⋆⋇💥꧁🅱🅷🅰🅺🆃🅷🅴🅴🔥꧂💥⋇⋆
978 views
பாகவத ப்ரபாவம் !!!!! உயர்ந்த பகவத் பக்தி எப்போது சிறக்கும் என்று கேட்டால், பாகவத பிரதிபத்தி இருந்தால் தான் சிறக்கும். மதுரகவியார் துவாபர யுகத்திலேயே தோன்றியவர். கலியுகம் பிறந்த பிற்பாடு தோன்றியவர் நம்மாழ்வார். மதுரகவியாழ்வார் துவாபர யுகத்தில் இருந்தபோது பூலோகத்தில் பகவான் க்ருஷ்ணன் துவாரகையில் இருந்தான். ஒருநாள் கூட அவர் க்ருஷ்ணனைப் போய் சேவிக்கவில்லை. ஆனால், அங்கேயிருந்து வந்து நம்மாழ்வார் திருவடியை சேவித்து விட்டார். பதினோறு பாசூரங்களிலே நம்மாழ்வார் வைபவத்தை சொல்லியிருக்கிறார். மற்ற ஆழ்வார் பாசுரம் ஸ்லாம் பகவத் வைபவம். இந்தப் பதினோறு பாசுரம் பாகவத பிரபாவம். இது மிகவும் ஏற்றமுடையது. கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணக் பண்ணிய பெருமாயன் என்அப்பனில் நண்ணித தென்குருகூர்ச் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என்நாவுக்கே என்ற பாசுரத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எவனொருவன் . இதில் அவர் என்ன காட்டுகிறார் என்றால், ராமனை விட்டு சத்ருகன் எப்படி பரதன் பின் போனானோ, எப்படி பரமனை யே பற்றினானோ, அது போல் கிருஷ்ணனைடைய சந்தோஷம் நம்மாழ்வார் வடிவமாக வந்தது என்று நம்மாழ்வார் திருவடியை ஆச்ரயித்தார் மதுரகவி. பகவானிடத்திலேஎல்லோரும் அன்பு கொள்வார்கள். ஆனால் பாகவதோத்தமர்களிடத்திலே அன்பு இராது. அவர்களை தப்பு சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த மாதிரி தோஷம் சொல்ல தே என்ற வேதம் சொல்லிக் தருகிறது. Tks nalini gopalan #🙏பெருமாள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #✨கடவுள் #✡️தோஷ பரிகாரங்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