இதெல்லாம் இவர்களுக்கு வேடிக்கையாக, பொழுது போக்காக ஆகிவிட்டது போலும்!
டிரம்பும், நெதன்யாகும் ஆடுகிற அராஜக, அத்துமீறல் ஆட்டத்தால் என்னென்ன விளைவுகளை உலகம் எதிர்கொள்ள நேருமோ..?
தானுண்டு, தன் நாடுண்டு என்று இருக்கும் ஈரான் மீது வலிந்து குண்டு மழை பொழிய வேண்டிய அவசியமே இல்லை.
கொலைவெறித்தனமான இந்தக் கொடூர தாக்குதல்கள் உலகில் மனிதகுலம் நாதியற்று போய்க் கொண்டுள்ளதோ..என கலங்க வைக்கிறது…? பள்ளிக் கூடத்தின் மீதெல்லாம் குண்டு மழை பொழிவதையும், மழலைகள் சாவதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கையறு நிலையில் இருக்கத் தான் வேண்டுமா..?
உலகின் சிறிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டுமா..?
பைத்தியக்கார பயங்கரவாதிகளை நாட்டின் தலைவர்களாக்கினால் உலகம் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதற்கு இன்றைய நிதர்சன உதாரணங்கள் டிரம்ப், நெதன்யாகு, மோடி!
2014 வரை இந்திய அரசு இஸ்ரேலின் போர்வெறியை ஆதரித்தது இல்லை. பாலஸ்தீனர்களின் விடுதலையை அங்கீகரித்தவர்களே நாம்! அமெரிக்காவை எச்சரிக்கையோடு அணுகி கெளரவமாக உறவாடிய பிரதமர்களைத் தான் இது வரை இந்தியா கண்டுள்ளது.
மோடியின் தனிப்பட்ட பாலியல் பலவீனமும், ஆர்.எஸ்.எஸ்சி இஸ்லாமிய வெறுப்புமாக இணைந்து இன்று உலக அரங்கில் சர்வதேச சமரசமற்று பயணித்துக் கொண்டிருந்த இந்தியாவின் இமேஜ் சரிந்து வருகிறது. அதிகாரத் திமிர் பிடித்த அமெரிக்க டிரம்ப்பிடம் நமது பிரதமர் மோடி அடி பணிந்து போவது ஒட்டு மொத்த இந்தியர்களையும் கூனி குறுக வைக்கிறது.
சிறிய நாடாயினும் அடிபணிய மறுக்கும் ஈரானின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது. பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து ஈரானிலும் மானுட அழித்தொழிப்புகள் அரங்கேறினால் உலகம் வேடிக்கை பார்க்காது.
சீனாவும், ரஷ்யாவும், வட கொரியாவும் இன்னும் சில நாடுகளும் சிலிர்த்தெழுந்து களம் கண்டால் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆகப் பெரிய அழிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது உலகப் போராகவும் வடிவம் கொள்ள வாய்ப்பாகிவிடும்.
என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்!
சாவித்திரி கண்ணன்
#👨மோடி அரசாங்கம்