இதில் 15 கவிதைகள் எழுதி இருக்கேன்
👇🏿👇🏿👇🏿👇🏿
கண்ணீர்
..........
நிம்மதியை தேடினேன்
கிடைக்கும் என்று நம்பிக்கையில்
கண்ணிர் பரிசளித்தது...
நாணல்
..........
கன்னம் சிவக்க
நாணல் நான் கண்டேன்
என்னை ரசிக்கையிலே...
என்னவள்
..............
மனதில் பதிந்தவள்
நிம்மதியே பறித்து சென்றவளை
மறுபடியும் காண்பேனா...
காதல்
......
கண்களை சிமிட்டாதடி
போதை ஏற்றும் விழிகளில்
அடிமையானது மனம்...
தோழன்
....,...
தோழனே கலங்காதே
கண்ணீர் துளிகள் விலைவுயர்ந்தது
காலம் உணர்த்தும்..
மாது
........
பூவுக்குள் வாசமுண்டு
பெண்ணுக்குள் மது உண்டு
சுவைத்தால் போதைவுண்டு...
காகிதம்
............
காகிதமும் காவியமாகும்
கண்ணா உந்தன் காதலால்
கவிதையும் இனிக்கிறது...
பிரிவு
............
பிரிந்து செல்லாதே
என்னுயிர் எடுத்துக் கொண்டு
ரணமாகி போவேனடி...
அன்பு
............
அன்பும் ரணமாகும்
அவள் காதல் பொய்யாகும்போது
கண்ணீரும் கசக்கிறது...
காதல்
.........
இதயம் துடிக்கிறது
பெண்ணே உன்னருகில் வந்தால்
மின்சாரம் பாய்கிறாதே...
காதல் மழை
........
குடையின்றி நனைகிறேன்
காதல் மழையில் அன்பே
உன்னை நினைத்து...
நானும் நீயும்
...........
மழையில் நனைந்தேன்
உன்னை மனதில் சுமந்துக்கொண்டு
உன்னுடன் நான்...
அழகி
...........
ஆசையாக பூச்சூடிட
அவள் கூந்தலில் நான்
பாவையவள் வேக்கத்தில்...
கனவு
........
கனவில் நனைகிறேன்
தூரிகையின் வெளிச்சத்தில் நானுறங்க
மரக்கிளையும் மெத்தையானது...
தாயன்பு
........
இன்பங்கள் கண்டதில்லை
தாய் அன்பு கிடைத்ததில்லை
அனாதைக்கு முகவரியேது
எம். அமுதா
#என் காதல் கவிதை