#பத்திஸ்டேட்ஸ் #ஆன்மீகத் தகவல்🙏🙏 பிப்ரவரி 18*
*இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்!💐*
கடவுளே மனித உருவில் வந்து, வாழ்வாங்கு வாழும் வழிதனை தம் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டிய அருளாளர்கள் பாரதப் பண்பாட்டின் நெடுகிலும் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அனைத்து மதங்களின் வழிபாட்டு முறைகளையும் ஆழ்ந்து அனுபவித்து, உணர்ந்து மதம் கூறும் நல்வழிகளை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வந்தவர் அவர். கடவுள் வழிபாட்டின் அத்தனை பாவனைகளும் மனித வாழ்வை மேம்படுத்தி இறைவனை அடையும் வழி என்று அனுபவித்து உணர்ந்தவர் ராமகிருஷ்ணர். தன் மனைவி சாரதாதேவியை அன்னை பராசக்தியின் வடிவமாக வழிபட்டு, பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் வடிவம் என்கிற பாரதப் பண்பாட்டை உலகிற்கு உணர்த்தியவர்.
நாகரிக வாழ்க்கையில் மனிதன் அனைத்தையும் செய்யக்கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்தவன்தான். ஆனால், இன்றும் அவன் தடுமாறும் விஷயம், பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு பழகவேண்டும் என்பவைதான். அதற்கு அவன் முதலில், மகான்களின் உபதேசங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். 'உண்மையானவர்கள், குடிகாரர்கள், குழந்தைகள் இவர்களின் வாய் வழியாக ஒரு சில நேரங்களில் தெய்வ வாக்குகள் வரும்' என்று கூறுவார், ராமகிருஷ்ண பரமஹம்சர்.
அத்தகைய மகான் அடிக்கடி தன் சிஷ்யர்களுக்குக் கூறும் உபதேசம் இதோ...
*மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார் ?*
பரமஹம்சர்::'நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண்டும்' .ஆனால், 'ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்' எப்போதும் மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள்.
அதில் முதலாவது செல்வ வளம் மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அதனால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக்கேட்டு 'சரி, சரி ஆமாம்....' என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.
இரண்டாவது குடிகாரன். நீ அவனைத் தொந்தரவு செய்தால், காதால் கேட்கச் சகிக்காதபடியெல்லாம் உன்னைத் திட்டுவான். அதைவிட்டு, 'என்னப்பா நல்லாயிருக்கியா?' என்று கேட்டால் உன்னிடம் சந்தோஷத்துடன் ஐக்கியமாகிவிடுவான்.
மூன்றாவது காளை மாடு. அது உன்னை முட்டவரும் போது அதையும் ஏதாவதொரு சப்தம் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.
நான்காவது நாய். அது உன்னைக் கண்டு குலைக்கவோ கடிக்கவோ வரும்போது, நீ ஓடாமல் நின்று விசிலடித்து அதனைச் சமாதானம் செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக பாம்பைப் போன்ற விஷத்தன்மை உடைய மக்கள். அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்கள் என்று உனக்குத் தெரியாது. அவர்களின் விஷத்தை முறிக்க மிகுந்த பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றிவிடும்.அவர்களிடம் இருந்தும் தள்ளியிருக்க வேண்டும்