#மார்ச்_30
பூமி நேரம் கடைபிடிக்க வேண்டிய நாள் இன்று.
மார்ச்-30, (சனிக்கிழமை), 2019 இரவு 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து நாமும் பூமி நேரம்- (EARTH HOUR) கொண்டாடலாமே...
நோக்கம்:-
புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக இந்த பூமி தினம் நாள் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும், கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும்.
வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது.
உறுதிமொழி:-
“நாம் பூமி நேரம் கொண்டாடும் விதமாக, இயற்கை இழப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, நான் என் வீட்டில் அனைத்து அத்தியாவசிய விளக்குகளை இரவு 8:30 இருந்து 9:30 மணிவரையில் ஒருமணிநேரம் அணைத்துவிடப் போகிறேன். நீங்களும் இவ்வாறு செய்யவேண்டுமென வேண்டுகிறேன்”.
உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் சமுதாயம் வாழ்வதற்கு உகந்த சுற்றுச்சூழலுக்கான மிகப்பெரிய அடித்தளமாக இந்த பூமி நேரம் இருக்கிறது. அவர்கள் பருவநிலை மாற்றங்களுக்கு எதிராக ஒரு மணிநேரம் மட்டுமே அத்தியவசிய மின் விளக்குகளை நிறுத்தும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோம்.
#life #lifes