Vinoth Kumar
543 views
கௌரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் 8- வது நாளாக இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசு கட்சி பாரதிய ஜனதா கட்சி புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளைச் சார்ந்த அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வாழ்த்துரை வழங்கினார்கள். போராட்டத்திற்கு கிளைத் தலைவர் S.ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் R.விவேகானந்தன் பொருளாளர் M.நூர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்துணைத் தலைவர் E. ராஜு துணைச்செயலாளர் J.சக்தி நாராயணன் வந்தை மோகன் உட்பட 120 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தைவேலூர் மண்டல பொறுப்பாளர் D.சுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார். #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்