gopura tharisanam

315 Posts • 223K views
saravanan.
530 views 7 hours ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,* *மூலவர் : கயிலாசநாதர்.* *அம்மன்/தாயார் : காமாட்சியம்மன்.* *அண்ணாமலை நகர் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்,* *முத்தையா நகர்-சி.* *கொத்தங்குடி,* *கடலூர்-608002.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94435 38084, 78715 85728.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟    *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்டவை முக்கிய திருவிழாக்களாகும்.* *கிழக்குப்பக்கம் வாயில் நுழைவு வாயில் முன் வேம்பு, அரசன் மற்றும் வில்வம் தல விருட்சம் மரம் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் பார்த்து அம்பாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி மேற்கு பக்கம் தலை சாய்ந்த நிலையில் படுத்துள்ளது. கிரானைட் தரை தளம், வலது பக்கம் சுப்பிரமணியர், இடபக்கம் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈசன் அருள்பாலிக்கின்றார். வெளிபிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் நந்தி வணங்கும் கோலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கம் பார்த்த வகையில் விஷ்ணு துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும், அவரை வணங்கி சென்று நவக்கிரகங்களை வணங்கி சென்றால் கோயில் நுழைவு வாயிலை சென்றடையலாம்.* *கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.* *நெய் தீபம் ஏற்றி, பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, காயிலாயத்தில் இருந்து மூலவரை காணிக்கையாக வழங்கி 2010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாக அமைந்துள்ளன.* *நகரில் 1995ம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துவிநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த நகர் வளர்ச்சிகுழுத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான கண்ணன் வேணுகோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில் அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர், காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது.* *கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்து தெய்வமூர்த்தி சிலைகளையும் இவலசமாக வழங்கி, பொருளாதார வசதி அமோகமாக வளர்சிக்க வேண்டுமாய் அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. செல்வந்தர்கள் பலர் தானே முன்வந்து நன் கொடை வழங்கிய நிலையில், நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் வேணுகோபால் தன் சொந்த வருவாய் பல செலவிட்ட நிலையில், செயலர் பழனியப்பன் தன் பங்கிற்கு உதவியுள்ளார். கோயில் இதர செலவினங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் உரியத்தொகை இறைவன் ஈசன் அருளால் விரைவில் கிடைக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*.         *+918072055052* 🌻🌹🌻🌹🌻🌹🌻
12 likes
8 shares
saravanan.
581 views 1 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு செல்வ முத்துவிநாயகர் திருக்கோயில்,* *மூலவர் : செல்வ முத்துவிநாயகர்.* *உற்சவர் : செல்வ முத்துவிநாயகர்.* *அண்ணாமலை நகர் அஞ்சல்,* *சிதம்பரம் வட்டம்,* *கடலூர்-608 002.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 94435 38084, 78715 65728.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟 *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது,சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.* *கிழக்குப்பக்கம் நுழைவு வாயில் இடபக்கம் தீர்த்த கிணறு மற்றும் தலவிருட்சமான வன்னிமரம் மற்றும் வெள்ளெருக்கு உள்ளது. கோயில் வலபக்கம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். விமானத்தில் ஒரு கலசம் இடம் பெற்றுள்ளது. கிரானைட்டில் தரை அமைக்கப்பட்டுள்ளதுடன், 75 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். கருவறையில் செல்வ முத்து விநாயகர் அருள்பாலிக்கிறார். கோயிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி சிலைகளும் ஒரு கலசமும் அமைக்கப்பட்டுள்ளது.* *கல்வி, மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விநாயகர் அருள்பாலிப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.* *நெய் தீபம் ஏற்றி, எருக்கு மாலை சாற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கேயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது.2 010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கோயில் புதுப்பிக்கப்பட்டு நடந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாகும்.* *சிதம்பரத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது கொத்தங்குடி கிராமம். இப்பகுதியில் இருந்த நஞ்சை நிலத்தில் இடம் வாங்கி அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தார் முத்தையா செட்டியார் பெயரில் நகர் அமைத்தனர். துவக்கத்தில் 25 குடும்பங்கள் மட்டும் வசித்தனர். 1995 ஆம் ஆண்டு கல்வி கற்றவர்கள் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் அரசு ஊழியர்கள் சேர்ந்து ஊரும் பேரும் இல்லாததது பரம்பொருள். எங்கும் வியாபித்திருப்பது. சாதாராண மனிதருக்கு எளிதில் அறிந்து கொண்டு வழிபட இயலாத படி உள்ளது.* *அத்தகைய பரம்பொருளுக்கு ஊரையும் பெயரையும் சூட்டி ஒரிடத்தில் திரட்டி தங்கள் உணர்வுகளை மனமுருகி சொல்ல ஏதுவான இடமாக நிறுவியதே கோயில் செல்வங்களையும், வளங்களையும், கல்வியையும் வழங்கும் முதற் கடவுளான விநாயகரை வணங்க திட்டமிட்டு யோசித்ததின் விளைவால் இக்கோயில் உருவாகியது. அதற்கு செல்வமுத்து விநாயகர் என்ற பெயர் சூட்டினர். உள்ளங்கனிந்து உருகி வழிபடுவோரின் வேண்டுதல்களை கருணையோடு நிறைவேற்றி வருகிறார். கமிட்டித் தலைவர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர். 12 ஆண்டிற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.* *சித்திரை 1-10 தேதிக்குள் விநாயகர் மீது சூரிய ஒளி விழும் காட்சி சிறப்புக்குரியதாகும்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*.                *+918072055052* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌲🌷🌲🌷🌲🌷🌲🌷🌲
6 likes
8 shares
saravanan.
