சிந்தனை
- நம் நன்மைகள்.
மருந்து உண்பதால் நோய் தீருமே தவிர மகிழ்ச்சி வந்து விடாது.
படிப்பதால் அறிவு வளருமே ஒழிய ஒழுக்கம் வந்து விடாது.
ஒரு ஆசிரியர் அடுத்தத் தேர்வைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி எண்ணுகிறார்.
ஒரு ஆன்மீகவாதி அடுத்த பிறப்பைப் பற்றி எண்ணுகிறார்.
ஆசைகள் குறையும் பொழுது அமைதி பெருகுகிறது.
உயர்ந்தோர் நட்பு பழகப் பழக இன்பம் தரும்.
அன்பான வரவேற்பு பாதி விருந்திற்குச் சமம்.
கருணை உடையவர்க்கு துன்பம் உலகு (நரகம்) இல்லையாகும்.
பிறர் நமக்கு செய்த நன்மையை மறக்கக் கூடாது.
நாம் பிறருக்கு செய்த நன்மையை மறந்து விட வேண்டும்.
தீய செயல்களை செய்பவனிடத்தில் வறுமை வந்து சேரும்.
நல்ல வழியில் வந்த செல்வம் தான் சந்ததிகட்குப் பயன்படும்.
ஒருவனுடைய அறிவு அவன் செய்யும் செயல்களால் அளவிட வேண்டும், பேச்சால் அல்ல.
தற்பெருமை, பேராசை, கஞ்சத்தனம் ஆகிய இம்மூன்றும் மனிதனை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.
இறப்பு நம்மை நெருங்கும் முன்பே நல்ல செயல்களைச் செய்து விட வேண்டும்.
வாழ்க வளமுடன். 😊😊😊 #innraya SINTHANAY
#sinthanay Pathigam. மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க என்ன செய்வது?
வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது.
வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமானது. குடும்பத்தை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் பொறுப்பு குடும்பத் தலைவரிடம் இருக்கிறது. தொழில், பணி நிமித்தமாக குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றாலும் அவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நபராக விளங்க வேண்டும். அதை அவர்கள் உணர்வுப்பூர்வமாக உணரும் விதத்தில் நடந்து கொள்ளவும் வேண்டும். கிடைக்கும் ஓய்வு நேரங்களையெல்லாம் குடும்பத்தினருடன் செலவிட முயற்சிக்க வேண்டும். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானது தான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது குடும்பத்தினர் உங்களுடன் நெருங்கிப் பழகுவதற்கு வழிவகை செய்யும்.
குழந்தைகளிடம் அவர்களின் படிப்பு சார்ந்த விஷயங்களை மட்டுமின்றி அவர்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றியும் பேசுங்கள். மனைவி மற்றும் பெற்றோரிடம் அவர்களுடைய உடல்நிலை மற்றும் மன நலன் சார்ந்த விஷயங்களைப் பேசுங்கள். அவர்கள் சொல்ல வரும் கருத்தை காது கொடுத்துக் கேளுங்கள். இடைஇடையே குறுக்கிட்டு அவர்கள் பேசும் விஷயத்தை திசை திருப்புவதற்கு முயற்சி செய்யாதீர்கள்.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் அணுகுமுறைகள், செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் மனம் விட்டுப் பாராட்டுங்கள். அது அவர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்தும். மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.
குழந்தைகளிடம் பேசுவதற்கு தினமும் நேரம் ஒதுக்கிவிட வேண்டும். அவர்கள் கேட்கும் சந்தேகங்கள், பேச விரும்பும் விஷயங்களை ஆர்வமாகக் கேட்க வேண்டும். அது அவர்களுக்கு உங்கள் மேல் உள்ள நம்பிக்கையையும், மதிப்பையும் உயர்த்தும். வெளியிடங்களில் தவறான நட்புகளில் இருந்து அவர்கள் விலகவும் உதவும்.
இரவு வேளையில் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்படி ஒன்றாக சாப்பிடுவது பந்தத்தை பலப்படுத்தும். அன்பையும் மேம்படுத்தும்.
