||श्री:||ஸ்ரீ (969)
#ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
பனியால் சூழ்ந்திருக்கின்ற இமயமலையும், பரந்து பெரிதாக விளங்கும் ஆகாயமும், காற்றும் அடங்கும்படியாக எங்கும் பரந்து நிறைந்திருக்கின்ற பரமனாகிய எம்பெருமான் திருமால் நம்மைச் சூழ்ந்து துன்புறுத்தும் பிறவி என்னும் நரகம் இனியும் அவ்வாறு துன்புறுத்தாமல் நம்மை பாதுகாத்துக் காப்பாற்றும் பொருட்டு,
நம் கண்முன்னே தோன்றும்படியாகத் திருவவதாரம் செய்தருள் புரிகின்றான்.
அத்தகைய எம்பெருமான் ஸ்ரீகண்ணபிரான் குதிரை வடிவில் வந்த கேசி என்னும் அசுரனின் வாயைப் பிளந்து அழித்தவனன்றோ !
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