பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
636 views
||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்தருள்வதும், முற்காலத்திலேயே திருவரங்கத்தில் சயனித்தருள்வதும், உலகப் பிரளயம் உண்டான காலத்தில் திருப்பாற்கடலில் ஆழிலையின் மீது சயனித்தருள் புரிந்ததும் ஆகிய திருவிளையாடல்களை அடியேனையன்றி வேறு எவரும் அறிய மாட்டார்கள். உலகத்திலேயே ஒருவனாக இருக்கின்ற எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனை, விண்ணுலகத் தேவர்களின் மெய்ப்பொருளாக விளங்குகின்ற எம்பெருமானை, உலகைப் படைத்த காலத்தில் நீரில் பள்ளி கொண்டருளிய எம்பெருமானை, அரும்பொருளை அந்த எம்பெருமான் திருவருளால் அடியேன் அறிந்துணர்ந்து கொண்டேன். இவ்வாறின்றி அடியேனின் சுய முயற்சியால் அறிந்து கொள்வது என்பது இயலாத ஒன்றாகும். திருமழிசைப்பிரான் திருவடிகளே ஶரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

More like this