#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💑கணவன் - மனைவி #💑என் காதல் கணவா💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் மனைவி காதல்💞
#💑கணவன் மனைவி காதல்💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑என் காதல் கணவா💞 #💑கணவன் - மனைவி #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💑கணவன் - மனைவி #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #💑கணவன் - மனைவி #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💑கணவன் - மனைவி #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
#முகநூல் பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்....
இங்கே முகநூலிற்க்கு ஆண்கள் வருவது குறிப்பாக எந்த பெணுடனும் சரசம் கொள்ளவோ, ஆபாசமாக பேச வேண்டும் என்றோ, வெட்டியாக கடலை போட வேண்டும் என்றோ, தனது இச்சைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலோ , அல்லது நீங்கள் என்ன நோக்கத்தில் அவர்களை நண்பர்களாக்க விளைகிறீர்களோ அந்த எண்ணத்திலோ அவர்கள் வருவது இல்லை.
மாறாக தனது உலகத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற ஆவலுடனும், தன்னைப் போன்ற மற்ற தோழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளவும், உள்ளத்தில் புதைந்துக் கிடக்கும் ரணங்களை சற்று மறைத்து விட்டு மனதினை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், திறமை மிக்க தோழர்களை இணைத்துக் கொள்ளவும், மரியாதையான நண்பர்களையும், உறவுகளையும் பெற்றுக் கொள்ளத் தான் இங்கே வருகிறார்கள்.
மேலும் இங்கு உள்ள ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலும் ஏதோ ஒரு விதத்தில் காயம்பட்டவர்களாகவும் இருப்பார்கள் . அல்லது இல்லாமலும் இருக்கலாம், அதற்காக அவர்களின் அந்தரங்க விஷயங்களில் நீங்கள் தலையிடுவது மிகவும் அநாகரீகமாகும்.
ஒரு ஆண் நட்பினை பெண் ஏற்றுக் கொள்கிறாள் என்றால் அது அந்த பெணின்மீது உள்ள ஈர்ப்பின் காரணம் அல்ல, மாறாக ஏற்கனவே நட்பு வட்டத்தில் உள்ள ஒருவரது பெயர் (Mutual Friend ) இருக்கும் பட்சத்தில் அவரின் மீதான நம்பிக்கையினால் தான் அந்த ஆண் நட்பு அழைப்பை ஏற்கின்றார்கள்.
உடனே அவர்களிடம் சென்று வீட்டு விலாசம் முதல், செல்போன் எண், whatsapp எண், பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? கல்யாணம் ஆச்சா? ஏன் என்கூட இன்பாக்ஸில் பேசமாட்டேன் என்று சொல்றீங்க, நான் நல்லவள் , உங்க போட்டோ கொடுங்க , இன்னும் இங்கே பதிய இயலாத வார்த்தைகளில் இம்சைகள் செய்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்ள இயலும். உங்கள் குடும்பத்தை சார்ந்த, உங்கள் கணவனோ, உங்கள் மகள்களோ, அல்லது உங்களின் உறவுகளோ இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டி வந்தால் மட்டும் உங்களின் போலி ஆசை ஏன் துடிக்கின்றது என்றுப் புரியவில்லை.
உங்களின் மீது மதிப்பு வந்தால், மரியாதையை இருந்தால், நட்பிற்கு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்ற எண்ணம் தோன்றினால், கண்டிப்பாக உங்களை குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ள கூட தயங்க மாட்டார்கள் ஆண்கள்.
எனவே ஆண்களைக் கவரும் எண்ணத்தோடு இன்பாக்ஸில் கடலை போடாதீர்கள். உங்கள் உலகத்தை நல்ல எண்ணங்களோடு அமைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இது பொதுவான ஒரு சமூக வலைத்தளம். பல பயனுள்ள விஷயங்கள் உலா வரும் ஒரு உலகம்.
உலகத் தொடர்பை உங்களின் விரல்களைக் கொண்டு தீர்மானியுங்கள் . நீங்கள் எந்த ரகம் என்று.
