#gopura tharisanam உ ✧───•►
🙏 இன்றைய கோபுர
தரிசனம் 🙏
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு ஶ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் ஆலயம்.
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்
கோபுர தரிசனம் - பாவ விமோசனம்
மூலவர் : வாஞ்சிநாதேஸ்வரர்
அம்மன்/தாயார் : மங்களநாயகி, வாழவந்தநாயகி
தல விருட்சம் : சந்தன மரம்.
தீர்த்தம் : குப்தகங்கை, எமதீர்த்தம்.
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவாஞ்சியம்
ஊர் : ஸ்ரீ வாஞ்சியம்
மாவட்டம் : திருவாரூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம் பொன்னி யன்றசடையிற் பொலிவித்த புராணனார் தென்ன வென்றுவரி வண்டிசை செய்திருவாஞ்சியம் என்னை யாளுடை யானிட மாகவுகந்ததே.
திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 70வது தலம்.
திருவிழா:
இரண்டாம் நாளே தீர்த்தவாரி:
எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப்படும்.
அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில், தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின் இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி. அன்றைய தினம் வாஞ்சிநாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும் தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளான்.
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும்.
கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 133 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீ வாஞ்சியம் - 610 110திருவாரூர் மாவட்டம்.
போன்:
+91-4366 291 305, 94424 03926, 93606 02973.
பொது தகவல்:
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளது. உள்ளே நுழைந்ததும் இடப்பால் எமனுக்குத் தனிக்கோயில் உள்ளது. முன் மண்டபத்தில் நுழைந்தால் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விநாயகர் அபயங்கர விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
உள்வாயிலை தாண்டியதும் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. நின்ற திருக்கோலம். கவசமிட்ட கொடிமரம் - பலிபீடம் நந்தி உள்ளன. அடுத்து, "நட்டுவன் பிள்ளையார் சந்நிதி' தலப்பதிகம் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளது. இடல்பால் அதிகார நந்தி உள்ளார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
மூலவர் - சிவலிங்கத் திருமேனி - சுயம்பு - சற்று தடித்த உயர்ந்த பாணம். உள் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியர் பஞ்சபூத லிங்கங்கள், ஜேஷ்டாதேவி, சனிபகவான் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தெற்கு நோக்கிய சன்னதியில் யமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, சூலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல், ஒருவரது சிலா வடிவம் உள்ளது.
பிரார்த்தனை:
மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை நீங்கப்பெறலாம்.
பிள்ளையாருக்கு வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள். அனுமனுக்கே உரித்தான இவ்வழிபாட்டை பிள்ளையாருக்குச் செய்வது இக்கோயிலின் சிறப்பம்சம்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இக்கோயில் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு
அபிஷேக ஆராதனை நடத்தப்படும்.
குப்த கங்கை:
ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,''என வேண்டினாள்.
அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும்,''என்றார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம்.
எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை ஞாயிறு:
தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சிவன், தன்னை அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார்.
வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும் ஒருவர்.
இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும் தந்தார்.
ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம் இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.
இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து நீண்ட ஆயுள் பெறலாம். இங்கு வீற்றிருக்கும் அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
துர்க்கைக்கு தனி சன்னதி இல்லை, பிரம்மாண்ட நாயகியாக காட்சி தரும் மகிஷாசுரமர்த்தினியே துர்க்கையின் சொரூபமாக இருக்கிறாள்.
ராகுவும் கேதுவும் ஒரே வடிவில் இருப்பதை இக்கோயிலில் மட்டுமே காண முடியும் என்று கூறப்படுகிறது.
யோக நிலையில் யமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும்.
காசியில் மரித்தால், எம பயமில்லா விட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியத்தில் மரித்தவருக்கு யம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது.
இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களையெல்லாம் கீழே வைத்துவிட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்.
யமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது என முனிவர்கள் கூறுகின்றனர். பிரமாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
தல வரலாறு:
"எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும் பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரி கூறியது.
அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார்.
அதற்கு எமனும், ""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும் என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர்.
பல கொலைகளால் தீராத பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே இல்லை,''என்றார்.
எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன் உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள்.
