ஆர்.எஸ்.எஸ். – உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு
செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அளவை பற்றி மட்டுமே மோடி கூறியிருக்கிறார். அதன் தன்மை பற்றிய உண்மையை ஒருபோதும் கூறுவதில்லை. இதிலிருந்தே அது ஒரு கேடான அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாம் நினைப்பது போல சாதாரண அமைப்பல்ல. இன்று உலகிலுள்ள பாசிச அமைப்புகளிலேயே மிகப் பெரியதும், மிக வலிமையானதும், நூறாண்டு கால அமைப்பு பலமும், இரண்டாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய சித்தாந்தப் பின்புலமும் கொண்ட கொடிய பாசிச பயங்கரவாத அமைப்பாகும்....
#👨மோடி அரசாங்கம்