Arunachalam
668 views
எதிர்த்து பேசுகிறவர்கள் முட்டாள்கள். மனநோயாளிகள். நடிகனுக்கு என்ன தெரியும். இதையெல்லாம் சொல்வது அண்ணாமலை. இவர்தான் மனநோயாளி என்று எனக்குத் தோன்றுகிறது. S Ve சேகர் அதிமுகவில் இருந்தாலும் அந்தத் தேர்தலில் ஜெயித்தார். இவரால் அரவக்குறிச்சியில் பாஜக - அதிமுக கூட்டணிக்குப் பின்னும் ஜெயிக்க முடியவில்லை. சேகர் பல பேட்டிகளிலும், கூட்டங்களிலும் தனது சேனலிலும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர். அவருக்கு உரிய மரியாதை தராமல், அவரை உபயோகித்துக் கொள்ளாமல் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைத்தவர் அண்ணாமலை. இவரை விமர்சிக்கும்அரசியல் சார்பு நடிகர்களை மனநலம் குன்றியவர் என்பார். அதையே பாஜகவை விமர்சித்தாலும் சொல்வார். அறிவில்லாதவர்கள் என்பார். "நடிகனுக்கு என்ன தெரியும்? நாடகத்துக்கு டிக்கெட் விக்கத்தான் தெரியும்" என்பார். என்னமோ நடிகன் என்பது கீழ்த்தரமான தொழில் போல. இந்துத்வாவில் செய்யும் தொழிலே தெய்வம் என்பது அவருக்கு செலக்ட்டிவ் அம்னீஷியாவில் மறந்து போகும். 24/7 தேசத்துக்கு உழைக்கும் விஷ்வகுருவை, நேர்காணலில் "நீங்க மாம்பழத்தை அப்டியே சாப்பிடுவீங்களா? கட் பண்ணி சாப்பிடுவீங்களா?" என்று அறிவார்ந்த கேள்வி கேட்கும் அக்‌ஷய் குமார் என்று எல்லா நடிகர்களையும் நினைக்கிறாரா? கட்சியில் சேர்ந்த அடுத்தநாளே நடிகர் - நடிகைகளுக்கு (கட்சிக்கு நெடுங்காலம் உழைத்தவர்களை மறந்து) இவரது கட்சி சட்டமன்ற, பாராளுமன்ற சீட் கொடுக்கும். அதை எல்லாம் மறந்து விடுவார். பிரதமர் நடிகர், நடிகைகளுடன் மீட்டிங் போடுவது, பொங்கல் கொண்டாடுவது என்று நாட்டுக்காக உழைக்கும் போது வாயில் பொங்கல் அடக்கி வைத்தது போல கப்சிப் என்று இருப்பார். இவர் எடப்பாடியை ஒரு நாள் கேவலமாக ஏசுவார். பணம் கொடுத்து முதல்வர் பதவி வாங்கியவர் என்பார். அதிமுக நான்காவது இடம்தான் (2026 சட்டமன்றத் தேர்தலில்) என்பார். அதிமுகவை விட பாஜக அதிக சதவீதம் ஓட்டு பெறும் "எழுதி வச்சிக்கங்க" என்று சவடால் விடுவார். அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்பார். ஆனால் கடைசிவரை வெளியிடமாட்டார். ஜெயலலிதா குற்றவாளி என்று பேட்டி தருவார். அதனால் கூட்டணியை உடைத்து விடுவார். "நான் சொன்னது தவறில்லை" என்பார். பின்னர் அதே ஜெயலலிதா படத்தைப் போட்டு இவரது கட்சி ஓட்டு கேட்கும். அதே ஜெயலலிதாவைப் பாராட்டி இவர் மெச்சிப் பாராட்டும் பிரதமர் மோடி ஜி பேசுவார். அங்கே மேடையில் அவர் பேசுவதை