#ஹிந்தி எதிர்ப்பு போராட்டம். பெரியாரின் பார்வை _ விடுதலையில் எழுதியது. 1965 இந்தி எதிர்ப்பில் திமுக இன்றைய ஈரானிய மக்களை போல் வெகுண்டெழுத்து ஊரை கொளுத்தி கொண்டிருந்தது, சிரியாவில் போராடும் அரசை போல அன்றைய காங்கிரஸ் அரசு இவர்களை அடக்க கடும் வேகத்தில் இருந்தது, ஏனெனில் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருந்தது
திமுக தரப்போ எதுபற்றியும் கவலைபடாமல் தங்களை விட்டால் தமிழை காக்க யாருமில்லை என பெரும் அழிவை செய்தது
தமிழ் பவுத்தர் காலத்தில் பிழைத்தது, சமணர் காலத்திலும் வாழ்ந்தது, இந்த தமிழகத்தை சுல்தான்கள் ஆளும் போதும் அது வாழ்ந்தது, இன்னும் நாயக்கர் மராட்டியர் பிரிட்டிசார் என எல்லா அந்நியர் ஆளும்போதும் அது தனித்து நின்றது
அப்படியான தமிழை நாங்கள்தான் காப்போம் என திமுக செய்தது பெரிய காமெடி, ஆனால் அதை ஊரை கொளுத்தி செய்தார்கள் பெரும் அழிவோடு செய்தார்கள் என்பது விபரீதம்
இந்த விபரீதத்தை கண்டித்து ஒரே ஒரு குரல் துணிச்சலாக எழும்பியது, அந்தகுபீர் தேசாபிமானி குரல்தான் அன்று தமிழகத்தில் உண்மையினை சொல்லி அரசை ஊக்கபடுத்தி திமுக கும்பல்களை ஒடுக்க சொன்னது
அது அய்யா ஈரோட்டு ராமசாமி நாயக்கரின் குரல் , இதோ அய்யா தன் பத்திரிகையில் எழுதிய வரிகள்
"இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (விடுதலை 26.1.1965)
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல். 2000 மாணவர்கள் ஊர்வலம். கலைந்து செல்ல கண்ணீர்ப் புகை. மாணவர்கள் கற்களை வீசினர். (விடுதலை 28.1.1965)
DSP , கான்ஸ்டபுள் 20 பேர் காயம். இராசேந்திரன் என்ற மாணவர் குண்டடிப்பட்டு மாண்டார். வி.டி.நெடுமாறன் குண்டடிப்பட்டு படுகாய முற்றதாகவும் தெரிகிறது. (விடுதலை 28.1.1965)
போலீசார் அத்து மீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே. ( சனவரி 25, 26 ஆம் நாட்களில்) சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்டனர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்.
திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை. (விடுதலை 10.2.1965)
பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் (விடுதலை 13.2.1965)
திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.
(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில் இது நடந்திருக்கின்றது )
ஆக நாட்டிலே என்ன நடக்கின்றது மக்களே
“இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம், தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்?
பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்”
இப்படியெல்லாம் சீறி எழுந்து திமுகவினரின் போராட்டத்தை கண்டித்த மானமுள்ள அறிவுள்ள இந்தியனாக அய்யா நின்றார் இன்னும் சில இடங்களில் அதாவது போராட்டம் முடியும்போது எழுதினார்
"இந்த போராட்டம் எப்படி முடிஞ்சுது, நாங்க இறங்கி திமுகழக பயலுகள எல்லாம் கொளுத்துவோம்னு சொன்ன பிறகுதான அடங்குனானுக, நாங்க இறங்கட்டுமா மோதுவோமான்னு சொன்ன அப்புறமா ஒரு பய ரோட்டுல இல்லியே, நாங்கதான இவனுகள அடக்கினோம் வெங்காயமே"
ஆக..
அந்த அய்யா மட்டும் இல்லண்ணா. . ஆதாரம் : விடுதலை நாளிதழ் & FB பிரம்ம ரிஷியார்.
#ரெங்கா! #renga-vamba!