சற்று காட்டமாக இருந்தால் மன்னிக்கவும். யாரையும் குறிப்பிட்டு இதனை இங்கே பதியவில்லை...
நான் படித்ததில் பிடித்தது 🤍🤍
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
நினைவில் கொள்ளுங்கள்... இது காதல் அல்ல‼️
உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் அதே கைகள்தான் உன்னை காயப்படுத்துகின்றன என்றால்... உன்னை நெருங்கி இழுக்கும் அதே கைகள்தான் உன்னைத் தாக்கி உடைக்கின்றன என்றால், இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்: அது காதல் அல்ல.
யாராவது உன்னை காதலிப்பதாகச் சொன்னாலும், உள்ளிருந்து உன்னைப் பிரித்து... உன் தன்னம்பிக்கையை நசுக்கி, உன்னை சிறியவனாக, பயனற்றவனாக, முக்கியமற்றவனாக உணர வைத்தால் - இதைச் சொன்னதற்கு என்னை மன்னித்துவிடு, ஆனால் அது காதல் அல்ல.
நீ காதலிக்கும் நபர் உன் பலங்களைப் பாராட்டுவதை விட உன் குறைகளைச் சுட்டிக்காட்ட அதிக நேரம் செலவிடும்போது... உன் நன்மை, உன் கருணை, உன் முயற்சி, உன் இதயம் ஆகியவற்றைப் புறக்கணிக்கும்போது—
அந்த நபர் உன்னை நேசிப்பதில்லை.
உன்னைப் பற்றி அக்கறை கொள்வதாக சத்தியம் செய்பவர் நீ யார் என்பதை மாற்ற முயற்சிப்பவர்தான்...
உன் உணர்வுகளை கையாள்வது, உன் எண்ணங்களைத் திருப்புவது, உன் மனதுடன் விளையாடுவது என்றால் - என்னை நம்பு, அது காதல் அல்ல, ஏனென்றால் உண்மையான காதல் நீ நீயாக இருப்பதை நிறுத்த வேண்டும் என்று ஒருபோதும் கோருவதில்லை.
உன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவர் உன் ஆளுமையை ஒருபோதும் அழிக்க விரும்பமாட்டார். உன் ஒளியை மங்கச் செய்யவோ, உன் சிரிப்பை மங்கச் செய்யவோ அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள். உன் ஒவ்வொரு பகுதியையும் - உன் காட்டுத்தனமான தருணங்கள், உன் அமைதியான நாட்கள், உன் மகிழ்ச்சி, உன் உணர்திறன், உன் வலிமை, உன் கனவுகள், உன் குறைபாடுகள் கூட - அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
நாம் நேசிக்கக் கடினமான நாட்கள், நாமே போராடும் நாட்கள் நம் அனைவருக்கும் உண்டு.
ஆனால் உன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவர் அந்த நாட்களிலும் உன்னைத் தேர்ந்தெடுப்பார்.
வலுவான, உடைந்த, வளரும், குழப்பமான, குணப்படுத்தும் மற்றும் நம்பிக்கையான உந்துதலை அவர்கள் நேசிப்பார்கள்.
ஏனென்றால் உண்மையான அன்பு காயப்படுத்தாது, அவமானப்படுத்தாது, அழிக்காது. வேறொருவரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உன் ஆன்மாவை மாற்ற வேண்டும் என்று உண்மையான அன்பு கோருவதில்லை. உண்மையான அன்பு ஏற்றுக்கொள்கிறது, பாதுகாக்கிறது, வளர்க்கிறது, உயர்த்துகிறது.✅💯
📌 எனவே இதை நினைவில் கொள்ளுங்கள், ஒருவரின் அன்பு உன்னை காயப்படுத்தியதாகவோ, வெறுமையாகவோ, பயமாகவோ அல்லது நீ இருந்ததை விட குறைவாகவோ விட்டுவிட்டால்... அது முதலில் ஒருபோதும் காதல் அல்ல.