புளகாங்கிதத்துடன் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். ஒரு ஊழல்வாதியை பாராட்டுவதை ஏற்கவில்லை என்று "நேர்மையாக" கட்சியை விட்டு வெளியே வரமாட்டார். அதே மீட்டிங்கில் "பிரதமர் சொன்னது தவறு. ஜெயலலிதா ஊழல் பேர்வழி. தண்டிக்கப்பட்ட குற்றவாளி" என்று சொல்ல துணிவில்லாமல் இருப்பார். வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமில்லாமல் மீண்டும் விரலை ஆட்டி ஆட்டி அண்ணன் எடப்பாடி என்பார். இப்போது அதிமுக கூட்டணியில் அசெம்பிளி சீட் கொடுத்தால் போட்டியிடுவார். அதிமுகவுடைய ஓட்டு வேண்டுவார். பாஜக கட்சி கல்லாவில் இருந்து அளவற்ற பணம் செலவழிக்கும். எங்கிருந்து எப்படி வந்தது என்று கவலைப்படாத நேர்மையின் சிகரம். ஒரு முறை தகரப்பெட்டியுடன் கல்லூரி வாசலில் நின்ற ஏழை விவசாயி மகன் என்பார். தமிழக அரசின் ரிசர்வேஷனில் படித்து முன்னுக்கு வருவார். பின்னர் தன் தந்தைக்கு பல ஏக்கர் விவசாய நிலம் இருந்தது என்பார். பல கோடிக்கு சொத்து வாங்குவார். அதுவும் எந்த பெரிய வேலையும் செய்யாமல். கேட்டால் வங்கிக்கடன் என்பார். Income Proof இல்லாமல், influence இல்லாமல் எந்த வங்கி இவருக்கு பல கோடி கடன் எந்த ஆதாரத்தில், நம்பிக்கையில் கொடுத்தது என்பது ஶ்ரீராமருக்கே வெளிச்சம். வெட்கம், மானம், சூடு, சொரணை, நேர்மை, நாகரீகம் இல்லாத அண்ணாமலையின் சவடால், வெத்து வேட்டுகளில் மதிமயங்கி தேவதூதன், இளைஞர்களின் நம்பிக்கை, தமிழ்நாட்டை சீரமைக்க வந்த மாமணி என்ற அளவுக்கு படித்த அப்பாவி அறிவாளிகள் கொண்டாடுவார்கள். அதே சமயத்தில் நாடாளுமன்றத்தில் நாகரீகமாக தன் கருத்துகளை எடுத்து வைத்த, எந்த இடத்திலும் பொதுவில் நாகரீகம் குறைவாக பேசாத கமலை "உளறல்" என்பார்கள். பதிலுரை என்ற பெயரில் எதிர்க்கட்சிகள், உயிருடன் இருப்பவர், இறந்தவர் என அனைவரையும் இகழ்ந்து பேசும் மோடியின் பேச்சை கர்ஜனை என்பார்கள். அந்தப் பேச்சில் ஒரு மண்ணும் இருக்காது. கமல்ஹாசன் என்ன பட்ஜெட்டா தாக்கல் செய்தார்? அவரது முதல் பேச்சில் அரசியமைப்பை மாற்றும் பேச்சையா பேசுவார்? இரண்டு மணி நேரம் பேசும் மோடி ஜியின் பேச்சில் ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது. எக்காளம், கேனத்தனமான ஜோக்குகள் இவைகளைத் தவிர ஒன்றும் இருக்காது. அடர்த்தியான பத்து நிமிடப் பேச்சு பேச திறமையும், அறிவும் வேண்டும். அப்படிப்பட்ட பேச்சை கேலி செய்யாமல் இருக்கும் பண்பு வேண்டும். பாஜக ஆதரவாளர்களுக்கும் பண்புக்கும் வெகுதூரம். Hypocrisy? அது டன் கணக்கில். #👨மோடி அரசாங்கம்