ஸ்ரீ (969)🏹🚩DPTVM020508
.
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே!!! (8/11)
.
.
.
நம்மாழ்வார் : திருவாய்மொழி : இரண்டாம்பத்து: ஐந்தாந்திருமொழி:
.
.
பாசுரம் : 3060:
பொன்முடியம்போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள்கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.
.
பதவுரை:
பொன் முடி - பொன் மயமான திருமுடியையுடையவனாய்
அம் போர்ஏற்றை - அழகிய போரேறு போன்றவனாய்
எம்மானை - எனக்கு நாதனாய்
நால் தட தோள் - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
தன் முடிவு ஒன்றும் இல்லாத - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்
தண் துழாய் மாலையனை - குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய்
என் முடிவு காணாதே - என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்
என் உள் கலந்தானை - என்னோடு என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை
நான் சொல் முடிவு காணேன் - நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன்
என் சொல்வது - என்னவென்று சொல்லி புகழ்வது
சொல்லீர் - நீங்களே சொல்லுங்கள்.
.
.
தெளிவுரை:
.
பொன் மயமான திருமுடியையுடையவனாய்,
.
அழகிய போரேறு போன்றவனாய்,
.
எனக்கு நாதனாய்,
.
நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்,
.
தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்,
.
குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடையவனாய்,
.
என்னுடைய தாழ்ச்சியை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல்
என்னோடு கலந்தருள்புரிந்த எம்பெருமானை,
.
நான் முழுமையாக புகழ்ந்து கூறும் வழி அறியாதவனாக இருக்கின்றேன்.
.
என்னவென்று சொல்லி புகழ்வது ? நீங்களே சொல்லுங்கள்.
.
.
எம்பெருமானின் பெருமைகளை எல்லாம் எடுத்துக்கூறி,
தன்னுடைய தாழ்ச்சியையும் இயம்பி,
.
“அழகு, ஆற்றல், பெருமை, பண்பு முதலியவற்றின் எல்லையாகத் திகழும் எம்பெருமான், இப்படிப்பட்ட அடியாரின் தாழ்ச்சியை பாராமல் அருள் புரிந்தது அவனுடைய நீர்மை குணத்தைக் காட்டுகிறது” என்கிறார் நம்மாழ்வார்.
.
இது அவனுடைய பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும்.
.
.
.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
#ராமாநுஜர்