ல.செந்தில் ராஜ்
4.5K views
6 days ago
சிவபெருமான் ஏன் மங்கலக்கடவுள்?? இறைவன் படைத்த உலகத்திலை மிகவும் அமங்கலமாக கருதப்படுவது இறப்பு ( மரணம்) ஆகும். அந்த மரணமே இல்லாத பெருங்கடவுள் சிவபெருமான் மாத்திரமேயாகும். பிறப்பு இறப்பு இல்லாத ஒருவனாலேயே பிறவித்தொடர்சியை அறுக்க முடியும். ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்றும். பிறப்பிலி என்றும் பிறவாயாக்கைப்பெரியோன் என்றும் சிவபெருமானைச்சுட்டுவது இதனாலேயாகும். "தானந்தம் இல்லான்" என்றும் "தாயுமிலி தந்தையிலி தான் தனியன்" என்றும் மணிவாசகர் குழைவார். மரணமெனும் அமங்கலமில்லாத முத்தியெனும் பேரின்பத்தை வழங்கக்கூடிய மங்கலக்கடவுள் என்று சொல்லப்படக்கூடிய ஒரே கடவுள் சிவபெருமான் மாத்திரமே. 🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்