நோய் வந்ததாலும், வயதாகி விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும், பாவமும் இனி உனக்கு கிடையாது.
மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும்.
இத்தலத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் க்ஷேத்திர பாலகனாக விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்மராஜனுக்கே முதல் வழிபாடு நடக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அமைவிடம்:
கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
அருகிலுள்ள ரயில் நிலையம்:
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்:
கும்பகோணம்
தங்கும் வசதி:
திருவாரூர்
🌹 வாழ்க வளமுடன் 🌹
🪐 வாழ்க வையகம் 🪐
🔥சிவ சிவ 🌙
🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
#utkkarnthu saappidungo. குறிப்புகள்:*
➰➰➰➰➰➰➰➰➰➰
*ஸ்ரீலங்கா ஸ்டைல் கொத்து ரொட்டி (Sri Lankan Kottu Roti)*
ஸ்ரீலங்கா ஸ்டைல் கொத்து ரொட்டி (Sri Lankan Kottu Roti) என்பது பரோட்டா, முட்டை, காய்கறிகள் மற்றும் கறி குழம்பு சேர்த்து, சூடான தவா மீது நறுக்கி செய்யப்படும் சுவையான உணவாகும். 3-4 பரோட்டாக்களை பொடியாக வெட்டி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, முட்டை, லீக்ஸ், கேரட் சேர்த்து, சிறிது சிக்கன் கறியுடன் சேர்த்து நன்றாகக் கொத்தி பரிமாறப்படுகிறது.
*தேவையான பொருட்கள்:*
பரோட்டா/ரொட்டி (வெட்டியது) - 3-4
முட்டை - 2
வெங்காயம் (நறுக்கியது) - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கேரட் (பொடியாக நறுக்கியது) - 1
லீக்ஸ் (Leeks) - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1
சிக்கன் கறி அல்லது மசாலா - 1/2 கப்
மிளகாய் தூள், மஞ்சள் தூள் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய்/நெய் - தேவையான அளவு
*செய்முறை:*
தயாரிப்பு: பரோட்டாக்களை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வறுத்தல்:
ஒரு அகலமான தவாவில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
காய்கறிகள் & முட்டை:
நறுக்கிய கேரட் மற்றும் லீக்ஸ் சேர்த்து வதக்கி, பின் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.
மசாலா & ரொட்டி:
மசாலா தூள்களை சேர்த்து, பின் வெட்டிய பரோட்டா துண்டுகளை சேர்க்கவும்.
கொத்துதல்:
சிக்கன் கறியை சிறிது சேர்த்து, இரண்டு இரும்பு கரண்டிகளைப் பயன்படுத்தி ரொட்டி மற்றும் காய்கறிகளை நன்றாக நறுக்கி, கிளறி (கொத்தி) சூடாக்கவும்.
பரிமாறுதல்:
சூடாக இருக்கும்போதே, எலுமிச்சை சாறு அல்லது வெங்காய சாலட் உடன் பரிமாறவும்.
முக்கிய குறிப்புகள்:
கறி:
முன்கூட்டியே சமைத்த சிக்கன் அல்லது மட்டன் கறி குழம்பு சேர்ப்பது சிறந்தது.
கொத்துதல்:
கடைகளில் உள்ளது போல், இரும்பு தகட்டின் மீது தாளமிடுவது போன்ற சத்தத்துடன் வெட்டுவது (Kothu) தான் இதன் தனிச்சிறப்பு.
🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥🧡🟥
#ahaa enna oru suvay. குறிப்புகள்:*
➿➿➿➿➿➿➿➿➿➿
*காஜு கத்லி (Kaju Katli)*
காஜு கத்லி (Kaju Katli) முந்திரி, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு. நைசாக அரைத்த முந்திரிப் பொடியை, சர்க்கரைப்பாகுடன் சேர்த்து கிளறி, பட்டர் பேப்பரில் பரப்பி, ஆறிய பின் வைர வடிவில் வெட்டி இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த நேரத்தில், எளிதாகச் செய்யக்கூடிய தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ஆகும்.
*தேவையான பொருட்கள்:*
முந்திரி - 1 ½ கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
*செய்முறை:*
முந்திரி அரைத்தல்:
முந்திரியை மிக்சியில் சேர்த்து, இடைவிடாமல் அரைக்காமல், விட்டு விட்டு அரைத்து நைசான பொடியாக்கி சலித்துக்கொள்ளவும்.
