Rationalist
324 views
வி.புலிகளின் மீதான இந்திய அரசின் தடையை எதிர்த்து அய்யா வைகோ அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இம்மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய நீதிமன்றங்களின் கேலிக்கூத்தை இந்த வழக்கு எளிமையாக விளக்கும். 2013ம் ஆண்டில் வி.பு மீதான தடை நீட்டிப்பு ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இந்த மனுவை எதிர்த்து அய்யா.வைகோ ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். வி.பு இயக்கத்தவர், ஆதரவாளர், அனுதாபி என எவரும் இந்த தடையாணைக்கு எதிராக வாதிடலாம் எனும் வகையில் தடை ஆணை மீதான விசாரணைக்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. '..நான் வி.பு தீவிர வாழ்நாள் ஆதரவாளன் என்பதால் ரிட் மனுவை தாக்கல் செய்கிறேன்..' என வழக்கை 2013ல் பதிவு செய்திருந்தார். 2014ம் ஆண்டு தடை நீட்டிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வி.பு மீதான தடை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது. தனி ஆணையம் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித ஆதாரங்களையும் கணக்கில் எடுக்காமல், உரிய சட்ட விளக்கங்களை கொடுக்காமல் விசாரணை நடத்தப்பட்டு வி.பு மீதான தடை நீட்டிக்கப்படும். வி.பு மீதான தடைக்கு மிக முக்கிய காரணியாக இந்திய அரசால் முன்வைக்கப்பட்டது என்பது ராஜீவ் வழக்கு அல்ல. ஏனெனில் 1992ல் ராஜீவ் வழக்கு விசாரணை முடியவில்லை என்பதால் வி.பு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் இருந்தது. வி.பு மீதான தடைக்கு பொய்யான காரணத்தை பார்ப்பனர்கள் கட்டமைத்தனர். அதாவது '...வி.பு இந்தியாவிற்குள்ளாக இருக்கும் தமிழ்நாட்டையும் பிரித்து ஈ..ழத்தோடு இணைத்துகொள்ள திட்டமிடுகின்றனர், இதற்காக போர் புரிகின்றனர்,.. ஆகையால், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் தடை செய்ய வேண்டும்..' என..' வாதத்தை கட்டியெழுப்பினர். இதை வலுப்படுத்த தொடர்ந்து கட்டுரைகளை குருமூர்த்தியின் குருநாதர் சோ ராமசாமி எழுதித்தள்ளினார். இதை சு.சாமி உள்ளிட்ட 'பார்ப்பன கடப்பாரைகள்' எழுதியதை ஆதாரமாக வைத்து வழக்குகள் புனையப்பட்டன. பொய் வழக்குகள் புனையப்பட்டு தமிழர்கள் கைதாவார்கள், பொய்யாக செய்திகள் எழுதப்படும், அவை வாதத்திற்கு எடுக்கப்படும். இப்படியாக 2014 வரையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது. வி.பு தடை செய்யப்பட்டதால், அவர்கள் தரப்பில் இருந்து ஒருவரும் நேரடியாக விசாரணை ஆணையத்திற்கு வர இயலாமல் தடுக்கப்படுவார்கள். இதை முன்வைத்து வி.பு நேரடியாக தனது தடைக்கு எதிராக வழக்கு நடத்தவில்லை என்பதை காரணம் காட்டி, வி.பு ஆதரவாளர்கள் மனுவை கணக்கில் எடுக்காமல் தடை நீட்டிக்கப்படும்.. இதை நடைமுறைப்படுத்த தடைமீதான விசாரணைக்கு சற்று முன்பாக தமிழ்நாட்டில் சில உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு பொய் வழக்கு போடப்படும். ஈழத்தமிழர்களும் கைதாவார்கள். சிறப்பு முகாம் இதற்காகவே வலுப்பெற செய்யப்பட்டது. இந்த தடையை காரணம் காட்டி பெரியாரிய தோழர்கள், ஈழ ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். முத்த தலைவர்கள் அய்யா வைகோ, பழ.