Arunachalam
1.3K views
18 days ago
டெல்லிக்கு அடிமையான எடப்பாடி பழனிசாமி! “இந்த தேர்தல் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் இடையிலான தேர்தல். டெல்லியின் அதிகாரத்தை எதிர்த்து தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்’’ என்று நம் கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தெரிவித்தபோது , ‘’தேர்தல் டெல்லியிலா நடைபெறுகிறது? நடப்பது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தானே?’’ என்று ஏளனம் தொனிக்கப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்படி தமிழ்நாட்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போது ஏன் டெல்லியில் அமித்ஷா வீட்டில் தவம் கிடக்கிறார் Edappadi K. Palaniswami ? அ.தி.மு.க கூட்டணியின், இல்லையில்லை பா.ஜ.க கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக பியூஷ் கோயல் தமிழ்நாடு வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று அமித்ஷாவைச் சந்திக்க டெல்லிக்கு கிளம்பிப்போனார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டில் தன் கூட்டணியில் பெரிய கட்சியின் பொதுச்செயலாளர் என்ற மரியாதையை எல்லாம் பா.ஜ.க கொடுக்கத் தயாராக இல்லை. அமித்ஷாவைச் சந்திக்க இரண்டுமணி நேரங்களுக்கும் மேலாக காத்துக்கிடந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி காத்துக்கிடந்து அமித்ஷாவை சந்தித்தும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. ‘டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் போன்றவர்களையும் சந்தித்துவிட்டுத்தான் பதில் சொல்வோம்’ என்று சொல்லிவிட்டார் அமித்ஷா. டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு ‘’தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டெல்லி பா.ஜ.கதான் தலைமை’’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முடிவாகுவதற்கு முன்பு ஐந்துமுறையும் கூட்டணி முடிவானபிறகு நான்கு முறையும் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுவரை ஒரே ஒரு பா.ஜ.க தலைவர்கூட அ.தி.மு.க தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகைக்கு வரவில்லை. இதுதான் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு உள்ள ‘மரியாதை’. ’பா.ஜ.கவுடன் கூட்டணி’ என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பதற்கு முன்பே ‘அ.தி.மு.கவுடன் கூட்டணி’ என்று அறிவித்தவர் அமித்ஷாதான். செய்தியாளர் சந்திப்பில் ஒரு வார்த்தையும் பேசாமல் எஜமான விசுவாசம் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. இப்போது யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதையும் அமித்ஷாதான் முடிவு செய்கிறார். அடுத்து வேட்பாளர்கள் பட்டியலையும் அமித்ஷாதான் முடிவு செய்யப்போகிறார். ‘டெல்லியில் அதிகாரம் குவியக்கூடாது. மாநில சுயாட்சி வேண்டும்’ என்ற அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சிப்பெயரில் வைத்துக்கொண்டு, அந்த கட்சியையே ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு அடகுவைத்திருக்கிறார் அடிமை பழனிசாமி. ‘கூட்டணியில் இருக்கும்போது டெல்லிக்கு அடிமையான பழனிசாமி, தப்பித்தவறி வென்றால் தமிழ்நாட்டுக்கான ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒப்புதல் வாங்க டெல்லிக்குத்தானே ஓடுவார்?’ என்பதுதான் தமிழ்மக்களின் கேள்வி. எனவே எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் தோற்று டெல்லியிலேயே தங்கி, அமித்ஷா வீட்டிலேயே காவலாளி வேலைபார்க்கட்டும். நாங்கள் மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தி.மு.க கூட்டணிக்குத்தான் வாக்களிக்கப்போகிறோம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள். #NDABetraysTN #DMK4TN #ADMKFails #VoteForDMK #👨மோடி அரசாங்கம்