*ஒரு நகைச்சுவை கதை*
😃😃😃😃😃😃😃😃😃
ஒருநாள் சேகர் இறந்துவிட்டான்
ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும்
'செத்தான்டா சேகரு' சொல்வோமே அந்த சேகரு தான்.....
இறந்தபின் எமலோகத்திற்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.
சித்ரகுப்தன் : மனிதா நில்... சொர்க்கத்திற்குள் போகணும்னா நீ ஒரு வார்த்தைக்கு Spelling correct ஆ சொல்லணும்.
சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?
சித்ரகுப்தன் : லவ்..
சேகர் : L O V E.
சித்ரகுப்தன்: சரியான விடை.. நீ சொர்க்கத்திற்கு போகலாம் என்று சேகரை கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின்
ஃபோன் ரிங் அடித்தது...
சித்ரகுப்தன் : எமதர்மராஜா என்னை அவசரமா கூப்பிடுகிறார். நான் திரும்பி வரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்.
சேகர் : சரிங்க சாமி...
சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது இங்கே வந்தால், நான் கேட்ட இதே கேள்வியை அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கன்னா அவங்கள நீ சொர்க்கத்துக்கு அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களை அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாதே... அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட் கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க... இதைக் கேட்டதும் சேகர் கொஞ்சம் நடுங்கிப் போயிட்டான்....
சேகர் : சரிங்க சாமி...
சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல அங்கு வந்த ஒரு பெண்ணைப் பார்த்து சேகர் அதிர்ச்சி அடைந்தான்.. காரணம் அது சேகரின் மனைவி.
சேகர்: நீ எப்படி இங்கே வந்த ?
மனைவி : உங்க பிணத்தை எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்னை ஒரு பஸ் இடிச்சிருச்சி. அதுக்கு பின்னால் நான் பார்க்கிறது இந்த இடந்தாங்க....
சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த தன் மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான் நில்.. நில்.. இங்குள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும். கரெக்டா SPELLING சொன்னா மட்டும்தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத் தான் போகணும்.
மனைவி : என்ன வார்த்தைங்க அது ?
சேகர் :
செக்கோஸ்லோவாகியா......
( சேகர் மைண்ட் வாய்ஸ் செத்தாலும் பொண்டாட்டி தொல்லை விட மாட்டேங்குதே)
😳😳😳
#💑கணவன் - மனைவி #தெரிந்து கொள்ளுங்கள் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