saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#innraya SINTHANAY சிந்தனை*.( 14.05.2026). ……………………………… *உருவம் சிறியது என்றாலும்’’..* .............................. தாழும்பூவின் மடல் பெரியதாக இருந்தாலும் வாசம் அதிகம் தருவதில்லை.. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல நறுமணத்தைத் தருகிறது.. கடலின் நீர் துணி துவைக்கக் கூட உதவுதில்லை.. ஆனால் கடலின் அருகில் தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது. எனவே எதையும் அதன் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது.. தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்து கொண்டு இருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார். துணியைத் தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப் படுத்தினார். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மகன் அவரிடம், “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாகக் காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்?” என்று கேட்டான். நீ சொல்வது உண்மை தான். கத்திரிக்கோல் அழகாகவும், மதிப்பு உள்ளதாக இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது! ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. ஒருவருடைய மதிப்பு அவரின் செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல “ என்றார். *ஆம்.,நண்பர்களே..* மிளகு என்பது கடுகை விட பெரியது என்றாலும் அதன் காரம் அதிகம்... கடுகு உருவில் சிறியதாக இருந்தாலும் மிளகிற்கு இணையான காரம் கடுகில் உண்டு. அதைப் போலத்தான்., ஒரு மனிதனின் உடையைப் பார்த்தோ, உருவத்தைப் பார்த்தோ எடை போடக் கூடாது.. அவரின் செயலை வைத்தே அவரை மதிப்பீடு செய்ய வேண்டும்.. ( உடுமலை. சு.தண்டபாணி).💐💐💐🙏🏻🌹🌹
innraya SINTHANAY - ஒருவரின் உருவத்தை வைத்து அவரின் எடை போடக் திறமையை கூடாது அவரின் மதிப்பு செயலைக்கொண்டே நிர்ணயம் செய்ய வேண்| ا. ஒருவரின் உருவத்தை வைத்து அவரின் எடை போடக் திறமையை கூடாது அவரின் மதிப்பு செயலைக்கொண்டே நிர்ணயம் செய்ய வேண்| ا. - ShareChat
https://www.facebook.com/share/1hoRkC4v8B/ #NEEDOOLI Vaalga.
NEEDOOLI Vaalga. - ShareChat
Facebook
#oruvaray thavaraaga edaippodaathe.
oruvaray thavaraaga edaippodaathe. - Don'1 judge by 0 Appearances; A Rich Heart may be under 0 poor coat. Don'1 judge by 0 Appearances; A Rich Heart may be under 0 poor coat. - ShareChat
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁மேவாது வெற்றுரைசொல் மிண்டர்களுக் கருளில்லாய்_ _🍁சாவாத மூவாத தன்மையனே சங்கரனே_ _🍁பூவாரும் பொன்னடியாய் பொழிலாரும் ஆமாத்தூர்த்_ _🍁தேவாவென் றுள்கசிவார் செல்வமெலாம் பெறுவாரே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_உன்னை விரும்பாமல் பயனற்ற சொற்களைப் பேசும் கல்நெஞ்சர்களுக்கு அருள் இல்லாதவனே !! இறப்பும் மூப்பும் இல்லாதவனே !! நன்மை செய்பவனே !! பூக்கள் பொருந்திய பொற்பாதனே !! பூப் போன்ற அழகிய திருவடியை உடையவனே !! சோலை சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற தேவனே என்று உள்ளம் உருகி வழிபடும் அன்பர்கள் எல்லாச் செல்வங்களும் பெறுவார்கள் !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - ShareChat