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #💑கணவன் - மனைவி #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
#காதலிக்கும் போது எப்படி இருக்கும்??
உலகத்தில் இருக்கும் அனைத்து காதல் பாடல்களும் நமக்காகவே எழுதியது போல இருக்கும்.
அவள் கண்ணை பார்த்த உடன் ஒரு மயக்கம் இழுத்து விடும்.கைகளை பிடித்து நடக்கும்போது ஒரு எனர்ஜி வரும்.
பைக்கில் செல்லும்போது திடீர் என்று ஒரு மெல்லிய காற்று வீசினாலும் அவளின் பெயர் தான் ஓடும்.
பைக்/காரில் செல்பொருக்கு மழை கூட அவளின் முகத்தை நியாபக படுத்தும். எத்தனை நாள் மழையை வெறுத்த நான் அப்போது மழையில் நடக்க தொடங்கினேன்.
மழை வர போகுதே, துளிகளும் தூறுதே
நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே, மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே போவேன்.
ராத்திரி தூங்கும் முன் அவளிடம் பேச வில்லை என்றால் தூக்கமே வராது. கற்பனைகள் அதிகமாக ஓடும். எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்திக்க தோன்றும்.
விடியற்காலை என்றாலும் பகல் என்றாலும் அவள் சந்திக்கவேண்டும் என்று கூறினால் அலறி அடித்து கொண்டு ஓடவேண்டியதுதான்.
மொபைல் எல்லாம் எடுக்க தோணவே தோணாது. அவள் பக்கத்தில் இருக்கும்போது கண்களை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்,இதுல ஏங்காத மொபைல் எல்லாம் பார்க்கிறது?
அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தண்ணீரில் தேன் கூடுமே.
ஊரே பார்த்து வியக்கும் படி #காதல் செய்யவேண்டும் என்று தோன்றும். பைத்தியம் பிடித்தார் போலவும் இருக்கும் பிடிக்காத போலவும் இருக்கும்
ஊரு கண்ணு படும்படி உறவாடும் கனவே தொடருதே…!!
உலகத்தில் நம்ப அம்மா போல அழகி ஒருத்தி இருக்கா என்று தோன்றும். அவள் அவ்வளவு அழகாக தெரிவாள்.
என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உன்னை கண்டு கொண்டேன்..அழகான உன் கூந்தல் மாகோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே.. முன் ஜென்மம் போவேனே..
குடித்து விட்டு முழு போதையிலும் அவள் கால் செய்தால் முற்றிலும் உதறி விட்டு ஒட தோன்றும். அவள் பார்க்கிறாள் என்று சிக்ரெட் அனைக்கத்தோன்றும்.
காதல் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஒரு ஜாலம். அது வந்தால் உலகமே அழகா தெரியும்.
என்ன செய்தலும் அதில் அவள் முகம் தெரியும். அதுதான் காதல்.
காதலித்தால் கவிதை எழுதத் தோன்றும்...
இது என்னுடைய அனுபவம் இல்லை நான் கேட்டு தெரிந்து கொண்ட கருத்துக்கள்......
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
_*அத்தனை* தவறையும்_
_*சிறப்பாக* செய்து விட்டு,_
_*தனது* பேச்சு திறமையால்,_
_*நியாயப்படுத்தும்* மனிதர்கள் இருக்கும் வரை,_
_*விட்டுக்*_ _கொடுத்து பழகியவர்கள்_
_*வாயடைத்துப்* போவார்கள்..!!_
நாம்மௌனித்து
இருக்கும் வரை,
நம் மீதுபொய்கள்
திணிக்கப்படும்.
*பிரிந்து செல்லும் உறவுகள், ஒரு வகையில் எதையாகினும் கற்றுக் கொடுத்து செல்கின்றன.*
*அக்கறை இல்லாமல் செய்யும் எந்த செயலும், பலனை தராது.*
*சோகங்களை சேர்த்து வைத்தால், வாழ்க்கையில் நிம்மதி கிடைக்காது.*
எது உன் இலட்சியமென்று
எது உன் பாதையென்று
எது உன் திசையென்று
தீர்க்கமாய்த் தீர்மானம் போடு..
நம்பிக்கையோடு போராடு, நாளைய எட்டு திசையும் உனது விடியலே..
ஓடு மனமே ,ஓடு ..!
வெற்றி வெற்றி என்று
வெறி ஏற்றி , வியர்வை கக்கி ஓடு ...!
இன்று நீ சிந்தும் இரத்தம்
நாளையுன் சரித்திரத்தின் வெடி சத்தம்.!
இன்று நீ சிந்தும் இரத்தம்
நாளையுன் தலைமுறையின் தேசியகீதம்..!
உன் உற்சாக இரத்தம் கொதிக்கட்டும் .....
உன் பாதம் யுத்தப்புழுதி கிளப்பட்டும் ..!!
அயராது நீ முயற்சித்தால், இந்த அண்டத்தில்...
வெற்றி நிச்சயம்!
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💑கணவன் - மனைவி #🚹உளவியல் சிந்தனை #💪Motivational Quotes #😍எமோஷனல் ஸ்டேட்டஸ்
#புருஷன் செத்து ஒரு வருசம் கூட ஆகல... அதுக்குள்ள எவன மயக்க இப்டி மேக்கப் போட்டு திரியிறாளோ...
என்ற குரலை கடந்து பேருந்து நிறுத்தம் வந்தாள் அவள்..
ஆன்ட்டி செம்ம கட்டடா, புருஷன் வேற செத்துட்டானாம் ட்ரைப் பண்ணி பார்ப்போம் என்றபடியே வந்த கல்லூரி இளைஞனின் குரலை கேட்டும் கேளாதது போல பேருந்தில் ஏறினாள்...
மூச்சுத் திணற வேர்வையோடு நின்று கொண்டிருந்தவளின் பின்னாலிருந்து ஒருவன் மெதுவாக உரசுகிறான் என்பதை புரிந்து கொண்டு நகரும் போதே கம்பிகளை பிடிப்பது போல இன்னொருவன் முன்னால் உரசிச் சென்றான்... இறங்கும் போது சிலர் இடுப்பில் உரசினார்கள்...
இறங்கும் இடம் வந்தது நடந்து செல்லும் வழியில் ஆட்டோ ஸ்டாண்ட்டில் இருந்தவர்களின் பார்வை அவளின் கழுத்துக்கு கீழே போனதை கண்டும் காணாதது போல அலுவலகம் நுழைந்தாள்...
மேனேஜரிடமிருந்து அழைப்பு மணி வந்தது உள்ளே நுழைந்தால் என்ன மேடம் நைட்டு போன் பண்ணேன் எடுக்கவே இல்லை நீங்க...
என்ன விசயம் சார்?
ஒண்ணுமில்லை என் ஒயிப் குழந்தைங்கெல்லாம் ஊருக்கு போய்ட்டாங்க அதான் சும்மா பேசிட்டு இருக்கலாம்ன்னு கூப்பிட்டேன்...
ஓஓ சரி நீங்க ஊருக்கு போய்ட்டா உங்க ஒய்ப் - யாரு கிட்ட சார் பேசுவாங்க என்றபடியே வெளியேறினாள்...
மாலை வீடு திரும்பினாள் உடம்பு முடியாத அம்மாவுக்கும் கல்லூரி சென்ற தம்பி தங்கைகளுக்கு சமைத்து பாத்திரம் விளக்கி தூங்க போகும் முன் கொஞ்சம் டென்சன குறைக்கலாம்ன்னு முகநூலை திறந்தாள்...
Hi, how r u,
I love u'
Please kiss me,
மீட் பண்ணலாமா,
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,
பேசமாட்டியாடி ரொம்ப சீன் போடாத,
உன் புருசன் இல்லையே உனக்கு மூடு வந்தா என்ன பண்ணுவ...