வாரத்திற்கு ஒரு முறையாவது வெளிஇடங்களுக்கு செல்வதற்கு திட்டமிடுங்கள். அது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் போதுமான நேரத்தை செலவிடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகள், வீட்டுத் தோட்டம் போன்ற விஷயங்களில் குடும்பத்தினர் அனைவரும் குழுவாக இயங்குங்கள். பள்ளி விடுமுறை காலங்களில் சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள். அது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கும் போதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து பாடி, இசைக்கு நடனமாடுங்கள். அது உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் அளிக்கும்.
🌹🌹🌹
#innraya SINTHANAY சிந்தனை...*
*இந்த உலகத்தை வெல்வதை விட.. உங்களை முதலில் வெல்லுங்கள்..!!*
- ரெனே டெஸ்கார்ட்டஸ்
"வேலைகள் குவிந்து கிடக்கு. நேரமேயில்லையே' என்கிற அங்கலாய்ப்பை அதிகம் கேட்டிருப்போம். ஏன், நாமே பேசியுமிருப்போம். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் என்பது எங்கேயும், எப்போதும், எல்லாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அப்புறம் யாருக்கு, எதற்குத்தான் இந்த அங்கலாய்ப்பு?
துருக்கி நாட்டு கதை ஒன்றை சமீபத்தில் கேட்டேன். அந்நாட்டு மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்றானாம். வேட்டையாடுவதில் திளைத்துப் போன மன்னன் நேரம் கடந்து போனதையே கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மாலை மங்கி இரவு ஆகிவிட்டதால், மன்னனால் அரண்மனைக்குத் திரும்ப முடியவில்லை. வழியில் இருந்த ஒரு நெசவாளரின் வீட்டில் மன்னன் தங்கினானாம். அந்த நெசவாளருக்கு தன் வீட்டிற்கு வந்து தங்கியிருப்பவர் நாட்டின் மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என்று எண்ணியிருந்தான்.
அரசன் காலையில எழுந்தபோது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்து. ""அந்தக் கயிறு எதற்கு?'' என்று அரசன் கேட்டதற்கு, ""தொட்டியில் இருக்கிற குழந்தைய ஆட்டுறதுக்கு. குழந்தை அழுதுச்சுன்னா... நெய்துக்கிட்டே குழந்தைய ஆட்டிவிடுவேன்'' என்று நெசவாளி சொன்னானாம். அவனருகில் ஒரு நீண்ட குச்சி ஒன்று இருந்தது.
""இது என்ன குச்சி?'' என்று மன்னன் கேட்டானாம். ""வெளியில என் மனைவி தானியங்களைக் காயப்போட்டிருக்கா. இந்தக் குச்சியின் அடுத்த முனையில கருப்புத் துணிய நான் கட்டியிருக்கேன். இதை அசைச்சா பறவைகள் பக்கத்தில வராது'' என்று நெசவாளன் சொன்னானாம்.
அந்த நெசவாளர் இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ""இது எதுக்குப்பா?'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுல ஒரு எலி இருக்குது, அப்பப்ப இந்த மணிகளை அசைச்சா அந்த சத்தத்தில எலி ஓடிரும்'' என்றானாம். அவன் வீட்டு ஜன்னலுக்கு வெளியே நான்கைந்து சிறுவர்கள் முகம் தெரிந்தது. ""அவர்கள் யார்?'' என்று மன்னன் கேட்டபோது, ""நெசவு செய்யிறப்ப வாய் சும்மாதான இருக்குது. அதனால எனக்குத் தெரிஞ்ச பாடங்களை அந்த சிறுவர்களுக்கு நடத்துவேன்'' என்றானாம். ""சரி, அதுக்கு அவங்க எதுக்கு வெளியில நிற்கிறாங்க'' என்று மன்னன் கேட்க, ""வீட்டுக்கு முன்னால இருக்கிற மண்ணை காலால குலைச்சுகிட்டே... காதால என் பாடத்தை கேட்டுக்குவாங்க'' என்றானாம். ""அது மட்டுமில்ல, என் மனைவி கிரேக்கத்துப் பெண். அவள் தினமும் எனக்கு பத்து கிரேக்க வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி தந்துவிட்டு செல்வாள். என் வேலைகளை செய்துகிட்டே அதையும் படிக்கிறேன்'' என்று சொன்னானாம். வியந்து போனான் மன்னன்.
