#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், (26.03.2026) அன்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட வேங்கிக்கால் நோதாஜி நகரில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய ஒட்டுவில்லைகளை எரிவாயு உருளையில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.