மரண தண்டனை விதிக்கப்பட்டவன் மேல் முறையீடு செய்து தண்டனை குறைக்கபெறுவான்.. அல்லது மரணதண்டனைக்கு உட்படுவான்..
ஆனால் எத்தகைய குற்றமும் செய்யாமல் பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் நிலைமை? அந்த பெண் வாழ்வு முழுவதும் தனக்கு நிகழ்ந்த அநீதியை நினைத்து கண்ணீர் வடிக்க வேண்டுமா?
தண்டனைக்கு வாக்குறுதி கொடுப்பதை நிறுத்தி விட்டு தவறு நடக்கும் முன் அதை தடுக்கும் நடைமுறைகளை கண்டறிந்து அவற்றை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடுங்கள்..
போதை வஸ்துக்களை அறவே ஒழித்திட்ட சட்டம் இயற்றுங்கள்.. பள்ளிகளில் மாணாக்கர்கள் நல்வழிப்படுத்தும் நன்னெறி கல்வியை கட்டாய பாடத்திட்டமாக அறிவியுங்கள்..
செத்த பிணத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.
#📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