saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை (07.02.2026)* ……………………………………………………………….............. *''நேர்மையை விதையுங்கள்...!"* ....................................................................... நாம் எந்த செயலை மேற்கொண்டாலும், வெற்றிபெற வேண்டுமென்றால், வெற்றி பெறுவதற்கு மிகவும் அடிப்படையான மூலப்பொருள் என்னவென்றால்: எண்ணத்தில் தூய்மை. பணியில் நேர்மை... ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்... எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர்தான் அடுத்து என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்... உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ!, அவர்தான் அடுத்த மேலாளர் என்றார்... என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ!, அவரே என் நிறுவனப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்... அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றார்.... தன் மனைவியிடம் முதலாளி சொன்னதைக் கூறினார். அவர் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் எல்லாம் அவருக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தார்.... ஒரு வாரம் கழிந்தது. நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால்!, ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே தொடங்கவில்லை... ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்களானது. அப்பொழுதும் அவரது தொட்டியில் செடி வளரவே இல்லை. தாம் விதையை வீணாக்கி விட்டேனா!, என்று புலம்பினார்... ஆனால்!, நாள்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் எவரிடத்தும் சொல்லவில்லை... ஓராண்டு முடிந்து விட்டது, அனைவரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்... ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னார். அவர் மனைவி சமாதானப்படுத்தி, நீங்கள் ஓராண்டு முழுக்க உங்கள் முதலாளி கூறியது போன்றே செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியது இல்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றார்... ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அனைவரது தொட்டியையும் பார்த்தார். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவரது தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்... முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். அருமை!, எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்துள்ளீர்கள்... உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தார் அவரை அருகே வருமாறு அழைத்தார்... ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றார்... முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு ஆண்டாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னார்... முதலாளி, ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டுக் கொண்டு நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்... ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி!, தன் தொட்டியில் செடி வளரவே இல்லை, பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிப் போனார்... சென்ற ஆண்டு நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா!, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]... அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள்... ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார், ஆகவே!, அவரே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவர் என்றார்... *ஆம் நண்பர்களே...!* 🟡 *நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!* 🔴 *வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம்தான். உண்மையும் நேர்மையும் உங்களைப் பாதுகாக்கும்...!!* ⚫ *நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள் ; பதவியும், புகழும் உங்களைத் தேடி வரும்...!!!* *- உடுமலை சு. தண்டபாணி*✒️ ( 94429-28401) 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
innraya SINTHANAY - சாலையோரம் கிடந்த ரூபாய் 50,000/-த்தை ஆசிரியர்களிடம் ஒப்படைத்த மாணவன் யாசினின் நேர்மையை பாராட்டினர் ஆட்சித் தலைவர்.நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் சாலையோரம் கிடந்த ரூபாய் 50,000/-த்தை ஆசிரியர்களிடம் ஒப்படைத்த மாணவன் யாசினின் நேர்மையை பாராட்டினர் ஆட்சித் தலைவர்.நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம் - ShareChat
