#வாயால் வடை சுடுவது என்றால் என்ன???
புளியங்குடி பக்கத்திலேயே ஒரு கிராமம் இருக்கிறது அந்த கிராமத்தில் உள்ள நண்பர்கள் வெளிநாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் குவைத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்..
எங்க ஊரை சேர்ந்தவர் நபரும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபரும் ரொம்பவும் மாமா மச்சான் உறவு முறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பழக்க வழக்கம் இருந்தது..
#அண்ணே எப்போ ஊருக்கு வந்தாலும் என் வீட்டுக்கு கண்டிப்பா நீங்க வரவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்தவர் உரிமையுடன் சொல்லி இருக்கிறார்..
என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர் தற்செயலாக அந்த ஊர் அருகில் உள்ள
ஊருக்கு ஒரு வேலை விஷயமாக போயி இருக்கிறார். அப்போது நம்ம கூட வெளிநாட்டில் இருந்தவன் இந்த ஊரில் தான் இருக்கிறன் அவனை பார்த்துட்டு போலாமே என்று என்று நினைத்தார் அப்போது போன் வசதி இல்லாத காலம் வீட்டை விசாரித்து வீட்டுக்கு சென்று விட்டார்.
.
அவர் சென்ற நேரம் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு வீட்டில் இருந்தார்.
வீட்டுக்கு சென்றவுடன் சரியான உபசரிப்பு.. அண்ணே இந்த தம்பி நினைப்பு இப்பதான் உங்களுக்கு வந்ததா??? என்று கேட்டார் அப்போது மதியம் ஒரு மணி இருக்கும் நம்ம ஆளுக்கு சரியான பசி வேறு... இவ்வளவு உபசரிப்பு இருக்கிறதே சரி சாப்பிட சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அண்ணே சாப்பிடுங்கள் என்று சொன்னார்
நம்ம ஆளு ஒரு பேச்சு இல்லை வேண்டும் என்ற சொல்ல உடனே நீங்க எல்லாம் பெரிய ஆளு துரை நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா??? என்று பொசுக்கென்று சொல்லிவிட்டார்.. .நம்மாளு என்னடா சாப்பிட சொன்னா ஒரு பெயருக்கு வேண்டாம் என்று சொன்ன இப்படி சொல்லி விட்டானே என்று நினைத்து இனிமேல் இந்த வீட்டில் எப்படி சாப்பிட முடியும் என்று நினைத்து சரி தம்பி கிளம்பிவிட்டார்..,. இதற்குப் பெயர் தான் வாயால் வடை சுடுவது..
இன்னொன்று என் கூட வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு அண்ணாச்சி வேலை செய்கிறார்... கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக குடும்பத்துடன் இங்கே வசித்து வருகிறார்கள்
.
இவருக்கும் நல்ல பழக்க வழக்கம் உண்டு அப்போது ஒரு சமயம் ஒவ்வொரு வீட்டுக்கு போயிருக்கிறார் அண்ணே வாங்க காபி போடட்டுமா?? என்று கேட்டிருக்கிறார் இவரும் சரி பிள்ள போடு
என்று சொல்லிவிட்டார் சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போகவில்லையாம்😃😃 பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி
அந்த அண்ணாச்சியும் சரி காப்பி போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார் போடவே இல்லை... கடைசியில் கிளம்பிவிட்டார் நான் போயிட்டு வரேன் பிள்ள என்று சொல்லும்போது அண்ணன் ஒருவாய் பச்ச தண்ணி கூட சாப்பிட போறீங்க என்று பரிதாபமாக சொல்லி இருக்கிறார்..
இதுவும் வாயால் வடை சுடுவது தான்..
#⭐விஜய் தொலைக்காட்சி #⭐விஜய் தொலைக்காட்சி #😎கொரியன் டிராமா #😎கொரியன் டிராமா #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes