Arunachalam
589 views
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்று சொல்லவார்கள். இந்த எல்லை என்பது நல்லவனவாக இருத்தாலும், நல்லவர்களாகவே இருந்தாலும் பொருந்தும். 2014 தேர்தலிலிருந்து இன்றுவரை காங்கிரஸ் கட்சி பங்கெடுத்த எல்லா தேர்தல்களிலும் பின்னடைவைச் சந்தித்தது மட்டுமல்லாமல் தான் சார்ந்த கூட்டணி தோல்வியுறுவதற்கும் காங்கிரஸ் கட்சி தான் இதுவரையிலும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. இது ஒரு சாதாரண அரசியல்வாதிக்குக்கூடத் தெரியும் . நாமெல்லாம் திரு. ராகுல் காந்தி நல்லவர் , வல்லவர் என்று பேசி வருகிறோம். அவர் நல்லவராகவே இருக்கலாம். இதுவரையிலான தேர்தல் தோல்விகளுக்கு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தன் கட்சிக்காரர்கள்தான் காரணம் என்பதை அவர் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை . இப்போதுகூடப் பாருங்கள் திரு. ராகுல்காந்திக்கு நெருக்கமானவர் என்று சொல்லிக் கொண்டு ஒரு தறுதலை திமுகவை கடுமையாகச் சாடுவதையே தன் பிழைப்பாக வைத்துக் கொண்டு செயல்படுகிறது. திமுகவால் மட்டுமே வெற்றிபெற்ற இன்னொரு பாராளுமன்ற உருப்பினரோ திமுகவுக்கே சவால்விட்டுக்கொண்டு திரிகிறது. இது ராகுல் அவர்களின் கவனத்திற்கு போகாமல் இருக்காது. ஆனால் திரு. ராகுல் அவர்கள் மௌனம் காத்து வருகிறார் . இந்த மௌனமே அவர்களின் வாழ்நாள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கப் போகிறது . திரு. ராகுல் அவர்களும் சேர்ந்துகொண்டு பழைய பங்காளிப் பாசத்தில் ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு துணைபோகிறாரோ என்று சந்தேகப்படத் தோன்றுகிறது. இப்படி இருக்காது என நான் நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் தலைவர்தானே கட்சியின் கருத்தைத் தெரிவிக்கும் உரிமையைப் பெற்றவர். கூட்டணி உறவை முறித்துக்கொள்ளும் விதமாக பேசி கண்ட கழுதைகள் எல்லாம் திமுகவை சாடும்போது திமுக தொண்டர்கள் கொதித்தெழ மாட்டார்களா! ஒருவேளை தேர்தல் வேலை பார்க்க காங்கிரசில் தொண்டர்கள் இருந்து அவர்கள் சுறுசுறுப்பாக தேர்தல் வேலை பார்ப்பவர்களாக இருந்தால்கூட சற்று பொறுமை காக்கலாம். செலவு செய்வதிலிருந்து தேர்தலில் கடுமையாக வேலை பார்த்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பது வரை திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்ட திமுக தொண்டர்கள்தான் அவ்வளவு வேலையையும் செய்கிறார்கள் . இப்படி இருக்க தொண்டர்களே இல்லாமல் ஊருக்கு நான்கு தலைவர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நான்கு தலைவர்களில் இரண்டு தலைவர்கள் பைத்தியக்காரத்தனத்தனமாக பேசி வருவதென்பது தேர்தலுக்கு மட்டுமல்ல நீண்டகால நட்பையும் பாதிக்கும். இப்படியான பைத்தியக்காரத்தனம் தேர்தல் வெற்றியைப் பாதிக்காதா? ஒரு இனப் படுகொலையையே நடத்த ஒத்திகையை நடத்திவரும் ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்ட ஒரு பின்னடைவை தராதா? இதோடு நிறுத்திக் கொள்வதுதான் பேசிவரும் காங்கிரஸ் கட்சிக்கார்ர்களுக்கு நல்லது . இல்லையென்றால் ஆர்எஸ்எஸ் ன் ஸ்லீப்பர் செல்கள் என்கிற கசப்பான உண்மையை நாங்களே வெளிக்கொணர வேண்டியிருக்கும். தமிழ்நாட்டை ,மக்களை ,தாய் தமிழை எப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்திடமிருத்து காப்பாற்றிக்கொள்வது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ,திமுகவின் தொண்டர்களும் மக்களின் துணையோடு பார்த்துக்கொள்வார்கள். அதேசமயம் காங்கிரசுக் கட்சியினரின் இப்படியான பேச்சுகளும் நடவடிக்கைகளும் இந்திய ஒன்றியத்திற்கே நல்லதல்ல. உழைத்துப் பழக்கமில்லாத தமிழக காங்கிரஸ் கட்சி தேவையற்று குரைப்பதை குறைத்துக்கொண்டால் குரைப்பவர்களுக்கு நல்லது. இல்லையெனில் சாலையில் பாஜக அடையாளத்தோடு போகும் பாஜகவினரை தமிழ்நாட்டு மக்கள் நாற்றமடிக்கும் மலக் கழிவைப் பார்ப்பதுபோல பார்க்கும் பார்வையை காங்கிரஸ் கட்சியினரான உங்களையும் பார்க்கும் நிலையை நீங்களே ஏற்படுத்தி விடாதீர்கள். தோழமையோடு… ஆ. சிங்கராயர் தலைவர் திராவிட நட்புக் கழகம் . #👨மோடி அரசாங்கம்