#naayagan. பெப்ரவரி 7 மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் சொல் ஆராய்ச்சி வல்லுநர்.... பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று! திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர்! 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே! சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு தென்மொழி என ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்! இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை! பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்! ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்! தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணியாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில் கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்! தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்! 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்! உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர்! தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் ஆரிய மொழிகளுக்கு மூலம் என ஆதாரங்களுடன் வாதிட்டவர்! கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்! 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்! தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்! 😊😊😊
naayagan. - ஊழிப் பரறிஞர் மொழிஞாயிறு தா தேவபறயப் பாவாணர் ஊழிப் பரறிஞர் மொழிஞாயிறு தா தேவபறயப் பாவாணர் - ShareChat
#naayagan. பெப்ரவரி 7 மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் சொல் ஆராய்ச்சி வல்லுநர்.... பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று! திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர்! 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே! சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு தென்மொழி என ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்! இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை! பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்! ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்! தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணியாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில் கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை! தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்! தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்! 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்! உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர்! தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் ஆரிய மொழிகளுக்கு மூலம் என ஆதாரங்களுடன் வாதிட்டவர்! கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்! 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்! தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்! 😊😊😊
naayagan. - ஊழிப் பரறிஞர் மொழிஞாயிறு தா தேவபறயப் பாவாணர் ஊழிப் பரறிஞர் மொழிஞாயிறு தா தேவபறயப் பாவாணர் - ShareChat
#magill vithu magill. மகிழ். 1. நீங்கள் யார்? 2. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ? 3. யாருக்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் ? 4. யாருக்காக நீங்கள் அதை செய்கிறீர்களோ அவர்களுக்கு அது வேண்டுமா அல்லது தேவையா ? 5. நீங்கள் அதைச் செய்வதன் மூலமாக அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ? அதன் விளைவால் ஏற்படும் மாற்றம் தான் என்ன ? இந்த ஐந்தையும் தெளிவாக அறிந்திருந்தால் உங்கள் வாழ்வின் நோக்கத்தை எளிதாக அறிந்து விடலாம். முதல் இரண்டு கேள்விகளும் உங்களைப் பற்றியது . அடுத்த மூன்றும் அடுத்தவர்களைப் பற்றியது . உங்கள் நோக்கம் அனைத்தும் வெளி வட்டாரத்தை நோக்கி இருக்க வேண்டும். பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் எந்த துறையானாலும் சரி அவர்களின் கவனம் அவர்களுக்கே சேவை செய்வதை விட மக்களுக்கு சேவை என்றே இருந்து இருக்கிறது .மகிழ்ச்சிகரமான மக்கள் அடுத்தவர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். வாழ்க்கை சொல்லும் பாடம் இது தான். நீங்கள் அடுத்தவர்களை மகிழ்வாக வைக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உங்களை மகிழ்வாக வைத்துக் கொள்ளும். இந்த ஐந்து கேள்விகளையும் நீங்கள் மனப்பூர்வமாக உங்களைக் கேளுங்கள்.அதில் திருப்தி இருந்தால் நீங்கள் இப்போது செய்து கொண்டு இருப்பது தான் உங்கள் வாழ்வின் நோக்கமாகும். எனவே உங்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும் வாழ்வின் நோக்கத்தை கண்டு பிடியுங்கள். அதை அனுபவியுங்கள்... நீங்களும் மகுடம் சூட தயக்கமின்றி பேசுங்கள். சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.சாதனைகளைப் பெருக்கி விடலாம். தக்க வார்த்தைகளைத் தேர்வு செய்து தகுந்ததைப் பேசுங்கள்.தரணி புகழ் எய்திடலாம். இனிமையாகப் பேசுங்கள். எல்லோருடைய மனதிலும் இடம் பெறுங்கள். கனிவாகப் பேசுங்கள். காரியத்தை சாதிக்கலாம். நல்ல உச்சரிப்புடன் பேசுங்கள். புகழ் பெறலாம். சிறிதே பேசுங்கள் அதனைச் சிறப்பாகப் பேசுங்கள். மற்றவர்கள் பேசும் போது கவனமாகக் கேளுங்கள். மௌனமாக இருங்கள். மகான் ஆகலாம். 😊😊😊
magill vithu magill. - அழுத்தத்தோடு மை சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய் அழுத்தத்தோடு மை சிந்திக்காதே அது ஒரு போதும் வெற்றியை தராது புன்னகையோடு சிந்தித்துப்பார் புது அறிவு பிறக்கும் வெற்றி பெறுவாய் - ShareChat
#thunnbangal theera. துன்பங்களை நொடியில் நீக்கும் நரசிம்ம வழிபாடு_* * 🛕🛕🛕பெருமாளின் அவதாரங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் தோன்றினால் தாமதமாகும், அதுவரை தன்னுடைய பக்தன் துன்பப்படக் கூடாது என்பதற்காக, இந்த தூணில் இறைவன் இருக்கிறாரா என கேட்டு, இரண்யகசபு தனது கதயை ஓங்குவதற்குள் தூணிற்குள் புகுந்து அவதாரம் எடுத்து, உடனடியாக வெளிப்பட்டவர் நரசிம்மர். அதனால் கடுமையான துன்பங்களில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. > "நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை" என்பார்கள். பக்தர்கள் அழைத்ததும் உடனடியாக வந்து பலன் தரக்கூடிய தெய்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் ஸ்ரீ நரசிம்மர் என்பதே இந்த வார்த்தையின் ஆழமான பொருள். குறிப்பாக, கடும் துன்பங்களில் சிக்கியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தத்தால் வாடுபவர்கள் நரசிம்மரின் திருநாமத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்தால், அவர்களின் வேதனைகள் நொடியில் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது மட்டுமல்ல. அநியாயத்தை எதிர்த்து நிற்பதிலும், தவறான செயல்களை தண்டிப்பதிலும் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை. நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் : மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவதாக தோன்றிய அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களை விட, நரசிம்மர் தனிச்சிறப்பு பெறுகிறார். காரணம், உயிரையே பறிக்கக்கூடிய கடும் சோதனைகள் வந்தாலும், இறுதி நொடியில் கூட முழு நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களை, நேரம், இடம், சூழ்நிலை எதையும் ஆராயாமல் உடனே வந்து காப்பாற்றுவதில் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை. வேதங்களில் புகழ்பெற்ற முனிவரான காஸ்யபருக்கும் அவரது மனைவி திதிக்கும் பிறந்தவர்கள் இரு அசுர சகோதரர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு. பூமாதாவை கவர்ந்து சென்ற இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வதம் செய்து பூமியை மீட்டார். இதனால் கடும் கோபம் கொண்ட இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்து பல விசித்திரமான நிபந்தனைகளுடன் சாகா வரம் பெற்றான்.அவனுக்குப் பிறந்த மகனான பிரகலாதன், சிறு வயதிலிருந்தே மகாவிஷ்ணுவின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். இதைக் கண்டு கொதித்த இரண்யகசிபு,தன் மகனையே பல வழிகளில் கொடுமைப்படுத்தினான். இறுதியில் கோபத்தின் உச்சத்தில் அவன் பிரகலாதனை நோக்கி,"உன் விஷ்ணு எங்கே இருக்கிறான்? இந்தத் தூணில் இருக்கிறானா?" எனக் கேட்க, பிரகலாதன் அமைதியாக, "என் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என பதிலளித்தான். இதைக் கேட்ட இரண்யகசிபு ஆவேசத்துடன் அந்த தூணை உடைத்தான். அடுத்த நொடி, அகிலமே அதிரும்படி, அந்தத் தூணிலிருந்து கோபாவேசத்துடன் வெளிப்பட்டார் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி. மனிதன் பாதி, சிங்கம் பாதி எனும் அற்புத வடிவம். கோரைப் பற்கள், செக்கச்சிவந்த கண்கள், உக்கிரமான திருமேனி, அனைத்தையும் கண்டு அசுரர்கள் நடுங்கினர். இரண்யகசிபு பெற்ற வரங்களை முறியடிக்கும் வகையில், மனிதனும் அல்ல, மிருகமும் அல்லாத உருவத்தில் பகலும் இரவும் அல்லாத அந்திப்பொழுதில் அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத வாயிற்படியில், ஆயுதம் எதுவும் இன்றி தனது கூரிய நகங்களால் அசுரனை வதம் செய்தார் ஸ்ரீ நரசிம்மர். தனது பக்தன் பிரகலாதனை காக்க, தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை முற்றிலும் அழித்த தெய்வீக நிகழ்வு அது. அசுரனை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. தேவர்களும் தெய்வங்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியில், நாரதரின் அறிவுரைப்படி, சிறுவனான பிரகலாதன் முன் வந்து பாடிய துதிகளால் மட்டுமே நரசிம்மரின் உக்கிரம் தணிந்து, சாந்தமானதாக புராணங்கள் கூறுகின்றன. வழிபாட்டு நேரம் மற்றும் முறை : நரசிம்மர் அவதரித்த நேரமான மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை அவரை வழிபடுவது மிகச் சிறப்பு. மகாவிஷ்ணுவுக்குரிய துளசி, மஞ்சள் நிற மலர்கள், நைவேத்தியங்கள் இவையே நரசிம்மருக்கும் ஏற்றவை. தூய மனதோடு நரசிம்ம ஸ்லோகங்களை ஜபித்து வழிபட்டால், நோய்கள் நீங்கும், எதிரிகள் விலகுவர், மன பயம் அகலும், குடும்பத்தில் அமைதி உண்டாகும். 🍁🍁🍁
