கண்ணன்
ShareChat
click to see wallet page
@kongundr
kongundr
கண்ணன்
@kongundr
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
கள்ளக்காதல் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் ஆண் தான்… திருமணம் ஆன ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணிடம் ஏன் செல்கிறான் என்றால் அதுக்கு 99% காரணம் பாலியல் ஆசையில் தான்… ஆனால் ஒரு பெண் வேறு ஒருவனை நாடுகிறார் என்றால் அது முழுக்க முழுக்க பாலியல் தேவைக்கு அன்று…பெண்கள் (90%) பாலியல் ஆசைகளுக்காக வேறு ஒரு ஆணிடம் செல்வதில்லை.. ஒவ்வொரு பெண்ணின் உலகம் வேறு. அந்த உலகத்தை அவன் கணவன் தான் புரிந்துக் கொள்ள வேண்டும்… பெண்ணின் உலகத்தைப் புரிந்துக் கொ்ள்ளாத ஆண்களால் தான் பெரும்பாலான பெண்கள், தம்மைப் புரிந்துக் கொள்ளும் அல்லது புரிந்துக் கொண்டதாக நடிக்கும் ஆணின் பக்கம் சாய்கிறார்கள். சமீபத்தில் நான் ஒரு குறும்படம் பார்த்தேன் ஆண் விபச்சாரம் செய்யும் ஒரு ஆண் ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டுக்குச் செல்கிறான். அது ஒரு ஆடம்பரமான வீடு. அற்புதமான வசதி. விலையுயர்ந்த பட்டு புடவை மற்றும் நகைகளை அணிந்த அந்தப் பெண்மணி அவனைப் புன்னகையுடன் வரவேற்கிறார். வேறு எதும் அவனிடம் பேசவில்லை. சாப்பிட வாங்க என்று சொல்லி பெரிய வாழை இலையில் அவள் கைகளால் சமைத்த வித விதமான உணவுகளைப் பரிமாறி சிறு குழந்தைப் போல் ரசித்து ஒவ்வொரு உணவும் எப்படி இருக்கு என்று சாப்பிட்டு முடிக்கும் வரை அவனை கேட்டுக் கொண்டே இருக்கிறாள். அவன் சாப்பிட்டு முடித்த உடன் அவனிடம் பணத்தைக் கொடுத்து நீ உடனே சென்று விடு என்று கூறினாள். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அவன் ஆச்சரியத்துடன் கேட்கிறான்… அதற்கு அவள் கூறிய பதில்.. "எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆனால் என் கணவருக்கு என் கையால் சமைத்து அவர் ரசித்துப் பரிமாறும் பாக்கியம் எனக்கு இதுவரை அமையவில்லை.. பாதி நா‌ள் வெளியூர். மீதி நாள் எதாவது ஒரு நிகழ்ச்சி. அப்படியே வீட்டில் சாப்பிட்டாலும் ஏனோ ஒரு அவசரத்தில் பாதி தின்றும் திங்காமல் கிளம்பி விடுவார். அதனால் தான் உன்னை அழைத்தேன். உன் வடிவில் என் கணவர் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்த திருப்தி எனக்கு என்று அவள் கூறினாள். ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பெரும் காதலும், தன்னைப் பாராட்ட மாட்டாரா என்ற எதிர்பார்ப்பும், தன் அழகை ரசிக்க மாட்டாரா என்ற ஆவலும் மனதில் கனன்றுக் கொண்டிருக்கிறது. தீப்பிழம்பாய் இருக்கும் மனதிற்கு யாராவது ஆறுதல் என்ற நீர் ஊற்றி……. "அணைக்கும்" போது அப்பெண் சூரியனை கண்ட அல்லி போல் தடம் மாறுகிறாள். நான் படித்ததில் பிடித்தது √ #✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
✍️Quotes - ஆடை அவிழ்த்த a { பின்னும் ( a { 08 வெட்கம் தொலைந்த பின்னும் a న a மேனி முழுவதும் ரசித்த பின்பும் a a న காமம் தீர்ந்த பின்பும் [ ருவரை மனம் 6@ a இன்னும் 9|885ف ~ நேசித்தால் ( a அதுவே உண்மையான 85/86. n న [ 0 { n ஆடை அவிழ்த்த a { பின்னும் ( a { 08 வெட்கம் தொலைந்த பின்னும் a న a மேனி முழுவதும் ரசித்த பின்பும் a a న காமம் தீர்ந்த பின்பும் [ ருவரை மனம் 6@ a இன்னும் 9|885ف ~ நேசித்தால் ( a அதுவே உண்மையான 85/86. n న [ 0 { n - ShareChat
கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா? நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத் தெரிவதில்லை. இந்தச் சிறிய மணி ஓசைக்குள் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோமா... கோவிலுக்குள் நுழையும்போது நமது மனம் ஆயிரக்கணக்கான கவலைகளிலும், சிந்தனைகளிலும் சிதறி இருக்கும். மணியின் கூர்மையான ஓசை, சிதறி இருக்கும் மனதை ஒரு புள்ளியில் குவித்து, தற்போது நடக்கும் நிகழ்வில் உங்களை நிலைநிறுத்துகிறது. இந்த மனநிலைதான் தியானத்திற்கும், இறை வழிபாட்டிற்கும் மிக அவசியமானது. நவீன உளவியலில் இதை Attention Reset அல்லது Mindfulness Trigger என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சிதறி ஓடிய கவனத்தை ஒரே புள்ளியில் திரட்டும் ஒரு எளிய வழி. பாரம்பரிய கோவில் மணிகள் பெரும்பாலும் செம்பு மற்றும் தகரம் கலந்த Bell Metal அல்லது Bronze போன்ற உலோகங்களால் செய்யப்பட்டவை. இந்த உலோகங்கள் நீடித்த ஒலியை உண்டாக்கும் தன்மை கொண்டவை. அந்த ஒலி சில விநாடிகள் நீடிப்பதால், அதைக் கவனித்துக் கேட்பதன் மூலம் மூளையில் உள்ள சிந்தனைகளை கட்டுப்படுத்தி, ஒரு அமைதியான நிலைக்கு உங்களைக் கொண்டு செல்கிறது. இது தியானம் அல்லது வழிபாட்டுக்கு மனதை தயார் செய்ய உதவுகிறது. மணியோசையின் அதிர்வு நமது நரம்பு மண்டலத்தை (Nervous System) அமைதிப்படுத்துகிறது. ஒருமுறை ஓங்கி அடித்து, அந்த ஓசை மெல்ல மெல்லக் குறைந்து மறைவதை நீங்கள் கூர்ந்து கவனித்தால், உங்கள் மன அழுத்தம் பெருமளவு குறைவதை நீங்களே உணரலாம். மேலும், இது இதயத் துடிப்பு மற்றும் மூச்சு வேகத்தை சற்றே சமநிலைப்படுத்த உதவுகிறது. மணி அடிக்கும்போது கவனிக்க வேண்டியவை: மணியை மிக மெதுவாகவோ அல்லது விளையாட்டாகவோ தட்டக் கூடாது. ஒருமுறை பலமாக அடித்து, அதன் அந்தப் பிணைப்பை (Vibration) உங்கள் உடல் உணர வேண்டும். மணி ஓசை முழுமையாக அடங்கும் வரை சில நொடிகள் அமைதியாக நின்று அந்தத் தருணத்தை அனுபவிப்பது சிறப்பு. இனி நீங்கள் கோவிலுக்குச் செல்லும்போது, மணி அடிப்பதை ஏதோ ஒரு சடங்காகக் கருதாமல், அது உங்கள் உடலையும் மனதையும் தயார் செய்யும் ஒரு ஹீலிங் முறை என்பதை உணர்ந்து செய்யுங்கள். நமது கலாச்சாரம் என்பது மூடநம்பிக்கை அல்ல, அது வாழ்வியலோடு கலந்த அறிவியல். எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். 🙏 #💪Motivational Quotes #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
💪Motivational Quotes - ShareChat
#உதிர்ந்த_பூ.. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தேன். விதி விளையாடிவிட்டது.. தந்தையின் கவுரவத்துக்காக முகம் தெரியாத ஒருவனுக்கு திருமணம் முடித்து வைத்தார்கள். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கூட சரியாக வாழவில்லை. பிறந்து வீட்டுக்கு வந்து விட்டேன். அவன் குடிகாரனும் அல்ல குடிகாரன் கூட போதை தெளிந்தவுடன் தன் மனைவிடம் அன்பாகவும் பாசமாகவும் இருப்பான். ஆனால் எனக்கு வாய்த்த கணவன் ஒரு சந்தேகப் பேரொளி. காயத்துக்கு மருந்து போடும் புருஷனை தான் மனைவிக்கு பிடிக்கும். காயப்படுத்தி விட்டு காயத்தை குத்திக் கொண்டு இருந்தால் இந்த மனைவிக்குத் தான் பிடிக்கும் அதனாலதான் வந்துவிட்டேன் என் தாய் வீட்டுக்கு... என் தந்தையிடம் கண்ணீர் விட்டு அழுதேன் என்ன செய்வது சமாளித்து வாழ வேண்டும் என்று சொல்லிவிட்டார்.. ஒரு மாதம் வீட்டில் இருந்தேன் என் உறவினர்கள் என்னை மூளை சலவை செய்து அழைத்துக் கொண்டு என் கணவர் வீட்டில் சேர்த்து விட்டார்கள்... ஒரு மாத காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. பழைய குருடி கதவைத் திருடி போல வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டது.. ஒரு நாள் தெருவில் மல்லிகை பூ வந்தது நான் வாங்கி தலையில் வைத்துக் கொண்டேன். இப்போது பூ வைத்து யாரை பார்க்க போகிறாய்? என்று கேட்டான் என் கணவன் தலையில் வைத்த பூவை தூக்கி எரிந்து விட்டேன் அதற்குப் பிறகு பூ வைக்கவே மறந்து விட்டேன் 😭.. ஒரு நாள் நல்ல புடவை கட்டினேன் நல்ல புடவை கட்டி யாரை பார்க்க போற என்று கேட்டான். எனக்கு கோபம் வந்துவிட்டது இனிமேல் இவன் கூட ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்... . மூன்று மாதம் கழித்து ஊர் பெரியவர்களை அழைத்துக் கொண்டு என்னை கூப்பிட வந்தான் நான் பேசியதெல்லாம் தவறுதான் என்று சொன்னான். ஊர் பெரியவர்கள் அவன் செய்தது தவறு என்று ஏற்றுக் கொண்டான் இனிமேல் அவன் தவறு செய்தால் நாங்க இருக்கோம் என்று சொல்லி திரும்பவும் வாழ வேண்டும் என்று சொன்னார்கள் நான் முடியவே முடியாது என்று சொன்னேன்.. என்னுடைய தகப்பனாரும் ஊர் பெரியவர்கள் வந்து சொல்கிறார்கள் நீ போக வேண்டும் என்று சொன்னார் சரி நான் போகிறேன் ஆனால் நாளை காலை பிணமாக தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டேன்.. உன்னை பிணமாக பார்க்க எனக்கு விருப்பமில்லை உன் விருப்பப்படி இங்கே இரு என்று சொல்லிவிட்டார் வந்த பெரியவர்களும் போயிட்டார்கள் அதற்கு பிறகு ஒரு தீர்வு கிடைத்தது என் வாழ்க்கையில் இருந்து விவகாரத்து பெற்றேன்.. தகப்பன் வீட்டில் சந்தோஷமாக வாழவில்லை என்றாலும் நிம்மதியாக வாழ்ந்து வந்தேன்.. நல்ல புடவை கட்டுனேன் தலையில் பூ வைத்தேன் யாரும் எதுவும் சொல்ல முடியாது.. என் தகப்பனாரிடம் வாழ வேண்டி பிள்ளையை வீட்டில் வைத்துப் பார்க்க கூடாது இரண்டாவது திருமணம் முடித்து என்று சொன்னார்கள்... என்னுடைய தகப்பனாரும் தெரிந்த நபர்களிடம் சொன்னார் தெரிந்தவர்களும் ஏற்கனவே திருமணம் முடிந்து விவகாரத்தான ஒருவரை அழைத்து வீட்டுக்கு வந்தார்கள். நானும் வந்தவர்களை வரவேற்றேன் யாரோ அப்பாவை தேடி வந்திருக்கிறார் என்று வெளியே போன எங்க அப்பா வந்தார் என்ன விசேஷம் என்று கேட்டேன் உனக்கு இரண்டாவது திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று சொன்னார் அதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்றார்... நான் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். திரும்பவும் நான் என் நிம்மதியை இழக்க வேண்டுமா? எனக்கு திருமணமே வேண்டாம் என்னுடைய தம்பி தங்கைகள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லா இருந்தால் போதும் நீயும் அம்மாவும் இருக்கும் வரை என்னை பார்த்துக் கொள்வீர்கள் அதன் பிறகு தம்பி என்னை பார்த்துக் கொள்வான் தங்கை இருக்கிறாள் தங்கை பிள்ளைகளும் என்னை கவனத்திற்கு கொள்வார்கள் என்று சொன்னேன். வந்தவர்கள் வெளியே போய் விட்டார்கள் அதற்கு பிறகு இரண்டாவது திருமணத்திற்கு யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை.. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஆனால் சில சமயங்களில் நமக்கென்று ஒரு பிள்ளை இருந்தால் நல்லா இருக்குமோ? என்று தோன்றும். தம்பி பிள்ளையும் தங்கச்சி புள்ளையும் வளர்த்தாலும் ஒரு சில நேரங்களில் அவர்கள் செயலால் கண் கலங்கி விடுகிறது.... எல்லோருக்கும் சொல்ல வருவது என்னவென்றால் கண்டிப்பாக இரண்டாவது திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். #✍️Quotes #🤔புதிய சிந்தனைகள் #🚹உளவியல் சிந்தனை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
