திராவிடமாடல் #திராவிட_பேரரசன்
#👨மோடி அரசாங்கம்