சர்க்கரை பாகு:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, ஒரு சரம் பதம் (one string consistency) வரும் வரை காய்ச்சவும்.
கிளறுதல்:
சர்க்கரை பாகில் முந்திரி பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பதம்:
கலவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
பரப்புதல்:
ஒரு பட்டர் பேப்பரில் நெய் தடவி, இந்த கலவையை வைத்து, சப்பாத்தி கட்டையால் சமமாகத் தேய்க்கவும்.
வெட்டுதல்:
ஆறிய பிறகு, கத்தியால் வைர (Diamond) வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
முக்கிய டிப்ஸ்:
முந்திரியை குளிர்சாதன பெட்டியில் வைத்து அரைத்தால், எண்ணெய் பிரியாமல் பவுடராக கிடைக்கும்.
கலவையை அதிக நேரம் கிளறினால் கத்லி ரப்பர்போல மாறிவிடும், பதம் வந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.
🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲
#mookkay tholaykkuthe saami. குறிப்புகள்:*
➿➿➿➿➿➿➿➿➿➿
*காஜு கத்லி (Kaju Katli)*
காஜு கத்லி (Kaju Katli) முந்திரி, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு. நைசாக அரைத்த முந்திரிப் பொடியை, சர்க்கரைப்பாகுடன் சேர்த்து கிளறி, பட்டர் பேப்பரில் பரப்பி, ஆறிய பின் வைர வடிவில் வெட்டி இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது. இது மிகக் குறைந்த நேரத்தில், எளிதாகச் செய்யக்கூடிய தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ஆகும்.
*தேவையான பொருட்கள்:*
முந்திரி - 1 ½ கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
*செய்முறை:*
முந்திரி அரைத்தல்:
முந்திரியை மிக்சியில் சேர்த்து, இடைவிடாமல் அரைக்காமல், விட்டு விட்டு அரைத்து நைசான பொடியாக்கி சலித்துக்கொள்ளவும்.
சர்க்கரை பாகு:
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, ஒரு சரம் பதம் (one string consistency) வரும் வரை காய்ச்சவும்.
கிளறுதல்:
சர்க்கரை பாகில் முந்திரி பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து, குறைந்த தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பதம்:
கலவை கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
பரப்புதல்:
ஒரு பட்டர் பேப்பரில் நெய் தடவி, இந்த கலவையை வைத்து, சப்பாத்தி கட்டையால் சமமாகத் தேய்க்கவும்.
வெட்டுதல்:
ஆறிய பிறகு, கத்தியால் வைர (Diamond) வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
முக்கிய டிப்ஸ்:
முந்திரியை குளிர்சாதன பெட்டியில் வைத்து அரைத்தால், எண்ணெய் பிரியாமல் பவுடராக கிடைக்கும்.
கலவையை அதிக நேரம் கிளறினால் கத்லி ரப்பர்போல மாறிவிடும், பதம் வந்தவுடன் எடுத்துவிட வேண்டும்.
🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲🔲💐🔲💐🔲💐🔲💐🔲💐🔲
#oru kai paarppomaa குறிப்புகள்:*
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*காயின் பரோட்டா (Coin Parotta)*
காயின் பரோட்டா (Coin Parotta) என்பது மதுரையின் புகழ்பெற்ற சிறிய, அடுக்குகள் நிறைந்த மென்மையான பரோட்டா வகை. மைதா மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, நீண்ட நேரம் ஊறவைத்து, மெல்லியதாக வீசி, சுருட்டி, சிறிய சக்கர வடிவில் (coin size) தேய்த்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தவாவில் சுட்டெடுப்பதன் மூலம் மென்மையான ஹோம் மேட் காயின் பரோட்டா செய்யலாம்.
*தேவையான பொருட்கள்:*
மாவு பிசைதல்:
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, சர்க்கரை மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மென்மையான மாவாக பிசையவும். மாவை 1-2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
சிறிய உருண்டைகள்:
மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளவும்.
