*இயற்கையின் செல்வம் திருப்திதான்.*
சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் மோசமானவை ஒரு போதும் நிகழாது.
முற்றிலும் உடைந்திருக்கும் போது உங்களால் சிரிக்க முடிந்தால் அடுத்த முறை உங்களை உடைக்க எதுவுமில்லை
நன்றியுணர்வு என்பது பிறரின் அணுகுமுறை எவ்வாறு என்பதைப் பொறுத்தே வெளிப்படுகிறது
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று உங்களை யாராவது சொல்கிறார்களா இதைக் கொஞ்சம் படிங்க
வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத்
தகுந்த மாதிரி
எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.
ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில்.
தலைமை ஆசிரியருக்குக்
கோபம் வந்து விட்டது.
இப்பள்ளியில் பத்து வருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சு கிட்டிருந்தியான்னு
கோபமாக திட்டினார்.
அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.
அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான். உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக மூடினான்.
அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
அதன் பெயர் இயர் மஃப்
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.
ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.
அச்சமயம் முதல் உலகப்போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர்மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார்.
போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார்
அவர்தான் செஸ்டர் கீரின்வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.
ஆகவே உங்களை யாராவது
இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று சொன்னால், ஆமா நான் படிக்க லாயக்கில்லை ஆனால் சாதிக்க லாயக்கு என்று சொல்லிவிட்டு சமயோசிதமாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
ஒரு ரூபாயை நாலு ரூபாய் ஆக்கும் தொழில் திறமை உனக்கு இருந்தால் கடன் வாங்கு. அந்த ஒரு ரூபாய் இருபத்தைந்து காசாக ஆகிவிடுமென்றால், அந்த இருபத்தைந்து காசை மூட்டைத் தூக்கியாவது சம்பாதி.
மிகக் குறைந்த செல்வத்தைக் கொண்டு எவன் திருப்தி அடைகிறானோ அவன் தான் முதன்மையான செல்வந்தன். ஏனெனில் இயற்கையின் செல்வம் திருப்திதான்.
ஆயிரம் ரூபாயில் ஆனந்தம் கொண்டவரும் உண்டு. பத்தாயிரம் ரூபாய் பத்தாது என்று சொன்னவரும் உண்டு. நீங்கள் எடுக்கும்
முடிவில் தான் உள்ளது.
ஏமாற்றி பிழைப்பது, புத்திசாலித்தனம் ஆகிவிட்டதால், நேர்மையாக வாழ்பவன் பிழைக்க தெரியாதவன் ஆகிவிட்டான்
ஒருவருடன் உன், விருப்பங்கள் கூட, அளவாக இருக்கட்டும், நாளை விலக நேரிடலாம், வெறுப்புகள் கூட, அளவாக இருக்கட்டும், நாளை பழக நேரிடலாம்
காலம் காட்டிக் கொடுக்கும் வரை, சிலர் தங்கள், முகமூடியை கழட்டுவதில்லை, சூழ்நிலை மாறும்போதுதான் அவர்களின், முகங்கள் மட்டுமல்ல, வார்த்தைகள் கூட மாறும்
பணத்தைப் பார்த்துக் கொடு
உணவை பார்க்காமல் கொடு
ஏனெனில் அடுத்தவனின்
பசியை உன்னால் பார்க்கவோ அறியவோ முடியாது
ஒருவரின் பின்னால் பேசும் வார்த்தைகள் அனைத்தும் பேசுபவர்களின் காலத்தையும் நேரத்தையும் விரயமாக்குகிறார்கள் என்பதை அறியாதவர்கள்
#🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை