#naayagan. பெப்ரவரி 7
மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர்
சொல் ஆராய்ச்சி வல்லுநர்....
பன்மொழி வித்தகர்
தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர்.
இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார்.
சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர்!
1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே!
சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது.
தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு தென்மொழி என ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்!
இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை!
பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்!
ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்!
தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார்.
ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணியாற்றினார்.
வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில் கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை!
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்!
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்!
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்!
உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர்!
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் ஆரிய மொழிகளுக்கு மூலம் என ஆதாரங்களுடன் வாதிட்டவர்!
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்!
40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்!
தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்!
😊😊😊
#magill vithu magill. மகிழ்.
1. நீங்கள் யார்?
2. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
3. யாருக்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் ?
4. யாருக்காக நீங்கள் அதை செய்கிறீர்களோ அவர்களுக்கு அது வேண்டுமா அல்லது தேவையா ?
5. நீங்கள் அதைச் செய்வதன் மூலமாக அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ? அதன் விளைவால் ஏற்படும் மாற்றம் தான் என்ன ?
இந்த ஐந்தையும் தெளிவாக அறிந்திருந்தால் உங்கள் வாழ்வின் நோக்கத்தை எளிதாக அறிந்து விடலாம்.
முதல் இரண்டு கேள்விகளும் உங்களைப் பற்றியது .
அடுத்த மூன்றும் அடுத்தவர்களைப் பற்றியது .
உங்கள் நோக்கம் அனைத்தும் வெளி வட்டாரத்தை நோக்கி இருக்க வேண்டும். பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் எந்த துறையானாலும் சரி அவர்களின் கவனம் அவர்களுக்கே சேவை செய்வதை விட மக்களுக்கு சேவை என்றே இருந்து இருக்கிறது .மகிழ்ச்சிகரமான மக்கள் அடுத்தவர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
வாழ்க்கை சொல்லும் பாடம் இது தான். நீங்கள் அடுத்தவர்களை மகிழ்வாக வைக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உங்களை மகிழ்வாக வைத்துக் கொள்ளும்.
இந்த ஐந்து கேள்விகளையும் நீங்கள் மனப்பூர்வமாக உங்களைக் கேளுங்கள்.அதில் திருப்தி இருந்தால் நீங்கள் இப்போது செய்து கொண்டு இருப்பது தான் உங்கள் வாழ்வின் நோக்கமாகும்.
எனவே உங்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும் வாழ்வின் நோக்கத்தை கண்டு பிடியுங்கள்.
அதை அனுபவியுங்கள்... நீங்களும் மகுடம் சூட
தயக்கமின்றி பேசுங்கள்.
சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.சாதனைகளைப் பெருக்கி விடலாம்.
தக்க வார்த்தைகளைத் தேர்வு செய்து தகுந்ததைப் பேசுங்கள்.தரணி புகழ் எய்திடலாம்.
இனிமையாகப் பேசுங்கள். எல்லோருடைய மனதிலும் இடம் பெறுங்கள்.
கனிவாகப் பேசுங்கள். காரியத்தை சாதிக்கலாம்.
நல்ல உச்சரிப்புடன் பேசுங்கள்.
புகழ் பெறலாம்.
சிறிதே பேசுங்கள் அதனைச் சிறப்பாகப் பேசுங்கள்.
மற்றவர்கள் பேசும் போது கவனமாகக் கேளுங்கள்.
மௌனமாக இருங்கள்.
மகான் ஆகலாம். 😊😊😊
#thunnbangal theera. துன்பங்களை நொடியில் நீக்கும் நரசிம்ம வழிபாடு_*
* 🛕🛕🛕பெருமாளின் அவதாரங்களில் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். தாயின் கருவில் தோன்றினால் தாமதமாகும், அதுவரை தன்னுடைய பக்தன் துன்பப்படக் கூடாது என்பதற்காக, இந்த தூணில் இறைவன் இருக்கிறாரா என கேட்டு, இரண்யகசபு தனது கதயை ஓங்குவதற்குள் தூணிற்குள் புகுந்து அவதாரம் எடுத்து, உடனடியாக வெளிப்பட்டவர் நரசிம்மர். அதனால் கடுமையான துன்பங்களில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.
> "நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை" என்பார்கள். பக்தர்கள் அழைத்ததும் உடனடியாக வந்து பலன் தரக்கூடிய தெய்வங்களில் முதன்மையான இடத்தில் இருப்பவர் ஸ்ரீ நரசிம்மர் என்பதே இந்த வார்த்தையின் ஆழமான பொருள். குறிப்பாக, கடும் துன்பங்களில் சிக்கியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தத்தால் வாடுபவர்கள் நரசிம்மரின் திருநாமத்தை மனதார நினைத்து பிரார்த்தனை செய்தால், அவர்களின் வேதனைகள் நொடியில் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அது மட்டுமல்ல. அநியாயத்தை எதிர்த்து நிற்பதிலும், தவறான செயல்களை தண்டிப்பதிலும் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை.
நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் :
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவதாக தோன்றிய அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்களை விட, நரசிம்மர் தனிச்சிறப்பு பெறுகிறார். காரணம், உயிரையே பறிக்கக்கூடிய கடும் சோதனைகள் வந்தாலும், இறுதி நொடியில் கூட முழு நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களை, நேரம், இடம், சூழ்நிலை எதையும் ஆராயாமல் உடனே வந்து காப்பாற்றுவதில் நரசிம்மருக்கு நிகர் எவருமில்லை.
வேதங்களில் புகழ்பெற்ற முனிவரான காஸ்யபருக்கும் அவரது மனைவி திதிக்கும் பிறந்தவர்கள் இரு அசுர சகோதரர்கள் இரண்யாட்சன், இரண்யகசிபு. பூமாதாவை கவர்ந்து சென்ற இரண்யாட்சனை, வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு வதம் செய்து பூமியை மீட்டார். இதனால் கடும் கோபம் கொண்ட இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்து பல விசித்திரமான நிபந்தனைகளுடன் சாகா வரம் பெற்றான்.அவனுக்குப் பிறந்த மகனான பிரகலாதன், சிறு வயதிலிருந்தே மகாவிஷ்ணுவின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான்.
இதைக் கண்டு கொதித்த இரண்யகசிபு,தன் மகனையே பல வழிகளில் கொடுமைப்படுத்தினான். இறுதியில் கோபத்தின் உச்சத்தில் அவன் பிரகலாதனை நோக்கி,"உன் விஷ்ணு எங்கே இருக்கிறான்? இந்தத் தூணில் இருக்கிறானா?" எனக் கேட்க, பிரகலாதன் அமைதியாக, "என் இறைவன் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்" என பதிலளித்தான். இதைக் கேட்ட இரண்யகசிபு ஆவேசத்துடன் அந்த தூணை உடைத்தான். அடுத்த நொடி, அகிலமே அதிரும்படி, அந்தத் தூணிலிருந்து கோபாவேசத்துடன் வெளிப்பட்டார் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி.
மனிதன் பாதி, சிங்கம் பாதி எனும் அற்புத வடிவம். கோரைப் பற்கள், செக்கச்சிவந்த கண்கள், உக்கிரமான திருமேனி, அனைத்தையும் கண்டு அசுரர்கள் நடுங்கினர். இரண்யகசிபு பெற்ற வரங்களை முறியடிக்கும் வகையில், மனிதனும் அல்ல, மிருகமும் அல்லாத உருவத்தில் பகலும் இரவும் அல்லாத அந்திப்பொழுதில் அரண்மனையின் உள்ளேயும் வெளியேயும் அல்லாத வாயிற்படியில், ஆயுதம் எதுவும் இன்றி தனது கூரிய நகங்களால் அசுரனை வதம் செய்தார் ஸ்ரீ நரசிம்மர். தனது பக்தன் பிரகலாதனை காக்க, தர்மத்தை நிலைநாட்ட, அதர்மத்தை முற்றிலும் அழித்த தெய்வீக நிகழ்வு அது.