✍️Quotes - பணம் ருந்தால் 66 நீங்களா 99 6160[ ஆச்சர்யமாக கேட்பதும் 8 அதுவே பணம் ouounuo 66 ஓ நீயா 92 ருந்தால் , என்று கேவலமாக பார்ப்பதும் தான் உலகம் 8 பணம் ருந்தால் 66 நீங்களா 99 6160[ ஆச்சர்யமாக கேட்பதும் 8 அதுவே பணம் ouounuo 66 ஓ நீயா 92 ருந்தால் , என்று கேவலமாக பார்ப்பதும் தான் உலகம் 8 - ShareChat
#வாயால் வடை சுடுவது என்றால் என்ன??? புளியங்குடி பக்கத்திலேயே ஒரு கிராமம் இருக்கிறது அந்த கிராமத்தில் உள்ள நண்பர்கள் வெளிநாட்டில் அதிகம் இருக்கிறார்கள். அதிலும் குவைத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்.. எங்க ஊரை சேர்ந்தவர் நபரும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நபரும் ரொம்பவும் மாமா மச்சான் உறவு முறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பழக்க வழக்கம் இருந்தது.. #அண்ணே எப்போ ஊருக்கு வந்தாலும் என் வீட்டுக்கு கண்டிப்பா நீங்க வரவேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்தவர் உரிமையுடன் சொல்லி இருக்கிறார்.. என்னுடைய கிராமத்தை சேர்ந்தவர் தற்செயலாக அந்த ஊர் அருகில் உள்ள ஊருக்கு ஒரு வேலை விஷயமாக போயி இருக்கிறார். அப்போது நம்ம கூட வெளிநாட்டில் இருந்தவன் இந்த ஊரில் தான் இருக்கிறன் அவனை பார்த்துட்டு போலாமே என்று என்று நினைத்தார் அப்போது போன் வசதி இல்லாத காலம் வீட்டை விசாரித்து வீட்டுக்கு சென்று விட்டார். . அவர் சென்ற நேரம் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோடு வீட்டில் இருந்தார். வீட்டுக்கு சென்றவுடன் சரியான உபசரிப்பு.. அண்ணே இந்த தம்பி நினைப்பு இப்பதான் உங்களுக்கு வந்ததா??? என்று கேட்டார் அப்போது மதியம் ஒரு மணி இருக்கும் நம்ம ஆளுக்கு சரியான பசி வேறு... இவ்வளவு உபசரிப்பு இருக்கிறதே சரி சாப்பிட சொல்லுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அண்ணே சாப்பிடுங்கள் என்று சொன்னார் நம்ம ஆளு ஒரு பேச்சு இல்லை வேண்டும் என்ற சொல்ல உடனே நீங்க எல்லாம் பெரிய ஆளு துரை நம்ம வீட்டுல சாப்பிடுவீங்களா??? என்று பொசுக்கென்று சொல்லிவிட்டார்.. .நம்மாளு என்னடா சாப்பிட சொன்னா ஒரு பெயருக்கு வேண்டாம் என்று சொன்ன இப்படி சொல்லி விட்டானே என்று நினைத்து இனிமேல் இந்த வீட்டில் எப்படி சாப்பிட முடியும் என்று நினைத்து சரி தம்பி கிளம்பிவிட்டார்..,. இதற்குப் பெயர் தான் வாயால் வடை சுடுவது.. இன்னொன்று என் கூட வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு அண்ணாச்சி வேலை செய்கிறார்... கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக குடும்பத்துடன் இங்கே வசித்து வருகிறார்கள் . இவருக்கும் நல்ல பழக்க வழக்கம் உண்டு அப்போது ஒரு சமயம் ஒவ்வொரு வீட்டுக்கு போயிருக்கிறார் அண்ணே வாங்க காபி போடட்டுமா?? என்று கேட்டிருக்கிறார் இவரும் சரி பிள்ள போடு என்று சொல்லிவிட்டார் சொல்லிவிட்டு கிச்சன் பக்கம் போகவில்லையாம்😃😃 பேசிக் கொண்டே