thunnbangal theera. - ShareChat
#aalayangal Arivome. சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_* * 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. > இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரி வழிபாடு :* > மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும். *சிறப்புமிக்க சிவ தலங்கள் :* வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :* 1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும். 2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். *உலகின் முதல் சிவன் கோவில் :* 3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். 4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில். *அனைத்து தோஷ பரிகார தலம் :* 5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது. 6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். *யம பயம் போக்கும் சிவ தலம்* 7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும். 8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம். *பாவம் போக்கும் புண்ணிய தலம் :* 9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம். 🍁🍁🍁
aalayangal Arivome. - ShareChat
#aalayangal Arivome. சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_* * 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது. > இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரி வழிபாடு :* > மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும். *சிறப்புமிக்க சிவ தலங்கள் :* வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். *மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :* 1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும். 2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். *உலகின் முதல் சிவன் கோவில் :* 3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். 4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில். *அனைத்து தோஷ பரிகார தலம் :* 5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது. 6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். *யம பயம் போக்கும் சிவ தலம்* 7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும். 8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம். *பாவம் போக்கும் புண்ணிய தலம் :* 9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். 10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம். 🍁🍁🍁
aalayangal Arivome. - ShareChat
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மகனைத் தேரூர்ந்த மனுவுக் கருள்வானைக்_ _🍁குகனைத் தருவானைக் கொடிய அரவத்தை_ _🍁அகலத் தணிவானை ஆரூர் மேயானை_ _🍁மகரக் குழையானை மறவேல் மடநெஞ்சே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_கன்றை இழந்து வருந்திய பசுவைக் கண்டு தன் மகன் மீது தேரை ஓட்டி நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனுக்கு அருளியவனை !! முருகனைத் தந்தவனை !! கொடிய பாம்பை மார்பில் அணிபவனை !! திருவாரூரில் உறைகின்றவனை !! மகரமீன் போன்ற குழையை அணிந்த பெருமானை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - ShareChat
#kelvi-pathil அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும் கேள்வி: சுவாமிஜி, இறைவனுக்கு படையல் படைப்பது எதற்காக? பதில்: மனித மனமானது இறைநிலையின் முடிவான பொருள். பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. அதுவே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் திணிவு பெற்று மடிப்புற்று விண் தோன்றி அது இணைந்து பஞ்சபூதங்களாகி அதன் பதம் அடைந்த கூட்டால் ஓரறிவு உயிர்கள் தோன்றி அதிலிருந்து பரிணமித்து ஆறறிவு மனிதன் வரை அவனேதான் வந்துள்ளான். இறைநிலையிலிருந்து எழுந்து வந்த நிலையில் இயங்குகின்ற உயிர்களுக்குத்தான் பசி, தாகம், இன்பம், துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஆசைகள் தோன்றும். ஏன் எனில், உயிர்களுக்கு உடலும், குடலும் வந்துவிட்டது! ஆனால் அரூபியான இறைவனுக்கு உடலும், குடலும் உண்டா? அவனுக்கு பசிக்குமா? இந்த ஒரு கேள்வியை எழுப்பி மனிதன் சிந்தனையால் விரிந்து விடையைப் பெற்று விட்டால் தேங்காய், பழம் மற்றும் பட்டு நகை இன்னும் மற்ற பொருட்கள் எல்லாம், அணு முதற் கொண்டு அண்டம் ஈராக இப்பிரபஞ்சத்தை தன்னகத்தே வைத்தும், காத்தும், இயக்கியும் வருகின்ற இறைவனுக்குத் தேவைதானா என்பது விளங்கிவிடும். வாழ்க வளமுடன்!! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹
kelvi-pathil - ShareChat