அசுரனை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் கோபம் தணியவில்லை. தேவர்களும் தெய்வங்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இறுதியில், நாரதரின் அறிவுரைப்படி, சிறுவனான பிரகலாதன் முன் வந்து பாடிய துதிகளால் மட்டுமே நரசிம்மரின் உக்கிரம் தணிந்து, சாந்தமானதாக புராணங்கள் கூறுகின்றன.
வழிபாட்டு நேரம் மற்றும் முறை :
நரசிம்மர் அவதரித்த நேரமான மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை அவரை வழிபடுவது மிகச் சிறப்பு. மகாவிஷ்ணுவுக்குரிய துளசி, மஞ்சள் நிற மலர்கள், நைவேத்தியங்கள் இவையே நரசிம்மருக்கும் ஏற்றவை. தூய மனதோடு நரசிம்ம ஸ்லோகங்களை ஜபித்து வழிபட்டால், நோய்கள் நீங்கும், எதிரிகள் விலகுவர், மன பயம் அகலும், குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
🍁🍁🍁
#aalayangal Arivome. சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_*
* 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
> இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரி வழிபாடு :*
> மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.
*சிறப்புமிக்க சிவ தலங்கள் :*
வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :*
1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும்.
2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
*உலகின் முதல் சிவன் கோவில் :*
3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில்.
*அனைத்து தோஷ பரிகார தலம் :*
5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது.
6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
*யம பயம் போக்கும் சிவ தலம்*
7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும்.
8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம்.
*பாவம் போக்கும் புண்ணிய தலம் :*
9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம்.
🍁🍁🍁
#aalayangal Arivome. சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_*
* 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
> இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரி வழிபாடு :*
> மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.
*சிறப்புமிக்க சிவ தலங்கள் :*
வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :*
1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும்.
2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
*உலகின் முதல் சிவன் கோவில் :*
3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில்.
*அனைத்து தோஷ பரிகார தலம் :*
5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது.
6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
*யம பயம் போக்கும் சிவ தலம்*
7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும்.
8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம்.
*பாவம் போக்கும் புண்ணிய தலம் :*
9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம்.
🍁🍁🍁
#sitham siva mayam
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁மகனைத் தேரூர்ந்த மனுவுக் கருள்வானைக்_
_🍁குகனைத் தருவானைக் கொடிய அரவத்தை_
_🍁அகலத் தணிவானை ஆரூர் மேயானை_
_🍁மகரக் குழையானை மறவேல் மடநெஞ்சே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_கன்றை இழந்து வருந்திய பசுவைக் கண்டு தன் மகன் மீது தேரை ஓட்டி நீதியை நிலைநிறுத்திய மனுநீதிச் சோழனுக்கு அருளியவனை !! முருகனைத் தந்தவனை !! கொடிய பாம்பை மார்பில் அணிபவனை !! திருவாரூரில் உறைகின்றவனை !! மகரமீன் போன்ற குழையை அணிந்த பெருமானை, என் பேதை மனமே நீ என்றும் மறவாமல் எண்ணுவாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#kelvi-pathil
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி, இறைவனுக்கு படையல் படைப்பது எதற்காக?
பதில்: மனித மனமானது இறைநிலையின் முடிவான பொருள். பிரபஞ்சத்தின் முதல் பொருள் இறைநிலை. அதுவே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தத்தால் திணிவு பெற்று மடிப்புற்று விண் தோன்றி அது இணைந்து பஞ்சபூதங்களாகி அதன் பதம் அடைந்த கூட்டால் ஓரறிவு உயிர்கள் தோன்றி அதிலிருந்து பரிணமித்து ஆறறிவு மனிதன் வரை அவனேதான் வந்துள்ளான்.
இறைநிலையிலிருந்து எழுந்து வந்த நிலையில் இயங்குகின்ற உயிர்களுக்குத்தான் பசி, தாகம், இன்பம், துன்பம் போன்ற உணர்ச்சிகள் உண்டு. ஆசைகள் தோன்றும். ஏன் எனில், உயிர்களுக்கு உடலும், குடலும் வந்துவிட்டது! ஆனால் அரூபியான இறைவனுக்கு உடலும், குடலும் உண்டா? அவனுக்கு பசிக்குமா? இந்த ஒரு கேள்வியை எழுப்பி மனிதன் சிந்தனையால் விரிந்து விடையைப் பெற்று விட்டால் தேங்காய், பழம் மற்றும் பட்டு நகை இன்னும் மற்ற பொருட்கள் எல்லாம், அணு முதற் கொண்டு அண்டம் ஈராக இப்பிரபஞ்சத்தை தன்னகத்தே வைத்தும், காத்தும், இயக்கியும் வருகின்ற இறைவனுக்குத் தேவைதானா என்பது விளங்கிவிடும்.
வாழ்க வளமுடன்!!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹
#innraya SINTHANAY எந்த ஒரு செயலை நீ செய்ய விரும்பினாலும்
முதலில் பேசுவதை நிறுத்தி
செயலை தொடங்கு…
---
🌿பேச்சு நமக்கு நிம்மதி தரும்.
செயல் வாழ்க்கையை மாற்றும்.
பல கனவுகள்
அழகான வார்த்தைகளில் தொடங்கி
அங்கேயே முடிந்துவிடுகின்றன.
வெற்றியை நகர்த்துவது
விளக்கம் அல்ல — செயல்.
---
🔥 1. பேச்சு சக்தியை சிதறடிக்கும்
செயல் சக்தியை ஒருங்கிணைக்கும்
அதிகமாக பேசும் போது
ஆற்றல் வெளியேறுகிறது.
👉 செயலில் இறங்கும் போது
அதே ஆற்றல் ஒரே திசையில் செல்கிறது.
---
🔥 2. அறிவிப்புகள் தேவையில்லை
ஆதாரம் போதும்
“நான் செய்யப்போகிறேன்”
என்று சொல்ல வேண்டாம்.
👉 “நான் செய்தேன்”
என்று முடிவுகள் பேசட்டும்.
---
🔥 3. பேசப் பேச பயம் பெரிதாகும்
செயலில் பயம் சுருங்கும்
யோசனை பயத்தை வளர்க்கும்.
👉 முயற்சி உண்மையை காட்டும்.
ஒரு முயற்சி = ஒரு தெளிவு.
---
🔥 4. அமைதி கவனத்தை கூர்மையாக்கும்
சத்தம் — குழப்பம்.
👉 அமைதி — தெளிவு.
அமைதியாக உழைக்கும் போது
சிறிய திருத்தங்களே பெரிய முன்னேற்றம்.
---
🔥 5. சிறிய செயல்
பெரிய பேச்சை விட வலிமை
ஒரு நாள் 10 நிமிட உண்மையான செயல்
ஒரு மாத பேச்சை விட மதிப்பு.
சிறியது என்று அலட்சியம் செய்யாதே.
---
🔥 6. ஒப்புதல் தேடாதே
முன்னேற்றம் தேடு
“சரி தானா?” என்று கேட்டால்
நிற்பாய்.
👉 “நான் தொடங்குகிறேன்” என்றால்
நகர்வாய்.
---
🔥 7. செயல் தான் சந்தேகங்களை கரைக்கும்
சந்தேகம் — யோசனையில்.
👉 பதில் — முயற்சியில்.
செயல் தொடங்கியவுடன்
பல கேள்விகள் தானாக தீரும்.
---
🔥 8. சத்தமில்லா தொடக்கம்
நிலையான முடிவு
சத்தமாக தொடங்கியவை
அமைதியாக மறையும்.
👉 அமைதியாக தொடங்கியவை
நிலையாக வளரும்.
---
🔥 9. இன்று தொடங்குவது தான் தைரியம்
நாளை சொல்வது எளிது.
👉 இன்று செய்வது தான் மனபலம்.
இன்று எடுத்த ஒரு அடி
நாளைய திசையை தீர்மானிக்கும்.
---
🔥 10. வாழ்க்கை கேட்கும் ஒரே சான்று
👉 நீ என்ன செய்தாய்?
சொன்னதல்ல.
செய்ததுதான்.
---
🌟 முடிவுரை
கனவு இருக்கட்டும்.
