ராமாநுஜர்
2K Posts • 850K views
ஸ்ரீ (969)🏹🚩DPTVM020508 . அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே!!! (8/11) . . . நம்மாழ்வார் : திருவாய்மொழி : இரண்டாம்பத்து: ஐந்தாந்திருமொழி: . . பாசுரம் : 3060: பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள், தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை, என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை, சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே. . பதவுரை: பொன் முடி - பொன் மயமான திருமுடியையுடையவனாய் அம் போர்ஏற்றை - அழகிய போரேறு போன்றவனாய் எம்மானை - எனக்கு நாதனாய் நால் தட தோள் - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் முடிவு ஒன்றும் இல்லாத - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் தண் துழாய் மாலையனை - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய் என் முடிவு காணாதே - என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என் உள் கலந்தானை - என்னோடு என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை நான் சொல் முடிவு காணேன் - நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன் என் சொல்வது - என்னவென்று சொல்லி புகழ்வது சொல்லீர் - நீங்களே சொல்லுங்கள். . . தெளிவுரை: . பொன் மயமான திருமுடியையுடையவனாய், . அழகிய போரேறு போன்றவனாய், . எனக்கு நாதனாய், . நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய், . தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய், . குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய், . என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை, . நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன். . என்னவென்று சொல்லி புகழ்வது ? நீங்களே சொல்லுங்கள். . . எம்பெருமானின் பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி, தன்னுடைய தாழ்ச்சியையும் இயம்பி, . “அழகு, ஆற்றல், பெருமை, பண்பு முதலியவற்றின் எல்லையாகத் திகழும் எம்பெருமான், இப்படிப்பட்ட அடியாரின் தாழ்ச்சியை பாராமல் அருள் புரிந்தது அவனுடைய நீர்மை குணத்தைக் காட்டுகிறது” என்கிறார் நம்மாழ்வார். . இது அவனுடைய பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும். . . . நம்மாழ்வார் திருவடிகளே சரணம். #ராமாநுஜர்
10 likes
15 shares
ஸ்ரீ (969)🏹🚩*வைஷ்ணவ குரு பரம்பரை* ஸ்ரீ நாத முனிகள் ( 824-924 AD ) ஸ்ரீ உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD ) ஸ்ரீ மணக்கால் நம்பி (ராமமிச்ரர்) ( 832-937AD ) ஸ்ரீ ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD ) ஸ்ரீ கூரத்தாழ்வான் (1009-1133AD) ஸ்ரீ உடையவர் (ஸ்ரீ ராமாநுஜர்) (1017-1137 AD) ஸ்ரீ முதலி ஆண்டான் (1027-1132) ஸ்ரீ எம்பார் (1021-1140) ஸ்ரீ திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD ) ஸ்ரீ அனந்தாழ்வான் ( 1055-1205 AD) ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் (1057-1157AD ) ஸ்ரீ பராசர பட்டர் ( b 1074 AD ) ஸ்ரீ எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்) (1106-1206 AD) ஸ்ரீ நஞ்சீயர் (1113-1208 AD) ஸ்ரீ நம்பிள்ளை (வரதாசார்யர்) (1147– 1252AD) ஸ்ரீ நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD ) ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD) ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை (க்ருஷ்ணபாத:) ( 1167-1264 AD ) ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் (1205-1311 AD) ஸ்ரீ வேதாந்த தேசிகன் ( வேங்கடநாதன்) (1268 – 1369 AD) ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை (ஸ்ரீசைலேசர்) (1290-1410 AD) ஸ்ரீ ஸ்வாமி மணவாள மாமுனிகள் (1370-1443 AD) ஸ்ரீ மாமுனிகள் அரங்கன் திருமுன்னிலையில் திருவாய்மொழிக்கு விரிவுரை செய்தருளிய ஆண்டு 1430 AD உடையவருக்கு மடைப்பள்ளி கைங்கர்யம் செய்துவந்த ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் என்ற ஆத்ரேய ராமாநுஜரின் வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருகர் ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்; அவரிடமே பயின்றவர். ஸ்ரீ ஸ்வாமி தேசிகனின் முதன்மைச் சீடர்கள் அவர்தம் திருக்குமாரரான ஸ்ரீ வரதாசார்யரும், ஸ்ரீ ப்ரம்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயரும்; ஸ்ரீ குமார வரதாசார்யர் ( 1316-1401AD ) ஸ்ரீ ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD ) பரகால மடம் இவரால் நிறுவப்பட்டது என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப் பின்னருளால் பெரும்பூதுர் வந்தவள்ளல் பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்பி நன்னெறியை அவர்க்குரைத்த உய்யக்கொண்டார் நாதமுனி சடகோபன் சேனை நாதன் இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே 🙏🙏ஸ்ரீஎதிராஜ பிரபந்தம்🦜🦜 #ராமாநுஜர்
7 likes
13 shares