👨மோடி அரசாங்கம்
251K Posts • 867M views
Arunachalam
787 views 8 days ago
பாலஸ்தீன் குஜராத் கொலையாளிகளும், ICC யினால் தேடப்படும் குற்றவாளியுடன் ஜனநாயக நாட்டு பிரதமரின் நெருக்கமும். ஈரான், எந்த நேரத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டமான சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு வந்திறங்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பெஞ்சமின் நெத்தன்யாகு ஆரத்தழுவி வரவேற்றார். விரோதிக்கு விரோதி நண்பன் என்ற அடிப்படையில் இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள். இனப்படுகொலையாளி என்ற அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஜனநாயக நாடொன்றின் பிரதமர் கட்டிப்பிடித்து நட்பை பரிமாறிக்கொண்டார். காசாவில் உள்ள அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான உயிர்களையும், காசாவில் உள்ள வைத்தியசாலைகளுக்கு குண்டு போட்டு நோயாளிகளை கொலை செய்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கொலையாளியுடன், மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் நட்பு பாராட்டியுள்ளார். இதனை இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு என்று கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகம் சுமார் 3.7 பில்லியன் டொலர் மாத்திரமே. இது இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்த வர்த்தகமானது சிறு துளியாகும். குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடனான இந்திய வர்த்தகமானது 155 பில்லியன் டொலர். அதேநேரம் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரானுடனான வர்த்தகம் 2.5 பில்லியன் டொலர் ஆகும். இங்கே ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான வர்த்தகம் பற்றி குறிப்பிடவில்லை. நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002 குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கு அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட அல்லது தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் பல கோடிகளாகும். இன்றுவரைக்கும் அடக்குமுறைகள் அவ்வப்போது நடைபெறுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மூலம் இனவாத அரசியல் கொள்கையினாலேயே நரேந்திர மோடி தலமையிலான BJP கட்சி இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றது. பல உலக தலைவர்கள் நெத்தன்யாகுவுடன் கைகுலுக்க தயங்குகின்ற நிலையில், இந்திய பிரதமரின் மிக நெருக்கமான நட்பானது இந்தியாவில் வாழ்கின்ற இருபது கோடி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிரானது மாத்திரமல்ல, இந்தியாவை நேசிக்கின்ற உலக முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் எதிரானதாகும். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது #👨மோடி அரசாங்கம்
21 likes
15 shares
Arunachalam
814 views 8 days ago
ஈரானின் சபஹார் துறைமுகத்தை வாங்கிட்டோம். பாகிஸ்தானுக்கு மரண அடின்னு கூவிய மோ(டுமுட்)டி சங்கீ கூட்டம். ஈரான் வெளியுறவு அமைச்சர் இதற்கிடையே ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி இந்த விவகாரம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டு ஈரானின் சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது, தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அப்பாஸ் அராச்சி தெரிவித்தார். இந்த துறைமுகம் இந்தியாவுக்கு மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடனான இணைப்பை மாற்றியமைக்கக்கூடிய "தங்க வாசல்" என்றும் அவர் குறிப்பிட்டார். தங்க வாசல் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாகப் பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். சபஹார் துறைமுகத்திற்கு பட்ஜெட் ஒதுக்காதது குறித்துப் பேசிய அவர், "இது ஏமாற்றம் தான். ஈரானுக்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் கூட இது ஏமாற்றத்தையே தரும் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி ஒருமுறை முன்பு குறிப்பிட்டது போல், சபஹார் துறைமுகம் என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியை மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பாவுடனும் இணைக்கும் ஒரு முக்கியமான தங்க வாசல். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம். இது முழுமையாக மேம்படுத்தப்பட்டால் ஈரானின் வழியாக மத்திய ஆசியா, காகசஸ் மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்கும். அந்த நாடுகளை இந்தியாவுடன் இணைப்பதில் இது மிக முக்கிய பங்காற்றும். இதுவே சிறந்த போக்குவரத்து வழித்தடமாக அமையும் என நான் நினைக்கிறேன். ஒரு நாள் இந்த துறைமுகம் முழுமையாக மேம்படுத்தப்படுவதை நாம் காணலாம் என நம்புகிறேன்" என்றார். இந்தியாவுக்கு நஷ்டம் ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வந்தது. இந்தத் துறைமுகத்தால் பாகிஸ்தானைத் தொட தேவையில்லாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிற்கு நேரடி இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியும். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும் முக்கியமான போக்குவரத்து வழித்தடத்தை இது உருவாக்கும். இது இந்தியாவின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துகிறது. மேலும், இந்தத் துறைமுகம் நிலப்பரப்பில் சூழப்பட்ட மத்திய ஆசியச் சந்தைகளுக்கு வர்த்தகத்தை அதிகரிக்கிறது. பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் சீனாவின் செல்வாக்குக்கு அதிகரித்து வரும் சூழலில், அதற்குப் பதிலடியாக இந்தியாவுக்கு சபஹார் துறைமுகம் இருந்தது. இந்தத் திட்டம் பிராந்தியத்தில் இந்தியாவின் புவிசார் அரசியல் இருப்பை வலுப்படுத்துகிறது. சபஹார் திட்டம் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா 2024இல் ஒப்பந்தம் போட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் சபஹார் துறைமுக மேம்பாட்டிற்குக் கணிசமான நிதி ஒதுக்கப்படும். இருப்பினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப்போது நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாதது இதுவே முதல்முறை. கடந்த நிதியாண்டுகளில், இந்தத் திட்டத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கி வந்தது.! பொருளாதாரத் தடை கடந்த செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இருப்பினும், சபஹார் திட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஈடுபடுவதற்கு ஆறு மாதக் கால விலக்கை அமெரிக்கா வழங்கியிருந்தது. அந்த விலக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிகிறது. அதற்கு மேல் இந்தியா மேம்பாடு நடவடிக்கை எடுத்தால் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரலாம். இதன் காரணமாகவே இந்தியாவும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியுள்ளது. முன்னதாக சபஹார் தொடர்பான விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதற்கு விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராந்தீர் ஜெய்ச்வால் தெரிவித்தார். #👨மோடி அரசாங்கம்
19 likes
18 shares
Arunachalam
842 views 12 days ago
விவசாயிகள் மார்பில் குத்துகிறது மோடி அரசு . கைதட்டி ஆதரவு தெரிவிக்கிறார் எடப்ஸ் அண்ட் கம்பெனி . இது பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டேன் என மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொள்கிறார் விசிலார் . ஆயினும் … நாட்டில் என்ன நடக்கிறது இச்செய்தியை வாசிப்பீர்! மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த அணி திரள்வோம்! கிராமங்கள்தோறும் போராட்டங்களை தீவிரப்படுத்த….. ஐக்கிய விவசாயிகள் முன்னணி அழைப்பு புதுதில்லி மோடி அரசு அமெரிக்கா விடம் சரணடைந் ததை அம்பலப் படுத்த அணி திரள்வோம் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) அழைப்பு விடுத்துள் ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: வர்த்தக ஒப்பந்தம் மூலமாக மோடி அரசு அமெரிக்காவிடம் சர ணடைந்துள்ளது. அமெரிக்காவுட னான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்போது, “அமெரிக்கா விலிருந்து மூலப்பொருட்களை வாங்கினால், இந்தியாவிற்கும் பூஜ்ஜிய வரி ஏற்றுமதி வசதி கிடைக் கும்” என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அறி வித்துள்ளதற்கு ஐக்கிய விவசாயி கள் முன்னணி (எஸ்கேஎம்) கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த அறிவிப்பானது, இந்தியாவின் சுய சார்பு மற்றும் இறையாண்மையை அமெரிக்காவிடம் மோடி அரசு அடகு வைப்பதன் அப்பட்டமான உண்மையாகும். எல்லாம் பொய் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத் தில் விவசாயத் துறை சேர்க்கப்பட வில்லை என்று ஒன்றிய அரசு கூறி வந்தது. ஆனால் அமைச்சர் கோய லின் அறிவிப்பு, மோடி அரசின் கூற்று பொய் என்பதையும், மக்க ளைத் திசைதிருப்பும் முயற்சி என்ப தையும் நிரூபிக்கிறது. மோடி அரசு கையெழுத்திட்டுள்ள இந்த ‘தடை யற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs)’ இந்தியாவின் பொருளா தார காலனித்துவத்திற்கான ஒரு புதிய வரைபடமாக அமைகிறது. இந்தியாவை அமெரிக்கப் பொருட் களின் குப்பைத் தொட்டியாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காடாகவும் மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அடிமாட்டு விலை பூஜ்ஜிய வரி விகிதத்தில் கச்சா பருத்தியை இறக்குமதி செய்வது உள்நாட்டு விலையைக் குறைத்து, இந்திய பருத்தி விவசாயிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கும். 