திட்டம் இருக்கட்டும்.
👉 ஆனால் இன்று
ஒரு சிறிய செயல் இருக்கட்டும்.
எந்த ஒரு செயலை நீ செய்ய விரும்பினாலும்
முதலில் பேசுவதை நிறுத்தி
செயலை தொடங்கு…
அமைதியாக.
தொடர்ச்சியாக.
உறுதியுடன்.
உன் செயல் தான் உன் குரல். 🔥
🌹🌹🌹
#anuppavum. ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்…
அதுவே நாம் வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்…!!
---
🌿வாழ்க்கை நமக்கு
நேரடியாக வெற்றியை கற்றுத் தருவதில்லை.
👉 அது அனுபவங்களை தருகிறது.
சில அனுபவங்கள் இனிமை.
சில அனுபவங்கள் வலி.
சில அனுபவங்கள் மறக்க முடியாதவை.
ஆனால் வாழ்க்கை
ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்பார்க்கிறது—
👉 “இதிலிருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?”
அந்த ஒரு கேள்விக்கான
நேர்மையான பதிலே
நம்மை வெற்றியாளனாக மாற்றுகிறது.
---
🔥 1. அனுபவம் என்பது சம்பவம் அல்ல
அது ஒரு பாடம்
ஒரு சம்பவம் நடந்தது
என்பதே அனுபவம் இல்லை.
👉 அதைப் பற்றி நீ
எப்படி சிந்தித்தாய்,
எப்படி புரிந்துகொண்டாய்,
எப்படி மாறினாய்
என்பதே அனுபவம்.
கற்றுக்கொண்டால் —
அது வாழ்க்கைப் பாடம்.
கற்றுக்கொள்ளாவிட்டால் —
அதே சம்பவம் மீண்டும்.
---
🔥 2. வலி தான்
ஆழமான பாடங்களை கற்றுத் தரும்
சுகம் மகிழ்ச்சி தரும்.
👉 வலி புரிதலை தரும்.
அதனால் தான்
வலியிலிருந்து வந்த அனுபவங்கள்
நம்மை அதிகமாக
மாற்றிவிடுகின்றன.
வலியை
சுமையாக அல்ல —
ஆசானாக மாற்றினால்
நீ வளர்கிறாய்.
---
🔥 3. தோல்வி ஒரு அவமானம் அல்ல
ஒரு பயிற்சி
தோல்வி வந்தவுடன்
பலர் தங்களை குறை சொல்லிக்கொள்கிறார்கள்.
👉 ஆனால் தோல்வி
“நீ முடிவுக்கு வந்தாய்”
என்று சொல்லவில்லை.
👉 அது
“இந்த முறையை மாற்று”
என்று தான் சொல்கிறது.
அதை புரிந்தவன் தான்
முன்னேறுகிறான்.
---
🔥 4. மனிதர்களும் அனுபவங்கள் தான்
சிலர்
அன்பு கற்றுத் தருவார்கள்.
சிலர்
எல்லை கற்றுத் தருவார்கள்.
சிலர்
எச்சரிக்கை ஆகிவிடுவார்கள்.
👉 யாரும்
ஒரு பாடம் சொல்லாமல்
வாழ்க்கையிலிருந்து
போக மாட்டார்கள்.
பாடத்தை எடுத்துக்கொண்டால் —
அமைதி.
எடுத்துக்கொள்ளாவிட்டால் —
மனவேதனை.
---
🔥 5. ஒரே தவறை
மீண்டும் செய்வதே உண்மையான தோல்வி
ஒரு முறை விழுந்தால்
அது அனுபவம்.
👉 அதிலிருந்து
பாடம் எடுக்காமல்
மீண்டும் விழுந்தால்
அது அலட்சியம்.
கற்றவன்
அதே இடத்தில்
இரண்டாவது முறை
விழ மாட்டான்.
---
🔥 6. அனுபவம்
முடிவுகளை கூர்மையாக்கும்
இன்று நீ எடுக்கும்
நிதானமான முடிவுகள்
நேற்றைய அனுபவங்களின்
விளைவு தான்.