இருந்திருக்கிறார் அந்தப் பெண்மணி அந்த அண்ணாச்சியும் சரி காப்பி போடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறார் போடவே இல்லை... கடைசியில் கிளம்பிவிட்டார் நான் போயிட்டு வரேன் பிள்ள என்று சொல்லும்போது அண்ணன் ஒருவாய் பச்ச தண்ணி கூட சாப்பிட போறீங்க என்று பரிதாபமாக சொல்லி இருக்கிறார்.. இதுவும் வாயால் வடை சுடுவது தான்.. #⭐விஜய் தொலைக்காட்சி #⭐விஜய் தொலைக்காட்சி #😎கொரியன் டிராமா #😎கொரியன் டிராமா #🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள் #✍️Quotes
⭐விஜய் தொலைக்காட்சி - ShareChat
முன்பெல்லாம் கூட்டு #குடும்பமாக வாழ்வார்கள். வீட்டின் மூத்தவர்களான #அப்பத்தா, ஆத்தா, அய்யாமை, அவ்வா,ஆச்சி, பாட்டி, தன் பேரன் பேத்திகளை காலில் படுக்க போட்டு நல்லா குளிப்பாட்டி மூக்கு பிடித்து விட்டு, தலையை உருட்டி விட்டு. நெத்தியை பிடித்து விட்டு. காதில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு, தொப்புளில் இருக்கும் தண்ணியை ஊதி விட்டு. இரண்டு கையும் பிடித்து மேல்நோக்கி தூக்கி, காலை பிடித்து கீழ்நோக்கி தூக்கி குளிப்பாட்டி விட்டு தண்ணி எல்லாம் துடைத்து எடுத்து பிள்ளைக்கு சாம்பிராணி போட்டு தன் மகளிடமோ மருமகளிடமோ #பேரன் #பேத்தியைகொடுத்து இந்த பசிஅமர்த்து என்று சொல்லி கொடுப்பார்கள்.. இதெல்லாம் எதற்காக என்று கேட்டால் தலையை நல்லா உருட்டி விட்டால் உருண்டையாக தலை வரும், மூக்கை பிடித்து விட்டால் சப்ப மூக்கு இருக்காது நீண்ட மூக்காக இருக்கும். நெற்றியைப் பிடித்து விடுதல் அகல நெத்தியாக இருக்கும். கையைப் பிடித்து மேலே தூக்குவதும் காலை பிடித்து கீழ்நோக்கி தூக்குவதும் பயமும் அறியக்கூடாது என்பதற்காக.. செய்வார்கள்... இப்பல்லாம் யாரும் கூட்டு குடும்பமாக வாழ்வதில்லை எல்லோரும் தனி குடும்பத்தாக தான் வாழ்கிறார்கள் இப்போதெல்லாம் யார் இந்த மாதிரி குளிப்பாட்டுகிறார்கள்.... #முதியோர்கள் என்பது ஒரு பொக்கிஷம் போன்ற அந்த பொக்கிஷத்தை நாம் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்... வருத்தமளிக்கிறது... #💞Feel My Love💖 #💑கணவன் - மனைவி #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💘Love Quotes & Videos #❤️எங்கேயும் காதல்
💞Feel My Love💖 - ShareChat
#❤️எங்கேயும் காதல் #💘Love Quotes & Videos #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் - மனைவி #💞Feel My Love💖
❤️எங்கேயும் காதல் - ShareChat
00:55
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💞Feel My Love💖 #💘Love Quotes & Videos #👩‍❤️‍👨Long Distance Relationship #❤️எங்கேயும் காதல்
💖காதல் ஸ்டேட்டஸ்🥰 - ShareChat
00:35
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #📺ஆஹா கல்யாணம்💖 #💑கணவன் மனைவி காதல்💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் - மனைவி
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ShareChat
00:39
#💑கணவன் - மனைவி #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🌹ஈரமான ரோஜாவே 2 #📺ஆஹா கல்யாணம்💖 #⭐விஜய் தொலைக்காட்சி
💑கணவன் - மனைவி - ShareChat
00:10
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💑கணவன் - மனைவி #💑என் காதல் கணவா💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் மனைவி காதல்💞
😍எமோஷனல் ஸ்டேட்டஸ் - ShareChat
00:00