அக்டோபர் 22, 1965 ல் தான் இந்தியாவில் கேஸ் சிலிண்டர் அறிமுகம் செய்யப்பட்டது.* அதற்கு முன்பு சமையல் எல்லாம் விறகு அடுப்பில் தான். பிறகு மண்ணெண்ணெய் அடுப்பு.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் அனேக ஹோட்டல்களில் விறகு அடுப்பு தான் இருந்தது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன? முன்பு போல் விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டியதுதானே..?
தமிழ்நாட்டில் அழிக்கப்பட வேண்டிய கருவேல மரங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கின்றன. விறகுக்கு கிராக்கி வந்தால் அந்த மரங்கள் எல்லாம் தானே அழிக்கப்பட்டு விடும்.
எல்லா சிக்கல்களுக்கும் ஒரு தீர்வு உண்டு. மாற்றி யோசிக்காமல் மாய்க்கான் போல் யோசித்தால் எந்த தொழிலும் பண்ண முடியாது.
5 ரூபாய் முட்டைக்கு ஆம்லெட் என பெயர் வைத்து 25 ரூபாய் வாங்கும் போதும்,
100 மில்லி சுடுதண்ணிக்கு காபி என பெயர் வைத்து 30 ரூபாய் வாங்கும் போதும்,
கவலைப்படாத ஓட்டல் உரிமையாளர்களின் உள்ளங்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வந்துவிட்டது என கவலைப்படுகிறதோ?
அதனால் பாரம்பரிய சமையலை சுமந்து வரும் விறகு அடுப்புக்கு நாம் மாறுவோம்.
அதெல்லாம் முடியாது ஹோட்டலை மூடியே தீருவோம் என்றால்,
சீக்கிரமாக முடிவெடுங்கள். ஒரு கரண்டி மாவை நெய் ரோஸ்ட் என சொல்லி 120 ரூபாய்க்கு வாங்கி தின்று கட்டுபடியாகவில்லை.
வெளியூர் போகின்றவர்கள் முன்பு போல் வீட்டிலிருந்து புளியோதரையை கட்டுச் சோறாக கையில் கொண்டு செல்லும் பாரம்பரியம் மீண்டும் வரட்டும்.
உணவகங்களில் கழிசடை எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி உடலை கெடுத்துக் கொள்வதை விட,
நீங்கள் ஹோட்டல்களை உடனே மூடிவிட்டால் வீட்டிலிருக்கும் உணவை உண்டு மிச்சம் மீதி இருக்கும் ஆரோக்கியத்தையாவது மக்கள் காப்பாற்றி கொள்ளட்டும்!
நடப்பதெல்லாம் நன்மைக்கே!!
#🤙Saturday Swag😎 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #😊Positive Stories📰 #📺உள்ளூர் தகவல்கள்📰