👉 அனுபவம் இல்லாதவன்
அவசர முடிவெடுப்பான்.
👉 அனுபவம் உள்ளவன்
அமைதியாக முடிவு எடுப்பான்.
அமைதி தான்
வெற்றியின் அடையாளம்.
---
🔥 7. அனுபவத்தை சுமையாக அல்ல
சக்தியாக மாற்று
“ஏன் இது எனக்கு?”
என்று கேட்டால்
வலி பெருகும்.
👉 “இதிலிருந்து என்ன?”
என்று கேட்டால்
வலிமை உருவாகும்.
கேள்வி மாறினால்
வாழ்க்கையும் மாறும்.
---
🔥 8. அனுபவம்
உன்னை உன்னிடம் அறிமுகப்படுத்தும்
நீ எங்கே சோர்வடைகிறாய்?
எங்கே எழுகிறாய்?
எதைக் கையாள முடிகிறது?
எதை தவிர்க்க வேண்டும்?
👉 இந்த உண்மைகள்
அனுபவத்தில் தான்
வெளிப்படும்.
அந்த அறிமுகமே
முதிர்ச்சி.
---
🔥 9. வெற்றி என்பது
அனுபவங்களை இணைத்த தொகுப்பு
வெற்றி
ஒரு நாள் நிகழ்வு அல்ல.
👉 அது
பல தோல்விகள் +
பல திருத்தங்கள் +
பல பாடங்கள்
= உருவாகும் ஒரு நிலை.
அந்த நிலையை அடைவது
கற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே.
---
🔥 10. வாழ்க்கையின் எளிய சூத்திரம்
👉 அனுபவம் +
👉 பாடம் +
👉 மாற்றம் =
👉 முன்னேற்றம்
இதில்
“பாடம்” இல்லையென்றால்
அனுபவம் வீணாகிவிடும்.
---
🌟 முடிவுரை
வாழ்க்கையில் நடந்ததை
நாம் மாற்ற முடியாது.
👉 ஆனால்
அதிலிருந்து
என்ன கற்றுக்கொண்டோம்
என்பதை மாற்றலாம்.
அந்த ஒரு முடிவே
உன்னை
மற்றவர்களிடமிருந்து
வேறுபடுத்தும்.
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும்
ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்…
அதுவே நாம் வாழ்க்கையில்
வெற்றியடைய உதவும்…!!
இன்று ஒரு அனுபவத்தை நினை.
அதில் இருந்து ஒரு பாடத்தை எழுது.
👉 அதுவே
நாளைய உன் வெற்றியின்
அடித்தளம். 🌱✨
🌹🌹🌹
#kaaranangal.
*_கண் திருஷ்டி எல்லாம் சும்மா! உங்க பிளான் உருப்படாம போக உண்மையான காரணம் இதுதான்!_*
* 🌹🌹🌹நம்மில் பலருக்கும் வாழ்க்கையில் பெரிய பெரிய திட்டங்கள் இருக்கும். ஒரு புதிய வேலையில் சேருவது, சொந்தமாகத் தொழில் தொடங்குவது, வீடு கட்டுவது அல்லது திருமணம் செய்வது என ஏதோ ஒரு லட்சியம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
இந்தத் திட்டங்களை நாம் மனதிற்குள் வைத்திருக்கும் வரை அது மிகத் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். ஆனால், அந்தத் திட்டத்தை நம் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ பகிர்ந்துகொண்ட சிறிது நேரத்திலேயே, அந்த ஆர்வம் குறைந்துபோவதை நாம் உணர்ந்திருப்போம்.
ஏன் இப்படி நடக்கிறது என்று நாம் எப்போதாவது யோசித்தது உண்டா. நாம் ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் அதை ஏன் மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்பதற்கான உளவியல் காரணங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அனுமதி கேட்கும் மனம்!