725 views 8 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில்,* *மூலவர் : செல்வவிநாயகர்.* *சி.முட்லூர் அஞ்சல் கிள்ளை வழி,* *சிதம்பரம் வட்டம்,* *கடலூர்-608102.* *காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91 75983 02955.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*                                                              *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்*     *Mobile No +918072055052* 📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : விநாயகர் சதுர்த்தி, மாதம்தோறும் சங்கர சதுர்த்தி, மாசிமகம், தை அமாவாசை நடராஜ மூர்த்தி எழுந்தருளல் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது, ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.* *கிழக்குப் பக்கம் வாயில், மகாமண்டபத்தில் 50 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். விமானத்தில் ஒரு கலசம், தரை தளம் டைல்ஸ், தலைகீழ் 'ப வடிவில் தரை தளம் உள்ளது. நிலைப்படி முன் கஜெலெட்சுமி நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார். சிமெண்ட் சுதையில் ஆறு பூதகனங்கள். நான்கு காளை வாகனம் இடம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் தலைப்பில் சிவன், முருகன், விநாயகர் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கல்யாண சுந்தரேஸ்வரர் மற்றும் மூலவரான செல்வ விநாயகர் சிரித்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். 1964 ல் கும்பாபிஷேகம் அதன் பின் 2014 ல் கும்பாபிஷேகம் நடந்தது.* *ஆண்டியப்ப முதலியார் அன்னசத்திரம் கட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அனைத்து மக்களும் செல்வ வளம் பெருக இக்கோயிலை கட்டியுள்ளார். இவரை வணங்கினால் செல்வ வளம்பெரும் அதனால் செல்வ விநாயகராகவே அருள்பாலிக்கிறார். திருமணத்தடையை போக்கும் மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.* *நெய் தீபம். எருக்கு. அருகம்புல்லில் மாலை சார்த்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.* *இக்கோயிலில் இருந்து 4 கி.மீ., தொலைவில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளதுடன், இக்கோயிலுக்கு தை அமாவாசை மற்றும் மாசி மகத்தில் நடராஜர் வருகையும், புவனகிரி ராகவேந்திரர் கோயில், மருதூர் வள்ளலார் பிறந்த இடம் என்பதாலும், இக்கோயிலில் இருந்து சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரத்தையும் தரிசிக்கும் இடமாக இருப்பதால் கோயிலுக்கு பெருமையாக உள்ளது.* *சிதம்பரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள ஆ.மண்டபத்தில் வாழ்ந்த ஆண்டியப்ப முதலியார் செல்வ களிப்பில் ஏழைகளுக்கு பொருளுதவி செய்தார். மற்ற மக்களும் நலம் பெற வேண்டும் என்ற நோக்கில் முதன் முதலில் கீற்றுக் கொட்டகையில் கோயில் நிறுவி செல்வ விநாயகர் என்று அழைத்து வழிபாடு நடத்தினர். அப்பகுதியில் அதிகளவில் திருமணம் நடக்காமல் இருந்த ஆண்களுக்கு திருமணத்தடையை போக்க மாப்பிள்ளை கோலத்தில் கல்யாண சுந்தரேஸ்வர் சிலை அமைத்து வழிபாடு நடத்தியதால் இன்றளவும் திருமணமாகாத முதலியார் உள்ளிட்ட பிற சமூகத்தினர்கள் வந்து செல்கின்றனர். கல்யாண சுந்தரேஸ்வரர் இன்றளவும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆண்டியப்பமுதலியார் இறந்த பின் அவரின் புத்திரர்கள் திருஞானம் மற்றும் தியாகராஜன் இக்கோயில் கட்டினர். இக்கோயிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டியப்பமுதலியார் சந்ததியினர்கள் கோயிலை பராமரித்து வருகின்றனர்.* *ஆவணி மாதம் தொடக்கத்தில் சூரிய ஒளி விநாயகர் மீது படுகிறது.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
14 likes
13 shares