saravanan.
564 views
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்,* *மூலவர் : அண்ணாமலையார்.* *அம்மன்/தாயார் : உண்ணாமுலை அம்மன்.* *பள்ளியப்பன் தெரு,* *யானைக்கவுனி,* *சென்னை சென்ட்ரல் அருகில்,* *சென்னை-600003.* *காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•═•⊰ ═•╗* *★❀·.:::::::·:பகிர்வு:·::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰ • •═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *சிறப்பு : கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி, கந்தசஷ்டி, நவராத்திரி,காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும் இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு.* *பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி நாயகி, துர்க்கை, விஜயகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன், வராகி, பைரவர், மகிஷாசுரமர்த்தினி, அனுமான் சன்னதிகள் அமைந்துள்ளன.* *மணப்பேறு, மகப்பேறு, செல்வம், கல்வி, பணி போன்றவை நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.* *இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.* *திருவண்ணாமலை போலவே இங்கும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இது சிவன் கோயிலாக இருந்தாலும் சைவ-வைணவ பேதம் இல்லாமல் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.* *சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு சென்று திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்வார். வயதான காலத்தில் இவரால் திருவண்ணாமலை செல்ல முடியாமல் போனது. வருந்தி கண்ணீர் விட்டு அழுதபோது சிவபெருமான் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து அசரீரியாக உனக்கு கிடைக்கும் லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபாடு செய் திருவண்ணாமலையில் வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும் என்று கூறினார். இதனடிப்படையில் அந்த பெரியவர் தனக்கு நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அண்ணாமலையாராக நினைத்து வழிபாடு செய்து வந்தார். அப்போது முதல் இக்கோயிலின் மேலேயும் திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிவனை ஜோதி சொரூபமாக வழிபாடு செய்கின்றனர்.* *காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹அன்புடன்🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052.* 🕉🕉 🔯 🔯🔯🔯 🔯 🔯