நமது ஆழ்மனம் மிகவும் விசித்திரமானது. நாம் ஒரு புதிய ஐடியாவை மற்றவர்களிடம் சொல்லும்போது, அதை வெறும் தகவலாக மட்டும் பகிர்வதில்லை. நம்மை அறியாமலே நாம் அவர்களிடம் அனுமதி கேட்பது போலவே நமது ஆழ்மனம் செயல்படுகிறது. நான் இதைச் செய்யலாமா, இது சரியாக வருமா என்று மறைமுகமாக நாம் அடுத்தவரின் அங்கீகாரத்தைத் தேடுகிறோம். நாம் யாரிடம் பகிர்கிறோமோ, அவர்கள் அந்தத் துறையில் நிபுணராக இல்லாவிட்டாலும், அவர்களின் கருத்து நம் முடிவை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக மாறிவிடுகிறது.
தவறான விமர்சனங்கள்!
நாம் ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கும்முன் எப்படி Reviews பார்க்கிறோமோ, அதேபோலத்தான் நமது வாழ்க்கைத் திட்டங்களுக்கும் அடுத்தவர்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறோம். ஆனால் இங்கு ஒரு சிக்கல் உள்ளது. நாம் கேட்கும் நபர்கள், அந்த விஷயத்தை ஏற்கனவே செய்து தோற்றுப்போனவர்களாகவோ அல்லது அதைச் செய்ய பயப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் பயத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் நம் மீது திணிப்பார்கள். "இதெல்லாம் செட் ஆகாது", "ரிஸ்க் எடுக்காதே" என்று அவர்கள் கூறும் எதிர்மறை வார்த்தைகள், நமது நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்துவிடும். விளைவு, நாம் அந்தத் திட்டத்தையே கைவிட்டுவிடுவோம்.
Comfort Zone & பயம்!
நமது மூளை எப்போதுமே பாதுகாப்பைத்தான் விரும்பும். புதிதாக ஒன்றைச் செய்யும்போது ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்கவே அது நினைக்கும். இந்நிலையில், நாம் திட்டத்தைப் பகிரும்போது யாராவது ஒரு சிறிய சந்தேகத்தை எழுப்பினாலும், நமது மூளை அதைப் பிடித்துக்கொண்டு "பார்த்தாயா, இது ஆபத்தானது" என்று நம்மை எச்சரிக்கத் தொடங்கிவிடும். நாம் ஆர்வமாக ஆரம்பித்த வேகம் அப்படியே நின்றுவிடும். நமக்குத் தெரிந்தவர்கள் நம்மைப் பாதுகாப்பதாக நினைத்துக்கொண்டு, நமது வளர்ச்சியைத் தடுக்கும் அறிவுரைகளையே பெரும்பாலும் வழங்குவார்கள்.
எப்போது பகிரவேண்டும்?
அப்படியானால் யாரிடமுமே எதையும் சொல்லக்கூடாதா என்றால் அப்படி இல்லை. செயலில் இறங்கிய பிறகு, தொழில்நுட்ப ரீதியான உதவிகளுக்கோ அல்லது வழிகாட்டுதலுக்கோ சரியான நபரிடம் கேட்பதில் தவறில்லை. ஆனால் ஒரு விஷயத்தைத் தொடங்குவதற்கு முன்பே, சும்மா ஒரு பேச்சுக்காகவோ அல்லது பாராட்டு கிடைக்கும் என்றோ பகிர்வதுதான் ஆபத்தானது. செயல் வடிவத்திற்கு வராத வெறும் கனவுகளை பகிர்வது, அந்தக் கனவு கலைவதற்கே வழிவகுக்கும்.
முதலில் செயலில் இறங்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட தூரம் பயணித்த பிறகு, முடிவுகள் கண்ணுக்குத் தெரியும் போது தானாகவே உலகம் அதைத் தெரிந்துகொள்ளும். அதுவரைக்கும், "வாயை மூடி, வேலையைப் பார்" என்ற மந்திரமே நமது வெற்றிக்கு வழிவகுக்கும். நமது கனவுகளைப் பாதுகாப்பது நமது பொறுப்பு. அதை அடுத்தவர்களின் பயம் நிறைந்த விமர்சனங்களுக்கு இரையாக்காமல், அமைதியாக உழைத்து வெற்றி பெறுவதே புத்திசாலித்தனம்.
🌹🌹🌹













