வரலாற்றில் இன்று #மார்ச்_31, 1889: பிரெஞ்ச் நாட்டின் தலை நகரான பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது. இது பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் திகதி தொடக்கவிழா நடைபெற்று,
இக் கோபுரம், , 300மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 2 கோடியே 10 இலட்சம் பவுண்ட் நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவேயாகும்.
இக் கோபுரம், ஐரோப்பாவின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். கடந்த ஆண்டுவரை சுமார் 33 கோடி பார்வையாளர்கள் இதனைக் காண வருகை தந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
#life #lifes