Arunachalam
667 views
2 days ago
கரண் தாபர்: உங்களின் 'இரு மொழிக் கொள்கை' என்கிற வறட்டுப் பிடிவாதத்தால், ஒன்றிய அரசின் ₹ 2000 கோடி பள்ளிக்கல்வி நிதியை அநியாயமாக இழக்கிறீர்களே?! நீங்க செய்வது சரியா?" பழனிவேல் தியாகராஜன்: "என்ன மாதிரியான கேள்வி இது.? எப்படி நீங்கள் இப்படியொரு கேள்வியை என்னை பார்த்து கேட்கிறீர்கள்.? ஓர் உதாரணமாக, நான் பல்லாயிரம் கோடி ₹ முதல் போட்டு நடத்துகிற என் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமான தொழிலை நடத்திக் கொண்டு வருகிறேன். திடீரென்று ஒரு திருடன் உள்ளே புகுந்து என் தலையில் துப்பாக்கி வைத்து அழுத்தி, 'நான் சொல்ற மாதிரி பிசினஸ் டீலிங் முடி...இல்லைன்னா... 2000 கோடி கொடு'...ன்னு சட்ட விரோதமாக என்னை பிளாக்மெயில் பண்ணி மிரட்டிக்கிட்டு நிக்கிறான். நீங்களோ, அந்த கிரிமினலை எந்த கேள்வியும் கேட்காமல், அவனை தடுத்து விரட்டவோ, பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவோ, எந்த முயற்சியும் எடுக்காமல் அவன் மீது சிறு கோபம் கூட கொள்ளாமல் என்னிடம் வந்து,"அந்த சட்டவிரோத பிளாக்மெயில்க்கு நீங்க சம்மதிச்சா என்ன? எதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடித்து ₹2000 கோடியை வீணாய் இழக்கப் போறீங்க?"ன்னு... பிளாக்மெயிலருக்கு ஆதரவாக எனக்கு பாடம் நடத்தி கேள்வி கேட்கிறீங்களே... இது சரியா.? நியாயமா..? என்ற பழனிவேல் தியாகராஜனின் பதில் இணையத்தை சுற்றி வருகிறது... Rajkumar Narasinghan Rajkumar Microbe #படித்ததில்_பிடித்தது #நம்_வரி #நம்_உரிமை #வேண்டாம்_மும்மொழி #👨மோடி அரசாங்கம்