முன்பெல்லாம் கூட்டு #குடும்பமாக வாழ்வார்கள்.
வீட்டின் மூத்தவர்களான
#அப்பத்தா, ஆத்தா, அய்யாமை, அவ்வா,ஆச்சி, பாட்டி, தன் பேரன் பேத்திகளை காலில் படுக்க போட்டு நல்லா குளிப்பாட்டி மூக்கு பிடித்து விட்டு, தலையை உருட்டி விட்டு. நெத்தியை பிடித்து விட்டு. காதில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு, தொப்புளில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு. இரண்டு கையும் பிடித்து மேல்நோக்கி தூக்கி, காலை பிடித்து கீழ்நோக்கி தூக்கி குளிப்பாட்டி விட்டு தண்ணி எல்லாம் துடைத்து எடுத்து
பிள்ளைக்கு சாம்பிராணி போட்டு தன் மகளிடமோ மருமகளிடமோ #பேரன் #பேத்தியைகொடுத்து இந்த பசிஅமர்த்து என்று சொல்லி கொடுப்பார்கள்..
இதெல்லாம் எதற்காக என்று கேட்டால்
தலையை நல்லா உருட்டி விட்டால் உருண்டையாக தலை வரும், மூக்கை பிடித்து விட்டால் சப்ப மூக்கு இருக்காது நீண்ட மூக்காக இருக்கும். நெற்றியைப் பிடித்து விடுதல் அகல நெத்தியாக இருக்கும். கையைப் பிடித்து மேலே தூக்குவதும் காலை பிடித்து கீழ்நோக்கி தூக்குவதும் பயமும் அறியக்கூடாது என்பதற்காக.. செய்வார்கள்...
இப்பல்லாம் யாரும் கூட்டு குடும்பமாக வாழ்வதில்லை எல்லோரும் தனி குடும்பத்தாக தான் வாழ்கிறார்கள்
இப்போதெல்லாம் யார் இந்த மாதிரி குளிப்பாட்டுகிறார்கள்....
#முதியோர்கள் என்பது ஒரு பொக்கிஷம் போன்ற அந்த பொக்கிஷத்தை நாம் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்...
வருத்தமளிக்கிறது...
#💞Feel My Love💖 #💑கணவன் - மனைவி #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #❤️எங்கேயும் காதல்