நெடுமாறன், கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டோர் தடா, பொடா வழக்குகளில் நீண்டகாலம் சிறைப்பட்டனர். 2014 வரையில் இப்படியாக இரு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தபப்ட்ட வழக்குகள், அதன்பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீட்டிப்பு என மாற்றினர். இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து அய்யா வைகோ தாக்கல் செய்த ரிட் மனு 13 ஆண்டுகளுக்கு பின்னர் இம்மாதம் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மூன்று முறை விசாரணைக்கு நீதிமன்றம் கூடியது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒன்றிய மோடி அரசு வி.பு மீதான தடையை நீட்டிக்க வேண்டும், இந்த வழக்கை நடத்த அய்யா வைகோ அவர்களுக்கு சட்டரீதியான வலு இல்லை என்பதாக முன்வைத்தார். 2013-14கால தடை ஆணையில் வி.பு ஆதரவாளர்கள் (supporters, sympathiser) வழக்கில் பங்குபெற்று தடையை எதிர்க்கலாம் என குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காட்டி '...நான் வி.பு தீவிர ஆதரவாளன், வி.பு ஆதரித்ததற்காக 18 மாதங்கள் சிறைபப்ட்டிருக்கிறேன், சர்வதேச மன்றங்களில் வி.புலிகளுக்காக உரையாற்றி இருக்கிறேன், தனித்தமி..ழீழம் வேண்டி பொதுவாக்கெடுப்பு கோரி உள்ளேன் இதே கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. ஐ.நா அவை இலங்கையின் குற்றம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டது...' போன்ற விவரங்களை அடுக்கினார். பின்னர் "..தடைக்கு காரணமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாட்டை பிரிக்க வேண்டுமென இந்திய அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையல்ல, இதற்கான ஆதாரம் எதையும் இந்திய அரசு சொல்லவில்லை. ஆனால் வி.பு இப்படியான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இந்த தடையின் அடிப்படை இந்த பொய் குற்றச்சாட்டில் தான் உள்ளது. ஆகவே இதை அம்பலப்படுத்தினால் தடை நீக்கமென்பது சாத்தியமாகுமென்பது மட்டுமல்ல, இந்த குற்றச்சாட்டில் தமிழ்நாடு என குறிப்பிடப்படுவதால், தமிழ்நாட்டை சார்ந்த எனக்கு இதற்கு பதிலளிக்கும் பொறுப்புண்டு என்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்..' என்றார். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் திருமதி அனிதா சுமந்த் அவர்கள்..' ... நீங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையாக இருக்கலாம், ஆனால் இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் maintainability இருக்கிறதா..' எனக்கேட்டார்்.. . 'இந்த தடை 2014ல் கொண்டுவரப்பட்டு 2019, 2024 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது..ஆகவே காரணங்கள் அப்படியே உள்ளதால்.இந்த வழக்கை விசாரிக்கலாம்' என அய்யா வைகோ வாதத்தை முன்வைத்தார். '... வி.பு மீதான தடை 2013-14ல் கொடுக்கப்பட்ட உத்தரவை தற்போது காரணமாக வைத்து தற்போது வழக்கு விசாரணை செய்ய இயலாது. ஏனெனில் 2019,2024 ஆகிய ஆண்டுகளில் புதிய தடையாணைகள் பிறப்பிக்கப்பட்டதால், 2014 ம் ஆண்டு தடையாணை காலாவதியாகிவிட்டது. இவ்வாறு காலாவதியாகிய ஆணையின் மீது விசாரணை நடத்த இயலாததால், இந்த வ்ழக்கை நிதிமன்றம் தள்ளுபடி செய்கிறது...' என்று சொல்லி அய்யா வைகோ அவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தார். இந்திய நீதிமன்றத்தையும், மோடி அரசின் வழக்கறிஞரையும் பார்த்து எள்ளலான புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு வெளியேறினார் அதாவது 2013ல் போடப்பட்ட வழக்கை 13 ஆண்டுகாலம் கழித்து விசாரணைக்கு எடுத்துவிட்டு, காலதாமதம் ஆகியதால் காலாவதியாகிவிட்டதை சுட்டிக்காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. "உயிரை காத்திடுங்கள்" என ஒருவர் நீதிமன்றத்தை நாடினால், அவர் சாகும்வரை காத்திருந்துவிட்டு, அவர் இறந்த பின்னர், ' வழக்கு தொடுத்தவர் இறந்துவிட்டார் ஆகவே வழக்கிற்கு முகாந்திரம் இல்லை' எனச் சொல்லி நீதியை காக்கும் வழிமுறையை இந்திய நீதிமன்றங்கள் திறம்பட செய்கின்றன. இதே நேரத்தில், தீபம் ஏற்றுவதற்கு பலமுறை தடை செய்யபப்ட்ட வழக்கை தூசிதட்டி எடுத்து, பொய்யான ஒருவரை பக்தர் என சொல்லி வழக்கை பதிந்து, உடனே விசாரணைக்கு எடுத்து, ஆதாரங்களை புறம்தள்ளி, புராணங்களையும், பொய்களையும் சாட்சியமாக்கி நேரடி கள ஆய்வு செய்ததாக நாடகமாடி, கலவரம் செய்பவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுத்து நீதி வழங்குவதாக நாடகம் செய்வது பார்ப்பன கடப்பாரைகளுக்கு எளிமையானது. பார்ப்பன கடப்பாரையை தூக்குவேன் என்பவனெல்லாம் தனது பாலியல் வழக்கிற்காக ஆயிரம் தொண்டர்களை திரட்டி கொண்டாடி, இதுதான் தமிழ்த்தேசியமென கொக்கரிக்கும் கோமாளிகளையும் நாம் பார்க்கிறோம். வி.பு இடம் சோறு தின்னவன், சாப்பிட்ட நன்றிக்கடனுக்காக கூட வழக்கு நடத்தவோ, போராடவோ முன்வரவில்லை. இவனை போராளியென கொண்டாடி ஒரு தண்டச்சோறு கூட்டம் அலைகிறது. போலிகளின் பின்னே தமிழினம் சிக்கியுள்ளதை மீட்டாக வேண்டும். பார்ப்பன கடப்பாரைகள் இடிக்க விரும்புவது திராவிடத்தை மட்டுமல்ல, போராளி தமிழ்த்தேசத்தையே என்பதை நேற்றய வழக்கின் போக்கு மீண்டும்எடுத்து சொல்லியது. வி.பு தடைக்கு எதிராக மக்களை, மாணவர்களை திரட்டி மீண்டும் போராட்ட களத்திற்கு வருவோம் என்று நீதிமன்ற வாயிலில் அய்யா வைகோ உறுதிபட தெரிவித்தார். அவரது அயராத முயற்சிக்கு துணையாக மே17 இயக்கம் இயங்கும். வி.பு மீதான நேர்மையற்ற தடையை உடைக்கும் பொறுப்பு தமிழ்நாட்டு தமிழர்களுக்கு உண்டு. இப்பொறுப்பில் கட்சி கடந்து செயலாற்றுவோம் இந்த வழக்கின் விசாரணைக்காக மதிமுக வழக்கறிஞர் அணி அயராது உழைத்தது. இந்த வழக்கிற்காக தமிழ்நாட்டின் பலபகுதிகளில் இருந்து மதிமுக தோழர்கள் பங்கெடுத்தனர். ஈரோட்டிலிருந்து தோழர் பொன்னையன். வே அவர்களும் பங்கெடுத்தார். உடன் மே17 இயக்கத் தோழர்கள் சார்பாக பங்கெடுத்தோம். தமிழர்களின் தாகம் தமி.ழீ.ழ தாயகம். #🚨கற்றது அரசியல் ✌️ # தமிழீழம் #வைகோ #தோழர் திருமுருகன் காந்தி #தமிழ்த்தேசியம்