gopura tharisanam

344 Posts • 237K views
saravanan.
729 views 1 months ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு திருவெண்காட்டீஸ்வரர் கோயில்,* *மூலவர் : திருவெண்காட்டீஸ்வரர்.* *உற்சவர் : திருவெண்காட்டீஸ்வரர்.* *அம்மன்/தாயார் : மீனாட்சி அம்மன்.* *மதுராந்தகம்,* *செங்கல்பட்டு மாவட்டம்.* *காலை 7:30மணி முதல்  - 11:00மணி வரை , மாலை 5:00மணி முதல் - 8:00மணி வரை.* *+91 411-525 3887, 98429 09880, 93814 82008.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, பிரதோஷம், கொஞ்சி விளையாடும் நகரம் சோறுடைத்த சொர்க்க பூமி. புலிக் கொடியை சின்னமாக கொண்ட தேசம்.* *கல்லிலே கலைவண்ணம் கண்ட குலம். இப்படி சோழத்தின் பெருமை கூற சொற்கள் எல்லாம் பூத்து நிற்கும். அப்படிப்பட்ட சோழ நாகரிகத்தில் உருவானதுதான் திருவெண்காட்டீஸ்வரர் கோயில். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ளது.* *தோல் நோயினால் அவதிப்படுவோர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீர்வு கிடைக்கும்.* *இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். வழக்கில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னையால் கஷ்டப்படுவோருக்கும் கண் கண்ட தெய்வமாக இவர்கள் திகழ்கின்றனர்.* *இந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான்! அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் சிறந்தவர்கள். அறத்தில் எப்படியோ அதைவிட தெய்வபக்தியில் திளைத்தவர்கள். அத்தகைய சோழ குலத்தில் உதித்தவர்தான் கண்டராத்தித்தர். இவர் பெரிய சிவபக்தர். இவரால் உருவானதுதான் இக்கோயில்.* *இவருக்கு திருவெண்காடுடைய மகாதேவர், வேதாரண்யேஸ்வரர், ஸ்வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடுடைய நாயனார் என்ற பெயர்களும் உள்ளன.* *இங்கு கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரும் உள்ளனர். வழக்கில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னையால் கஷ்டப்படுவோருக்கும் கண் கண்ட தெய்வமாக இவர்கள் திகழ்கின்றனர்.* *முன்பொரு காலத்தில் இப்பகுதி மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் அமர்ந்து இளைப்பாறிய வெண்மைக் கொக்குகளால் இப்பகுதி வெண்மயமான காடாக தோற்றமளித்தது. எனவே இப்பகுதியை வெண்காடு என்றும், இங்குள்ள மூலவருக்கு 'வெண்காட்டு ஈஸ்வரர்' என்ற பெயரும் வந்தது.ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுரத்தை நெருங்கும் போதே நமது மனம் நெகிழ்ந்துவிடும். பின் உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி தேவர் உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து வெளிச்சுற்றில் மீனாட்சி அம்மன், பாண்டீஸ்வரர் நம்மை வரவேற்பர். பாண்டிய மன்னர் ஒருவர், தன் தோல் நோய் குணமானதற்கு நன்றிக் கடனாக இவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இவர்களை கடந்து உள்ளே சென்றால் கருங்கல் கொண்டு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள், திருமேனிகள் உள்ளன. பிறகு திருவெண்காட்ஸ்வரர் தரிசனம் கிடைத்துவிடும்.* *மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே' என இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
9 likes
10 shares
saravanan.
572 views 1 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்,* *மூலவர் : மாரியம்மன் (மகாமாரி).* *கரூர் - 639 001,* *கரூர் மாவட்டம்.* *காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4324-246 0146.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : வைகாசிப் பெருந்திருவிழா -21 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாதான் இத்தலத்தின் மிகப்பெரும் திருவிழா. தவிர ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி பெரிய கார்த்திகை பொங்கல், தை வெள்ளி, பங்குனி மாதத்தில் நடக்கும் கும்பாபிசேக ஆண்டுவிழா, பங்குனி உத்திர திருவிழா நாட்களின் போதும் பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.* *இந்துக்கள் தவிர அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் ஆலயம்.* *அம்மை முதலான நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது.* *மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இம்மாரித் தாய் இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.* *அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவை. இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசேகம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.* *திருமண தத்துவம் : மனிதன் தோன்றுவது அன்னையின் வயிற்றில், மறைவது பூமித் தாயின் வயிற்றில், எப்படித் தோன்றுகிறோமோ அதிலேயே மறைவோம் என்பதே இதில் அடங்கியுள்ள தத்துவம். இதன் உண்மை வடிவமே மாரியம்மன். அந்த வகையில் இந்த ஆலயத்தின் அம்மன் பிரசாதமாக வழங்கப்படுவது திருமண் மட்டுமே.* *மஞ்சள் நீர்க் கம்பம் உற்சவத்தின் போது வேப்பமரத்தின் மூன்று கிளைகளை உடைய ஒரு பகுதியை எடுத்து வந்து, அதில் இருக்கும் பட்டைகளை உரித்து வடிவமைத்து, மஞ்சள் சொருகப்பட்டு, ஆற்றிலிருந்து பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தின் பலிபீடத்தின் அருகில் கம்பம் நடப்படும். இதை சுவாமியாகக் கருதுகிறார்கள். இது மஞ்சள் நீர்க் கம்பம் என்று அழைக்கப்படுகிறது.* *அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாகத்தான் தோன்றியது.* *கிரமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இத்திருக்கோயிலில் பரம்பரை அறங்காவலரின் முன்னோர்களால் தற்சமயம் உள்ள இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.* *இது சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தாற்போல உள்ள பெரியதொரு பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. வைகாசிப் பெருந்திருவிழாவின் போது நடக்கும் கம்பம் நடும் விழா மிகவும் சிறப்பானது.* *அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறாள். இக்கோயிலில் விஷேச அபிஷேக ஆராதனையுடன் கம்பத்துக்கு தயிர் சாதம் படைத்து சாமி கும்பிடுவார்கள். தயிர் சாதம் படையல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
7 likes
2 shares
saravanan.
549 views 1 days ago
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில்,* *மூலவர் : கல்யாணவெங்கட்ரமணர்.* *உற்சவர் : ஸ்ரீ நிவாசர்.* *அம்மன்/தாயார் : ஸ்ரீ தேவி பூமிதேவி.* *தான்தோன்றிமலை -639005,* *கரூர் மாவட்டம்.* *காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.* *+91-4324 2355531, 2365309.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *❉❉❉ +918072055052 ❉❉❉*📱 *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* 🌟*!!♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤!!* ✨ *சிறப்பு : புரட்டாசி உற்சவம் 22 நாட்கள் 1 லட்சம் பக்தர்கள் கூடுவர் மாசி மகத்தேர்-17 நாட்கள் - 50 ஆயிரம்பேர் கூடுவர் கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு தமிழ், ஆங்கில வருடபிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இங்கு பெருமாள் பாறையில் பிரம்மாண்டமான சுயம்பு மூர்த்தியாக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் செருப்பை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.* *இத்தலப் பெருமாள் ஏக தள விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.* *உடம்பின் மீதுள்ள மரு ஏற்பட்டால் நிவர்த்தி செய்ய உப்பு மிளகு வெல்லம் போட்டு பெருமாளை பிரார்த்தனை செய்தல் வேண்டும். தவிர குழந்தை பாக்கியம், கல்யாண பாக்கியம் ஆகியவை நிறைவேறுகிறது உடம்பு சம்பந்தமான எந்த வியாதியானலும் பெருமாளை பிரார்த்தனை செய்தால் குணம் அடைகிறது.* *அபிசேகம், சந்தனக்காப்பு கல்யாண உற்சவம் ஆகியவை பெருமாளுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், சந்தனம் பூசுதல், பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.* *இது ஒரு குடவரைக்கோயில்.* *செம்மாலி சமர்ப்பணம் : செருப்பு தைக்கும் சக்கிலியர் என்ற இனத்து பெரியவர்கள் கனவில் பெருமாள் வந்து தனது வலது காலுக்கோ அல்லது இடது காலுக்கோ அல்லது இரண்டு கால்களுக்குமோ அளவு சொல்லி அதேபோல் செய்து கொண்டு வரச் சொல்கிறார். அந்த இனத்து மக்கள் பெருமாளுக்கு மனதுக்கு பிடித்த அவர் சென்ன அளவுள்ள செருப்புகளை தயாரித்து கொண்டு கோமாளி வேசம் போட்டு கொண்டு வந்து பெருமாளுக்கு படைப்பர். இது இக்கோயிலில் விசேசமான ஒன்று. இதற்கு செம்மாலி சமர்ப்பணம் என்று பெயர்.* *குடவரைக் கோயில் என்பது சிறப்பு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் சுவாமி அருபி(ரூபம் கிடையாது) தென் திருப்பதி என்ற பெயர் பெற்றது. மார்பில் வட்டிஸ்தலத்தில் லட்சுமி (தாயார்) உள்ளார். திருப்பதியில் இருப்பது போல இங்கும் தனியாக தாயார் சன்னதி இல்லை.* *சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் புத்திர பாக்கியம் வேண்டி திருப்பதி யாத்திரை மேற்கொண்டான். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தான். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள். அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர். அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம் மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது. இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.தவிர ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலை என்றும் கூறப்படுகிறது.* *இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.* *💐இனிய காலை வணக்கம்.🙏* *நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052* 🔵🟠🔴🟤🟣🟢🟡
8 likes
8 shares