ஒருவன் விரும்பினால் ஒரே நேரத்துல கற்றுத்தரவும், கற்றுக்கொள்ளவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்கவும் முடியம். கவனமான கடின உழைப்பு எப்போதுமே பலன் தரும். வயதும், இளமையும் இருக்கின்றபோது வருகின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழிக்காமல் பணியாற்றும், எந்தவொரு மாணவனும், இளைஞனும் அவனது நடுத்தர வயதுகளிலேயே உச்சம் தொட்டிருப்பான். இதுவே வாழ்வின் நியதி.
"நேரமே இல்லை' என வேலைகளை ஒத்திப்போடுதல் ஒரு மாயை. அது எப்படி... சுறுசுறுப்பானவர்களுக்கு மட்டும் நேரம் இருந்து கொண்டே இருக்கிறது? சோம்பல் உள்ளவர்களுக்கு சோம்பல் முறிக்கவே நேரம் இருக்காது. ஒரு காரியத்தை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று கடமையில் இருந்து நழுவுகிறவர்கள் சோம்பலால் மடிகிறார்கள். பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டு விட்டு, அதை முடிக்க முடியவில்லையே என்று மனதால் அலட்டிக் கொள்ளாமல், உரிய காலத்தில் பணிகளை முடித்து மனதுக்குப் பூரண ஓய்வு கொடுத்து, அடுத்த வேலைக்குத் தயாராகின்ற சுறுசுறுப்பு மந்திரமே வெற்றிக்குத் துணை செய்யும்.
அறிஞர் எமர்சனை பார்த்து ஒருவர் கேட்டாராம், ""உங்கள் வயது என்ன?'' என்று. ""360 ஆண்டுகள்'' - இது எமர்சனின் பதில். ""என்னால் நம்ப முடியவில்லை. இது இயலாத காரியம். உங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்காது'' என்று கேள்வி கேட்டவர் அலறினார். எமர்சன் சொன்னார்: ""நீங்கள் சொல்வது சரிதான். எனது உண்மையான வயது அறுபதுதான். ஆனால் உங்களைவிட 6 மடங்கு அதிகமாக வாழ்ந்திருக்கிறேன். 360ஆண்டுகள் எப்படி வாழ முடியுமோ, அவ்விதம் இந்த 60 ஆண்டுகளைப் பயன்படுத்தி இருக்கிறேன்'' என்றாராம். நாம் எவ்வளவு காலம்
வாழ்ந்திருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நாம் நமது நேரத்தை உழைப்பில் விதைக்க, ஒவ்வொரு நாளின் பணிகளையும் முந்தைய நாளே திட்டமிட்டுக் கொள்வது சிறப்பு. செய்வதற்கு வேலைகள் இருந்தால் மனம் எப்போதும்சுறுசுறுப்போடும், உற்சாகத்தோடும் தானே இருக்கும்? உண்மையான பரவசம் என்பது ஒரு வேலையை ஈடுபாட்டோடு, துரிதமாக, சரியாகச் செய்வதுதான். இதுவே உற்சாகம். படைப்பாளி, ஆராய்ச்சியாளர், தொழில்முனைவோர் மற்றும் விற்பனையாளர்களின் மந்திரமூலிகை இதுதான். ஒருவர் அதிக நேரம் தூங்குவது தேவையினால் அல்ல. பழக்கத்தினால்தான். துôங்கும் நேரத்தை வரையறை செய்து வெற்றி பெற்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம்.
வேலைப்பளுவும், வேலைகளின் எண்ணிக்கையும், பொறுப்புகளும் கூடக் கூட, மிரண்டுபோய், அயர்ச்சியில் நேரமில்லை என்று பேசும் வெட்டிப் பேச்சுகள், ஒரு நாளைக்கு "24 மணிநேரம்' என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களின் மடமைக் கூற்று.வேலைகள் அதிகரிக்கின்றபோது, கடிகாரம் நிற்காது. கடிகாரத்தோடு ஓடிக்கொண்டே நாமும் நம் பணிகளைத் துரிதபடுத்த... நமக்கான நேரமும் கூடுதலாகும் என்கிற இரகசியம் அறிந்துகொள்வோம்.
*💗வாழ்க வளமுடன்💗*
🌹🌹🌹
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (08.02.2026)*
.........................................................................
*''நட்பின் இலக்கணம்...!"*
.........................................................
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாய் இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது, நல்ல நட்பு இதயம் போல உங்களுக்கு தெரியாமலே உங்களுக்காக துடிக்கும்...
நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்க விடுவார்களோ!, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள்...
நல்ல நண்பர்கள் உங்களுடைய மகிழ்ச்சியின்போது காணாமல் போனாலும், உங்களுடைய துயர வேளையில் உறுதியாக உங்களோடு இருப்பார்கள். தங்களைப் பற்றிய தற்புகழ்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடைய உரையாடலைக் கவனமுடனும், ஈடுபாட்டுடனும் கேட்பது நல்ல நண்பனின் அடையாளம்...
சட்டென்று வருபவர்களை தெரியாமல் நட்பாகிக் கொண்டால் அந்த நட்பு கேடாய்தான் முடியும். 'மனம் கனத்திருக்கிறது, பணம் எனக்கு தேவையாக இருக்கிறது. எனக்கு உன் உதவி தேவையிருக்கிறது' என்று உங்களிடம் உதவி கேட்டு வரும் நண்பர்கள் சிலர் இருப்பார்கள்...
நட்பின் அவசியத் தேவையே உதவுவதில்தான் இருக்கிறது. ஆனால்!, அத்தகைய சூழல்களில் 'மட்டுமே' உங்களைத் தேடி வரும் நண்பர்கள் தன்நலத்தின் சின்னங்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்...
அதேபோல் பதவி ஆசையில் வரும் நட்புகள் நம்முடன் இருக்கும் உயிர் நட்புகளையே விரட்ட சொல்வார்கள். அவர்கள் நல்லப்பாம்பின் நஞ்சு போன்றவர்கள்...
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ!, அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். நண்பனுக்கு இன்னொருவர் துரோகம் செய்து விட்டார்கள் என்றதும், அதை அறிந்து பொங்கி எழும் புனிதமான நட்பும் இந்த உலகத்தில் இருக்கிறது...
'உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா...? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா...? என்று பாருங்கள்...
எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள். சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் எல்லோருக்குமே மிக உரிமையோடு உறவாடும் ஒரு மிகச் சிறந்த நண்பர் இருந்திருப்பார். ஒரு நல்ல நண்பன் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குகிறான். ஒரு சிறந்த நட்பு நல்ல வாழ்க்கையை காட்டுகிறது...!*
🔴 *உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள். அவர்கள் நல்லவர்களா...?, மோசமானவர்களா...? என இப்போது அளவிடுங்கள். தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள். தீய நண்பனோடு பழகுவதை விட நண்பனே இல்லாமல் வாழ்வது சாலச் சிறந்தது. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே!, நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்...!!*
⚫ *எதற்காகவும் பழகிய நட்புக்கு துரோகம் செய்யாதீர்கள். அதன் வலி தாங்க முடியாதது. எல்லாரும் எல்லாவர்களுக்கும் நல்லவராய் இருக்க முடியாது. எனக்குப் பிடித்த மாதிரி மாறினால்தான் உன்னோடு நட்பாய் இருப்பேன்' என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி விடுங்கள்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
( 9442928401)
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
#gopura tharisanam உ ✧───•►
🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு ஶ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் ஆலயம்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் - பாவ விமோசனம்
மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்
அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி
தல விருட்சம் : சந்தன மரம்.
தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்.
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவாஞ்சியம்
ஊர் : ஸ்ரீ வாஞ்சியம்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.
திருவிழா:
இரண்டாம் நாளே தீர்த்தவாரி:
எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும்.
அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும்.
கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - 610 110திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91-4366 291 305, 94424 03926, 93606 02973.
பொது தகவல்:
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.
பிரார்த்தனை:
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.
பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
குப்த கங்கை:
ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள்.
அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம்.
எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை ஞாயிறு:
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.
வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர்.
இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார்.
ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.
இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள்.
ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.
யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும்.
காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.
இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்.
யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தல வரலாறு:
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது.
அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார்.
அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்.
பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள்.
நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.
மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும்.
இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்:
கும்பகோணம்
தங்கும் வசதி:
திருவாரூர்
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🔥சிவ சிவ 🌙
🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
#utkkarnthu saappidungo. குறிப்புகள்:*
➰➰➰➰➰➰➰➰➰➰
*ஸ்ரீலங்கா ஸ்டைல் கொத்து ரொட்டி (Sri Lankan Kottu Roti)*
ஸ்ரீலங்கா ஸ்டைல் கொத்து ரொட்டி (Sri Lankan Kottu Roti) என்பது பரோட்டா, முட்டை, காய்கறிகள் மற்றும் கறி குழம்பு சேர்த்து, சூடான தவா மீது நறுக்கி செய்யப்படும் சுவையான உணவாகும். 3-4 பரோட்டாக்களை பொடியாக வெட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, முட்டை, லீக்ஸ், கேரட் சேர்த்து, சிறிது சிக்கன் கறியுடன் சேர்த்து நன்றாகக் கொத்தி பரிமாறப்படுகிறது.
*தேவையான பொருட்கள்:*
பரோட்டா/ரொட்டி (வெட்டியது) - 3-4
முட்டை - 2
வெங்காயம் (நறுக்கியது) - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1
லீக்ஸ் (Leeks) - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
சிக்கன் கறி அல்லது மசாலா - 1/2 கப்
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
*செய்முறை:*
தயாரிப்பு: பரோட்டாக்களை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வறுத்தல்:
ஒரு அகலமான தவாவில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கறிகள் & முட்டை:
நறுக்கிய கேரட் மற்றும் லீக்ஸ் சேர்த்து வதக்கி, பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
மசாலா & ரொட்டி:
மசாலா தூள்களை சேர்த்து, பின் வெட்டிய பரோட்டா துண்டுகளை சேர்க்கவும்.
கொத்துதல்:
சிக்கன் கறியை சிறிது சேர்த்து, இரண்டு இரும்பு கரண்டிகளைப் பயன்படுத்தி ரொட்டி மற்றும் காய்கறிகளை நன்றாக நறுக்கி, கிளறி (கொத்தி) சூடாக்கவும்.
பரிமாறுதல்:
சூடாக இருக்கும்போதே, எலுமிச்சை சாறு அல்லது வெங்காய சாலட் உடன் பரிமாறவும்.
முக்கிய குறிப்புகள்:
கறி:
முன்கூட்டியே சமைத்த சிக்கன் அல்லது மட்டன் கறி குழம்பு சேர்ப்பது சிறந்தது.
கொத்துதல்:
கடைகளில் உள்ளது போல், இரும்பு தகட்டின் மீது தாளமிடுவது போன்ற சத்தத்துடன் வெட்டுவது (Kothu) தான் இதன் தனிச்சிறப்பு.
🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥
#ahaa enna oru suvay. குறிப்புகள்:*
➿➿➿➿➿➿➿➿➿➿
*காஜு கத்லி (Kaju Katli)*
காஜு கத்லி (Kaju Katli) முந்திரி, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு. நைசாக அரைத்த முந்திரிப் பொடியை, சர்க்கரைப்பாகுடன் சேர்த்து கிளறி, பட்டர் பேப்பரில் பரப்பி, ஆறிய பின் வைர வடிவில் வெட்டி இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த நேரத்தில், எளிதாகச் செய்யக்கூடிய தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ஆகும்.
*தேவையான பொருட்கள்:*
முந்திரி - 1 ½ கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
*செய்முறை:*
முந்திரி அரைத்தல்:
முந்திரியை மிக்சியில் சேர்த்து, இடைவிடாமல் அரைக்காமல், விட்டு விட்டு அரைத்து நைசான பொடியாக்கி சலித்துக்கொள்ளவும்.
சர்க்கரை பாகு:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, ஒரு சரம் பதம் (one string consistency) வரும் வரை காய்ச்சவும்.
கிளறுதல்:
சர்க்கரை பாகில் முந்திரி பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பதம்:
கலவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
பரப்புதல்:
ஒரு பட்டர் பேப்பரில் நெய் தடவி, இந்த கலவையை வைத்து, சப்பாத்தி கட்டையால் சமமாகத் தேய்க்கவும்.
வெட்டுதல்:
ஆறிய பிறகு, கத்தியால் வைர (Diamond) வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
முக்கிய டிப்ஸ்:
முந்திரியை குளிர்சாதன பெட்டியில் வைத்து அரைத்தால், எண்ணெய் பிரியாமல் பவுடராக கிடைக்கும்.
கலவையை அதிக நேரம் கிளறினால் கத்லி ரப்பர்போல மாறிவிடும், பதம் வந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.
🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲













