💕குறும்புக்காரன்🐬
943 views • 2 days ago •
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #ரெங்கா! #renga-vamba! .
Experience was Life
நம் வாழ்கை என்பது அனுபவங்களின் தொடர்ச்சியே.ஒவ்வொரு கணமும் ஓரொரு அனுபவம்.ஒவ்வொரு அனுபவத்தின் போதும் ஓரொரு அனுபவிப்பவன்.
பயம் தரும் அனுபவம் நடைபெறும் போது பயப்படுபவன் என்கின்ற அனுபவிப்பவன் இருக்கிறான்.பின்பு பயம் கோபமாய் மாறுகிறது. இப்போது அனுபவிப்பவனும் கோபப் படுபவனாய் மறுக்கிறான்.
அனுபவம் சூழலை கையாள்வதற்கு ஏற்ப ஒரு உணர்வை உருவாக்குகிறது. அதற்கு ஏற்ற அனுபவிப்பவன் உருவாகிறான்.
அந்த அனுபவிப்பவன் அந்த அனுபவத்துடன் கலந்து அந்த அனுபவமாய் மாறி அந்த சூழலை எதிர்கொண்டு அந்த அனுபவத்தை கடக்க வேண்டும்.
ஒரு பாம்பை பார்த்ததும் பயம் வருகிறது.உடனே அந்த பயத்தை உபயோகித்து அந்த சூழலை எதிர் கொள்ள வேண்டும்.
பயம் வந்ததும் அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளவேண்டும்.எனக்கு பயம் வந்திருக் கிறது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.ஏன் வந்துள்ளது என்று சிந்திக்கையில் நம் எதிரில் பாம்பு இருப்பதனால் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
இப்போது இந்த சூழ்நிலை யை எதிர்கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும். பயம் என்ற உணர்வு வந்ததனால் இதை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
பயம் என்கின்ற உணர்வை ஏற்றுக் கொண்டு அது தரும் ஜாக்கிரதை உணர்வை கொண்டு அணுகும் போது நிதானமாய் நாம் செயல் பட முடியும்.
அதுவே எனக்கு பயம் வரக்கூடாது என்று அந்த உணர்வோடு போராடும் போது பதட்டம் உருவாகி நம் அணுகுமுறை தவறாகிவிடும்.
நாம் அனுபவப்பவனாய் மாறி அந்த அனுபவத்தை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்ள வேண்டியதே நம் கடமை.
அது நல்ல அனுபவம் கெட்ட அனுபவம். எனக்கு இந்த அனுபவம் பிடிக்கவில்லை. வேற மாதிரி அனுபவம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணத் தொடங்கினால் நாம் நான் என்பது வேறு இந்த அனுபவம் வேறு என்கின்ற பிரிவினை அங்கு வந்து விடுகிறது.
இந்த முரண்பாடு ஏற்படும் போது அனுபவம் அனுபவிப்பவன் இதனோடு உங்களால் இணைய முடியாது.அந்த oneness என்கின்ற ஒருமை ஏற்படாவிட்டால் உங்களால் வளர்ச்சி பெற முடியாது.
நான் என்கின்ற எண்ணம் வரும்போது அந்த அனுபவம்,அனுபவிப்பவன் என்பதின் மீது நமக்கு ஒரு விலக்கம் வந்து விடும்.
அது விருப்பு வெறுப்பு என்பதை ஏற்படுத்தி நமக்கு துன்பத்தை தந்து விடும். நல்ல தோ கெட்டதோ அதை எதிர் கொள்ள முயல வேண்டும்.
எந்த அனுபவத்தையும் ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொண்டால் தான் நாம் நம்மை செதுக்கி மேம்படுத்த முடியும்.
மாறாக இந்த அனுபவம் வேண்டாம். இதை எதிர் கொள்ள எனக்கு உடன்பாடு இல்லை என்று எண்ணத் தொடங்கினால் அந்த அனுபவத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று தோன்றும்.அதை நாம் தவிர்க்க முனைவது நமது வளர்ச்சியை நாமே தள்ளிப் போடுவது போன்றது.
இந்த எஸ்கேப்பிசம் மிகவும் தவறானது.இதை தவிர்க்க வேண்டும். நமக்கு நிகழும் ஒவ்வொரு அனுபவமும் நம் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பு.
அதை எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது முழுமையான ஆனந்தத்துடன் ஒரு குழந்தையை போல் கள்ளம் கபடம் இன்றி எளிமையாய் அணுகும் போது உங்களுக்குள் ஒரு மகிழ்வு ஏற்படும்.
இது மெல்ல மெல்ல உங்கள் இயல்பில் மாற்றத்தை கொண்டு வரும்.நாள்பட நாள்பட உங்கள் மனது பக்குவப் படுவதை நீங்கள் காண்பீர்கள்.
நீங்கள் தேர்வு எழுத பயந்து அன்று உடம்பு சரியில்லை என்று லீவு போட்டு விடுவதனால் பாஸாகி விட முடியாது.
இறைவன் என்பவன் எடப்பாடி அல்ல.அவனது ஆட்சிமுறையே வேறு.இங்கு யாராக இருந்தாலும் பரீட்சையை சந்தித்தே ஆக வேண்டும்.
தேர்வினை எதிர்கொண்டு வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்கு போக முடியும்.நோ குறுக்குவழி.
இங்கு நமது எண்ணங்களை மறைத்துக் கொள்ள முடியும்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி யாரையும் கவிழ்க்க முடியும்.
அதனால் நமது உண்மை சொரூபம் எதுவென்று தெரியாமல் நம்மிடம் ஏமாற வாய்ப்பு இருக்கிறது.நாமும் பிறரால் ஏமாற்றப் பட வாய்ப்பிருக்கிறது.
எனவே இங்கு உத்தமர்களும் அயோக்கியர்களும் ஒன்றாக கலந்து வாழ முடிகிறது.நாம் உயர்வாக எண்ணும் சிலர் எப்படி பட்டவர்கள் என்பது மேலே போனால் தான் தெரியும்.
ஆனால் மரணத்தின் பின் நிலைமையே வேறு.அங்கு எண்ணத்தை மறைக்கவே முடியாது.அங்கு மொழி என்ற ஒன்றே கிடையாது.நேரடியாக எண்ணத்தின் மூலமே தொடர்பு.
அங்கு ஜாதி மதம் மொழி என்று எந்த விதமான பிரிவும் கிடையாது.அதனால் சலுகையும் கிடையாது. எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் ஓர் குலம் தான்.
எனவே அங்கு நமது எண்ணங்களின் அடிப்படையிலேயே நாம் பிரிக்கப் படுவோம்.உயர்ந்த எண்ணங்கள் உள்ளவர்கள் அவர்களை போலவே உயர்ந்த எண்ணம் படைத்தவர்களுடன் உயர்ந்த இடத்தில இருப்பார்கள்.
தாழ்ந்த எண்ணம் உடையவர்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறு கீழ் நிலையில் அவர்களை போன்ற எண்ணம் கொண்டவர்களுடன் வாழ்வார்கள்.
இங்கு அனைத்துவிதமான எண்ணம் கொண்டவர்களும் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறோம்.ஒருவரை பற்றி மற்றொருவருக்கு தெரியாது.
எனவே நாம் உயர்நிலைக்கு செல்ல வேண்டும் எனில் நமது சிந்தனை சொல் செயல் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
நம்மை மேம்படுத்திக் கொள்ளவே நமக்கு அனுபவங்கள் வழங்கப் படுகின்றன. அத்தனையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புகள். வாய்ப்புகளை கண்டு மலர்ச்சி பெற்று அதை உபயோகித்து மேம்படுவதே நமது பிறவியின் நோக்கம்.
அதை விடுத்து நான் பண்ணின தப்புக்கு தண்டனை இது என்பது தவறான ஒன்று. ஒவ்வொரு நிமிடமும் நம்மை உயர்திக் கொள்ள வாய்ப்பு தந்து கொண்டே இருக்கிறான் அந்த கருணா மூர்த்தி.
பயன் படுத்தி பயன் பெறுவது நம் கையில் தான் இருக்கிறது.
🙏 நற்காலை வணக்கம் 🙏
4 likes
16 shares