கேடுகெட்ட வார்த்தைகளால் இன்பாக்ஸ் நிரம்பி வழிந்தது...
ஆண்கள் என்றால் பெண்ணின் அனுமதி இல்லாமல் உரசுபவன் இடிப்பவன்...
கணவனை இழந்து பிரிந்து வாழ்கிற பெண்களுக்கெல்லாம் இதே நிலைமை தானா...
ஒருவன் கூட உண்மையான காதலை உணர்த்தவே மாட்டானா ? என்றபடியே தூங்கியே போனாள்...
இது தான் இன்றைய சில பெண்களின் நிலைமை...
குடும்ப கஷ்டத்தை உணர்ந்து வேலைக்கு போற பெண்கள்கிட்ட தப்பா நடக்குற ஆண்கள்... ஆண்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவர்கள்...
நிஜ வாழ்க்கைல ரொம்ப காயப்பட்டு தான் முகநூல் வராங்க... இங்கையும் அவங்களை கஷ்டப்படுத்தாதிங்க...
உண்மையான அன்பு , பாசம் , காதல் இதுக்காக தான் பெண்கள் மட்டுமில்ல உலகத்துல எல்லாரும் ஏங்குறாங்க...
காதல்னா நீங்க உடனே தப்பா நினைச்சா உங்கள விட அடி முட்டாள் யாரும் இல்ல...
காதல்னா பெண்ண ஆணோ ஆண பெண்ணோ கட்டிப்பிடிக்கிறது முத்தம் கொடுக்குறது இல்ல...
காதல் ஒரு உணர்வு உடல் ஆசைக்கும் உள்ளத்து உணர்ச்சிக்கும் மேல ஒரு ஆத்ம உணர்வு அத புரிஞ்சவங்க அதிகமா இங்க இல்ல...
பெண்கள ஏன் அப்படி தப்பா பாக்குறீங்க அவங்க கிட்ட அப்படி என்ன தேடுறீங்க...
அவங்களும் நம்மல மாதிரி ஒரு மனித உயிர் தான் பாசத்துக்காக ஏங்குறாங்க...
அதுக்காக தப்பு பண்ண கூப்பிடுறதை விட கேவலம் வேற எதுவும் இல்ல...
பெண்கள்னா ஆசைக்காக ஏங்குறவங்கனு நினைக்குற நாய்ங்களுக்கு எங்க புரியுது அவங்க அம்மா , அக்கா , தங்கச்சியும் பெண்கள் தான்னு...
முகநூல்ல தப்பா பேசுனா பெண்களும் அப்படி பேசுவாங்கனு நினைக்கிறிங்க...
வேற ஒருத்தன் உங்க அம்மா , அக்கா , தங்கச்சிகிட்ட இப்படி பேசுனா நீயும் திருப்பி பேசுமானு சொல்விங்களா...
பெண்கள தப்பா பாத்தது போதும் அவங்க இல்லனா நம்ம யாரும் இங்க இல்ல...
உணர்வுகள அடக்க தெரியாதவன் தான் ஆண்மகன் என்று சொல்ல தகுதி இல்லாதவன் இதுக்கு மேல உங்க இஷ்டம்...
சில நல்ல ஆண்களும் இருக்காங்க நா இல்லனு சொல்லல...
ஒரு பெண் கஷ்டப்படுத்தப்படும் போது அத கேள்வி கேக்க தைரியம் இல்லாமல் வேடிக்கை பாக்குறவன் ஒரு நல்ல ஆம்பள என்று சொல்லவே தகுதி இல்லாதவன்...
தப்பு பண்றவன விட அத வேடிக்கை பார்த்துட்டு அமைதியா இருக்கிறவன் ரொம்ப ரொம்ப கேவலமானவன்...
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #💪Motivational Quotes #🚹உளவியல் சிந்தனை #💑கணவன் - மனைவி #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️








