ஸ்ரீ (969)ஶ்ரீ:
ஶ்ரீ மஹாபூர்ண குரவே நம:
ஶ்ரீ மதே ராமானுஜாய நம:
*தை* மாதம் *ஹஸ்தம்* நக்க்ஷசத்திரம் இன்று
ஸ்வாமி எம்பெருமானார் சிஷ்யர்களுள் முதன்மையானவர் ஸ்வாமி *ஶ்ரீ கூரத்தாழ்வான்* அவதார திருநக்க்ஷத்திரம்.
வாழி எதிராஜன் வாழி எதிராஜன்..
*மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் "நம் கூரத்தாழ்வான்" திருநக்ஷத்ரம் தை - ஹஸ்தம் இன்று*
ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதி மஹே
யதுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்
ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே
அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்
இன்று ஜகதாசார்யர் ஸ்ரீ ராமானுஜரின் முக்யமான சீடரான கூரத்தாழ்வான் திருநக்ஷத்ரம். நம் ஆசார்யர்களில் வேறு ஒருவருக்கும் இல்லாத வைபவம் ஆழ்வானுக்கு உண்டு.
அர்வாஞ்சோ யத் பத ஸரஸிஜ த்வந்த்வம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்நா யஸ்யாந்வயம் உபகதா தேசிகா முக்திமாபு: |
ஸோயம் ராமாநுஜ முநிர் அபி ஸ்வீய முக்திம் கரஸ்தாம் யத் ஸம்பந்தாத் அமநுத கதம் வர்ண்யதே கூரநாத: II
பூர்வாச்சாரியர்கள் அருளிய மேற்கண்ட ஸ்லோகத்தின் திரண்ட கருத்து, "நம் சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட (காலத்தலால்) ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை (முக்தி) அடைந்தார்கள். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் முக்தி அடைந்தார்கள்".
ஆனால் "உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதி கொண்டிருந்தார். அப்படிப்பட்ட வைபவம் வாய்ந்த ஆழ்வானின் பெருமையை நாம் எப்படி சொல்லி முடிக்க முடியும்"
இதே கருத்தை இராமானுச நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியை கடக்கும் பெரும் புகழான்" என்று அமுதனார் தெரிவித்தார்.
"மொழியை கடக்கும் பெரும் புகழான் என்கிற சந்தையை வடமொழியில் மொழிபெயற்கும் விதமாக "வாசாம் அகோசர மஹா குண தேசிக அக்ர்ய கூராதி நாத" என்று யதிராஜ விம்சதியில் மாமுனிகளும் அருளிச் செய்தார்.
ஆக இப்படி எல்லா ஆசார்யர்களும் ஆழ்வானின் பெருமையை பேசி தலைக்கட்ட முடியாது என்றே திருவுள்ளமானார்கள்.
சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தான் வாழியே
தென்னரங்கர் சீரருளை சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு உதித்தான் வாழியே
எழில் கூரத் தாழ்வான் தன் இணையடிகள் வாழியே
பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே
மருள் விரிக்கும் முக் குறும்பை மாற்ற வந்தான் வாழியே
மயர்வறவே மெய்ஞ் ஞானம் விளங்கிடுவான் வாழியே
இருள் விரிக்கும் சிவம் எதிரிட்டு எழுத்திட்டோன் வாழியே
ஏதமற வெவ்வுயிர்க்கும் இதமளித்தோன் வாழியே
அருள் விரிக்கும் அரங்கத்தான் அடியிணைகள் வாழியே
அழகாரும் கூரத் தாழ்வான் அடியிணைகள் வாழியே
மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத் தமிழ் வாழ்ந்திடு நாள்
மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள்
எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள்
இல்லை எனச் சிவமென்றே எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள்
துட்ட குதிர்ட்டிகள் மாயிகள் வாழ்வைத் துரத்திட வந்தவர் நாள்
சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள்
அட்ட திசைக்கும் நிறைந்த புகழ் அந்தணர் வாழ கூரத் ஆழ்வான்
வந்தருளிய தையில் விளங்கிடு அத்தமது நன்னாளே - அத்தமது எனு நாளே
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
பெரிய நம்பிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
-அடியேன் கோபிநாத் ராமானுஜதாஸன் (சாம்பு)
#ராமாநுஜர்