Arunachalam
623 views
மஹாசிவராத்திரி கொண்டாடணும்னா நம்ம ஊர்ல இல்லாத இடமா? அமைதியா சாமி கும்பிடணுமா... அழகா மருதமலை முருகன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். இல்ல, "எனக்கு விடிய விடிய முழிப்பு வரணும், கொண்டாட்டமா இருக்கணும்" அப்படின்னு ஆசைப்பட்டா, தெருவுக்குத் தெரு நம்ம விநாயகர் கோவில்கள் இருக்கு. அங்க போனா சூடான சுண்டலும், சக்கரைப் பொங்கலும் பிரசாதமா வந்துகிட்டே இருக்கும்! நம்ம ஊர் கோவில்கள்ல பெட்ரோல் செலவைத் தவிர ஒரு பைசா செலவு இல்லாம, மனநிம்மதியோட சிவராத்திரியைக் கழிக்க முடியும். அதை விட்டுட்டு, எதுக்குயா ₹50,000 பணத்தைக் கொட்டிக் கொடுத்து அந்த ஆசிரமத்துக்குப் போறீங்க? அங்க போறதுக்கு எதுக்கு அவ்வளவு ஆர்வம்? அந்த ஆளு மேல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், புகார்கள்னு இவ்வளவு இருந்தும், இன்னும் அவரை ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு புரியவே மாட்டேங்குது. பக்திங்கிறது மனசு சம்பந்தப்பட்டது, அதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய "கவர்மெண்ட் பட்ஜெட்" செலவு? காசு கொடுத்து வாங்குறதுக்கு அது ஒன்றும் வியாபாரம் இல்லையே! #👨மோடி அரசாங்கம்