messi
736 views
11 days ago
#மார்ச்_21 உலக வன நாள் இன்று. உலகின் வன வளத்தை பாதுகாக்கவும், அதனைப் பற்றிய விழிப்புணர்வை உலகளவில் உணர்த்தவுமென, ஐக்கிய நாடுகள் பொது அவை, 2012ம் ஆண்டில், மார்ச் 21ம் தேதியை உலக வன நாளாக கொண்டாடத் தீர்மானித்தது. வெப்பமண்டலக் காடுகள், உலகில் வாழும் ஐம்பது விழுக்காட்டு உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன. உலக நிலப்பரப்பில் 30 விழுக்காட்டு அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் தாவர வகைகள் உள்ளன. ஆயினும், தற்போது காடுகள் பல வழிகளில் அழிக்கப்படுவதால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் ஏறத்தாழ 24 விழுக்காட்டுப் பகுதி, காடுகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 17.59 விழுக்காட்டு பகுதியில் காடுகள் அமைந்துள்ளன. இந்தியாவில் உள்ள தாவரங்களில் மூன்றில் ஒரு பகுதி தமிழக வனங்களில் உள்ளன. வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம்! #life #lifes