#vaalkkay malargal மலர்கள்: மே 14 மூலமும், முடிவும் அன்பும் கருணையும், மகிழ்ச்சியும், நிறைவும் வேண்டுமானால், இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும். சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதன்று என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே. ஆனால் பருவம் வந்தபின் புறவழிபாட்டிலிருந்து அகவழிபாடு தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கரு தவசாதனை அவசியம் வேண்டும். அப்போது தான், மனம் ஒரு சம நிலையிலேயே இருக்கும், உயர் நிலையிலே அறிவை இயக்கவும் முடியும். இங்கே தான் மனம் அமைதி பெறும். எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. அதனை எந்தப் பொருளிலும், எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லை கட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையைப் பெற முடியாது. பொருளில், இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும். அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில், இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டு விட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். மேலும் பரநிலையுணர்வும், அதில் அடங்கி இணைந்து நிலை பெறும் பேறு கிடைக்காத போது, அறிவு தான், தனது என்னும் தன் முனைப்பில் உணர்ச்சிவயமாகி, புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும், சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும். தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்பு நிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து, நிறைவும் அமைதியும் பெறும். - அருட்தந்தை வேதாத்திரி மகரிசி 🌹🌹🌹
vaalkkay malargal - ShareChat
#kelvi அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும் கேள்வி: சுவாமிஜி! ஆன்மசாந்தி தவம் எவ்வாறு இயற்றுவது? பதில்: உடலைவிட்டுப் பிரிந்த உயிர், அந்த உடலை அடக்கம் செய்வதற்கு முன் அந்த உடலைச் சுற்றியேதான் இருக்கும். அதன் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அந்த உடல் இருக்கும் பொழுதோ அல்லது உடலை அடக்கம் செய்த பின்போ, துரியாதீதம் பயின்றவர்கள் சுமார் ஆறு பேருக்குக் குறையாமல், அமர்ந்து தவமியற்ற வேண்டும். முதலில், ஆக்கினை, துரிய தவமியற்றி, துவாதசாங்கத்தில் நின்று, பிரிந்த ஆன்மாவைச் சங்கல்பத்தால் இணைத்துக் கொண்டு, சக்திகளத்தில் விரிந்த நிலையில் அந்த ஆன்மாவைப் பரவவிட்டு, பிரித்துவிட்டு, சிவகளம் சென்று, அந்தத் தூயவெளியில் மனதைத் தூய்மை செய்துவிட்டு தவத்தை நிறைவு செய்ய வேண்டும். இதற்குத்தான் ஆன்ம சாந்தி தவம் என்று பெயர். வாழ்க வளமுடன்! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹
kelvi - ShareChat
#sinthiungal nanbargale.
sinthiungal nanbargale. - Goocl Ilorring எல்லா சூழ்நிலைக்கும் பொருந்த  Ru 0n று அமைதி  ஒன எந்த சூழ்நிலைக்கும்  பொருந்தாத  று கோபம் ஒன Goocl Ilorring எல்லா சூழ்நிலைக்கும் பொருந்த  Ru 0n று அமைதி  ஒன எந்த சூழ்நிலைக்கும்  பொருந்தாத  று கோபம் ஒன - ShareChat
#sirappaana Eduthurayppu.
sirappaana Eduthurayppu. - கேள்விகள் பதில்களில் இருந்து OLIpLILILLLGOOI Good morning என்பதை அறிந்தால் போதும் தேர்வில் Suresh Narayanan தோல்வியடையும் வாய்ப்பு இல்லை. ٠ ١٣٨٧٤ ٠ 600| ٥٨٧  கேள்விகள் பதில்களில் இருந்து OLIpLILILLLGOOI Good morning என்பதை அறிந்தால் போதும் தேர்வில் Suresh Narayanan தோல்வியடையும் வாய்ப்பு இல்லை. ٠ ١٣٨٧٤ ٠ 600| ٥٨٧ - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - பிரச்சனைகள் வரத்தபரக வந்து நின்றால் பயந்துவடாதீர்கள். அவற்றை ஒவ்வொன்றாக, படிப் படியாக அணுகினால் வென்றுவடுவீர்கள் When problems come allat fime dont panic. Attend a step to them one by one and 'Il emerge by step and ٧0٧| victorious பிரச்சனைகள் வரத்தபரக வந்து நின்றால் பயந்துவடாதீர்கள். அவற்றை ஒவ்வொன்றாக, படிப் படியாக அணுகினால் வென்றுவடுவீர்கள் When problems come allat fime dont panic. Attend a step to them one by one and 'Il emerge by step and ٧0٧| victorious - ShareChat