2025-ஆம் ஆண்டு காரிப் (Kharif) பரு வப் பயிர்களுக்கான கணக்கீட்டின் படி, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த C2 + 50\% சூத்தி ரப்படி (சாகுபடிச் செலவு, குடும்ப உழைப்பு, நிலத்தின் வாடகை மற்றும் முதலீட்டிற்கான வட்டி ஆகிய அனைத்தையும் உள்ளடக் கிய விரிவான செலவுடன் 50 சதவீத லாபம்) பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.10,075 ஆக இருக்க வேண்டும். ஆனால், விவசாயச் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணை யம் (சிஏசிபி), வெறும் A2 + FL அடிப்படையில் (விவசாயி நேரடி யாகச் செய்த செலவு மற்றும் குடும்ப உழைப்பின் மதிப்பு மட்டுமே) குவிண்டாலுக்கு ரூ.7,710 மட்டுமே அறிவித்துள்ளது. இது விரிவான செலவு கணக்கீட்டு முறையான C2 சூத்திரத்துடன் ஒப்பிடும்போது ரூ.2,365 குறைவு ஆகும். மோடி அரசு இந்த அடிப்படை விலையைக் கூட விவசாயிகளுக்கு உறுதி செய்யவில்லை. முறை யான கொள்முதல் வசதி இல்லாத தால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை குவிண்டாலுக்கு ரூ. 5,500 முதல் ரூ.6,500 என்ற அடி மாட்டு விலைக்கே விற்கும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று, பருத்தி மீதான 11% இறக்கு மதி வரியை ஒன்றிய அரசு நீக்கி யது. இது லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரப் பாது காப்பை மேலும் சீரழித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவிலி ருந்து பருத்தி இறக்குமதி 2024 (ஜனவரி-நவம்பர்) இல் 199.30 மில்லியன் டாலராக இருந்தது, 2025- இல் 95.5% அதிகரித்து 377.90 மில்லி யன் டாலராக உயர்ந்துள்ளது. இதற் கான காரணத்தை மோடி அரசு இது வரை மக்களுக்குத் தெரிவிக்க வில்லை. விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றச் சதி தற்போது,”உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற் கான விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கை” என்று கூறி 25 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை யை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இது உள் நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்கு எந்த உத்தியும் இல்லாமல், உண வுப் பாதுகாப்பை ஆபத்தில் தள்ளி, அமெரிக்க விவசாயிகள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்க அனும திப்பது ஆகும். அதாவது இந்திய விவசாயிகளைச் சந்தையிலிருந்து வெளியேற்றும், இந்தியப் பொரு ளாதாரம் மீதான நவீன கால னித்துவ ஆக்கிரமிப்பாகும். சுதந்திரத்திற்குத் துரோகம் அதே போல இந்தியா-அமெ ரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஆப் பிள், பருத்தி, மரக் கொட்டைகள் (Tree nuts), சிவப்பு சோளம், விதைகள், சோயாபீன் எண்ணெய், மதுபானங்கள் மற்றும் மக்காச் சோளம் சார்ந்த கால்நடைத் தீவ னங்கள் போன்றவற்றுக்கான சந்தையும் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியச் சந்தையில் அமெ ரிக்க நிறுவனங்களுக்கு ஒரு ஏக போக நிலையை உருவாக்கும். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், நியூஸிலாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவற்றுடன் கையெழுத்திடப பட்ட ஒப்பந்தங்களில் பால் பொருட்களும் சேர்க்கப்பட்டுள் ளன. இதன் மூலம் மோடி அரசு விவ சாயிகளையும், தொழிலாளர்களை யும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் முழு மையாகச் சரணடையச் செய்து நாட்டின் சுதந்திரத்திற்குத் துரோகம் இழைத்துள்ளது. அமைச்சர் பதவி விலக வேண்டும் அமெரிக்கா உடனான ஒப் பந்தத்தில் இறக்குமதி வரிகளை 30% - 150% என்பதிலிருந்து 0% ஆகக் குறைப்பதும், ஏற்றுமதி வரி களை 0% - 3% என்பதிலிருந்து 18% ஆக உயர்த்துவதும் போன்ற தீவிரக் கொள்கை மாற்றங்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரியா மல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துப் பயிர்களுக்கும் C2 + 50\% அடிப்படையில் சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காத மோடி அரசு, இப்போது விவசாயம் மற்றும் பால்வளத் துறையைப் பாதுகாத்து வந்த வரி முறையை முற்றிலுமாக ஒழித்து வருகிறது. பிப்ரவரி 12 அன்று (2026) நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மிகப்பெரிய வெற்றியைப் பெற் றும், பிரதமர் இன்னும் விழித்துக் கொண்டு தவறுகளைத் திருத்தத் தயாராக இல்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற கோரி க்கையை எஸ்கேஎம் மீண்டும் வலி யுறுத்துகிறது. மோடி அரசு அமெரிக்காவிடம் சரணடைந்ததை அம்பலப்படுத்த வும், விவசாயம், பால்வளம் மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதா ரத்தைப் பாதுகாக்கவும் கிராம அளவிலான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யு மாறு விவசாயிகளுக்கு எஸ்கேஎம் அழைப்பு விடுக்கிறது. பிப்ரவரி 24 அன்று ஹரியானா மாநிலம் குருச் சேத்திரத்தில் நடைபெறவுள்ள எஸ்கேஎம்-இன் தேசியக் குழு கூட்டம், போராட்டத்தைத் தீவிரப் படுத்துவதற்கான உறுதியான நட வடிக்கைகளை மேற்கொள்ளும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி : தீக்கதிர் . 16 /02 /26 . #👨மோடி அரசாங்கம்
17 likes
21 shares