வீசுதல் மற்றும் மடித்தல்:
ஒவ்வொரு உருண்டையையும் மிகவும் மெல்லியதாக (வீச்சு பரோட்டா போல) தேய்க்கவும். அதன் மேல் எண்ணெய் தடவி, விசிறி போல மடித்து (pleats), பின் சுருட்டி (coil) சக்கரம் போல ஆக்கவும்.
தேய்த்தல்:
சுருட்டிய உருண்டைகளைச் சற்று அழுத்தி, சிறிய தடிமனான வட்ட வடிவில் தேய்க்கவும்.
சுடுதல்:
தவாவை சூடாக்கி, மிதமான தீயில் வைத்து பரோட்டாவைப் போட்டு, இருபுறமும் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.
குறிப்புகள்:
பஞ்சு போன்ற அடுக்குகள்: மாவு அதிக நேரம் ஊறுவது மற்றும் எண்ணெய் தடவி மடிப்பது அடுக்குகள் பிரிய உதவும்.
சிறிய அளவு: சிறியதாக இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் பிடிக்கும், சால்னா அல்லது குருமாவிற்கு சிறந்த இணை.
🟩💜🟩💜🟩💜🟩💜🟩💜🟩🟩💜🟩💜🟩💜🟩💜🟩💜🟩
https://youtube.com/shorts/HByl-irOamw?si=xdJFzYqki6sd5ykJ #👌🍛🥘🍉🥝🍊Unave marunthu👌🍛🥘🍎
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை (07.02.2026)*
………………………………………………………………..............
*''நேர்மையை விதையுங்கள்...!"*
.......................................................................
நாம் எந்த செயலை மேற்கொண்டாலும், வெற்றிபெற வேண்டுமென்றால், வெற்றி பெறுவதற்கு மிகவும் அடிப்படையான மூலப்பொருள் என்னவென்றால்: எண்ணத்தில் தூய்மை. பணியில் நேர்மை...
ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்...
எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர்தான் அடுத்து என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்...
உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப்போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ!, அவர்தான் அடுத்த மேலாளர் என்றார்...
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ!, அவரே என் நிறுவனப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்...
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றார்....
தன் மனைவியிடம் முதலாளி சொன்னதைக் கூறினார். அவர் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் எல்லாம் அவருக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தார்....
ஒரு வாரம் கழிந்தது. நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால்!, ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே தொடங்கவில்லை...
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்களானது. அப்பொழுதும் அவரது தொட்டியில் செடி வளரவே இல்லை. தாம் விதையை வீணாக்கி விட்டேனா!, என்று புலம்பினார்...
ஆனால்!, நாள்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் எவரிடத்தும் சொல்லவில்லை...
ஓராண்டு முடிந்து விட்டது, அனைவரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்...
ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னார். அவர் மனைவி சமாதானப்படுத்தி, நீங்கள் ஓராண்டு முழுக்க உங்கள் முதலாளி கூறியது போன்றே செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியது இல்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றார்...
ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அனைவரது தொட்டியையும் பார்த்தார். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவரது தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்...
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். அருமை!, எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்துள்ளீர்கள்...
உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தார் அவரை அருகே வருமாறு அழைத்தார்...
ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றார்...
முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு ஆண்டாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னார்...
முதலாளி, ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டுக் கொண்டு நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்...
ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி!, தன் தொட்டியில் செடி வளரவே இல்லை, பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிப் போனார்...
சென்ற ஆண்டு நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா!, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]...
அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள்...
ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார், ஆகவே!, அவரே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவர் என்றார்...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!*
🔴 *வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம்தான். உண்மையும் நேர்மையும் உங்களைப் பாதுகாக்கும்...!!*
⚫ *நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள் ; பதவியும், புகழும் உங்களைத் தேடி வரும்...!!!*
*- உடுமலை சு. தண்டபாணி*✒️
( 94429-28401)
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
#naayagan. பெப்ரவரி 7
மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர்
சொல் ஆராய்ச்சி வல்லுநர்....
பன்மொழி வித்தகர்
தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர்.
இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார்.
சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர்!
1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே!
சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது.
தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு தென்மொழி என ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்!
இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை!
பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்!
ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்!
தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார்.
ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணியாற்றினார்.
வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில் கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை!
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்!
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்!
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்!
உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர்!
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் ஆரிய மொழிகளுக்கு மூலம் என ஆதாரங்களுடன் வாதிட்டவர்!
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்!
40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்!
தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்!
😊😊😊
#naayagan. பெப்ரவரி 7
மொழி ஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர்
சொல் ஆராய்ச்சி வல்லுநர்....
பன்மொழி வித்தகர்
தேவநேயப் பாவாணர் பிறந்த தினம் இன்று!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர்.
இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார்.
சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர்!
1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே!
சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது.
தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு தென்மொழி என ஏராளமான கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்!
இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை!
பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார்!
ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள் கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்!
தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார்.
ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணியாற்றினார்.
வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில் கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை!
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்!
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார்!
1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்!
உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன் என்று கூறியவர்!
தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய் ஆரிய மொழிகளுக்கு மூலம் என ஆதாரங்களுடன் வாதிட்டவர்!
கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர்!
40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்!
தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.
தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்!
😊😊😊
#magill vithu magill. மகிழ்.
1. நீங்கள் யார்?
2. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
3. யாருக்காக நீங்கள் அதைச் செய்கிறீர்கள் ?
4. யாருக்காக நீங்கள் அதை செய்கிறீர்களோ அவர்களுக்கு அது வேண்டுமா அல்லது தேவையா ?
5. நீங்கள் அதைச் செய்வதன் மூலமாக அவர்களுக்கு என்ன கிடைக்கிறது ? அதன் விளைவால் ஏற்படும் மாற்றம் தான் என்ன ?
இந்த ஐந்தையும் தெளிவாக அறிந்திருந்தால் உங்கள் வாழ்வின் நோக்கத்தை எளிதாக அறிந்து விடலாம்.
முதல் இரண்டு கேள்விகளும் உங்களைப் பற்றியது .
அடுத்த மூன்றும் அடுத்தவர்களைப் பற்றியது .
உங்கள் நோக்கம் அனைத்தும் வெளி வட்டாரத்தை நோக்கி இருக்க வேண்டும். பெரும்பாலான வெற்றி பெற்ற மனிதர்கள் எந்த துறையானாலும் சரி அவர்களின் கவனம் அவர்களுக்கே சேவை செய்வதை விட மக்களுக்கு சேவை என்றே இருந்து இருக்கிறது .மகிழ்ச்சிகரமான மக்கள் அடுத்தவர்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
வாழ்க்கை சொல்லும் பாடம் இது தான். நீங்கள் அடுத்தவர்களை மகிழ்வாக வைக்கும் பொழுது இந்த பிரபஞ்சம் உங்களை மகிழ்வாக வைத்துக் கொள்ளும்.
இந்த ஐந்து கேள்விகளையும் நீங்கள் மனப்பூர்வமாக உங்களைக் கேளுங்கள்.அதில் திருப்தி இருந்தால் நீங்கள் இப்போது செய்து கொண்டு இருப்பது தான் உங்கள் வாழ்வின் நோக்கமாகும்.
எனவே உங்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும் வாழ்வின் நோக்கத்தை கண்டு பிடியுங்கள்.
அதை அனுபவியுங்கள்... நீங்களும் மகுடம் சூட
தயக்கமின்றி பேசுங்கள்.
சரளமாக வார்த்தைகள் வந்து விழும்.சாதனைகளைப் பெருக்கி விடலாம்.
தக்க வார்த்தைகளைத் தேர்வு செய்து தகுந்ததைப் பேசுங்கள்.தரணி புகழ் எய்திடலாம்.
இனிமையாகப் பேசுங்கள். எல்லோருடைய மனதிலும் இடம் பெறுங்கள்.
கனிவாகப் பேசுங்கள். காரியத்தை சாதிக்கலாம்.
நல்ல உச்சரிப்புடன் பேசுங்கள்.
புகழ் பெறலாம்.
சிறிதே பேசுங்கள் அதனைச் சிறப்பாகப் பேசுங்கள்.
மற்றவர்கள் பேசும் போது கவனமாகக் கேளுங்கள்.
மௌனமாக இருங்கள்.
மகான் ஆகலாம். 😊😊😊













