saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#virinthomal avasiyam. *_மனிதனை மனிதனாக்கும் இரு கண்கள்!_* _விருந்தோம்பல்/வாசிப்பு இவை இரண்டும் இன்று காணாமல் போகும் நிலையில் உள்ளன என்பதை எடுத்துச் சொல்வோம்._ * 🌹🌹🌹விருந்தோம்பல் – மனிதனை மனிதனாக்கும் அறம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வீடுகளில் கதவைத் தட்ட வேண்டியதில்லை. வாசலில் நின்றாலே முகத்தில் புன்னகையுடன் “வாங்க… வாங்க…” என்ற அழைப்பு ஒலித்தது. அது வெறும் வார்த்தையல்ல — அது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்பது உணவு பரிமாறுதல் மட்டும் அல்ல. அது மனத்தைப் பகிர்தல். ஒரு தட்டு சோறு, ஒரு சொட்டு ரசம், அதற்கும் மேலாக ஒரு அன்பான பார்வை... அதுவே விருந்தினரின் பசியை முழுமையாக தீர்த்தது. இன்றைய வேகமான வாழ்க்கையில் “நேரமில்லை”, “வேலை அதிகம்” என்ற காரணங்கள் விருந்தோம்பலை மெதுவாக வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள்... திருவள்ளுவர் உயிரைக் காட்டிலும் உயர்வாகக் கூறிய அறம் இது ஒன்றே. விருந்தினரை வரவேற்கும் அந்த ஒரு நிமிடம் நம்முடைய மனதை விரிவாக்குகிறது. சுயநலத்திலிருந்து சமூகத்துக்கான பயணம் அங்கேதான் தொடங்குகிறது. விருந்தோம்பல் என்பதை party என அர்த்தம் கொள்கின்றனர் இந்த காலத்து இளைஞர்கள். ஆனால் வீட்டிற்கு வருகின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாராயிருப்பினும் அன்புடன் வரவேற்று தாகம் தீர தண்ணீர் அல்லது மோர் கொடுத்து உபசரிப்பது தான் தமிழரின் தலையாய பண்பாடு. இன்று அது காணாமல் போகும் நிலையில் உள்ளது என்பதை எடுத்துச் சொல்வோம். இன்றே ஒரு மாற்றம் செய்வோம். வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அன்புடன் அமர வைத்து, புன்னகையுடன் பேசி. நலம் விசாரித்து உறவுகளை மேம்படுத்துவோம். அது அவருக்கு மட்டுமல்ல — நமக்கே ஒரு ஊக்கமாக மாறும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பலமாகவும், பாலமாகவும் இருக்கும். ‘விருந்தோம்பல்’ என்பது பழக்கம் அல்ல. அது ஒரு மனிதனை மனிதனாக்கும் அறம். ‘வாசிப்பு’ – வாழ்க்கையை உயர்த்தும் மந்திரம் இன்று நம்முள் பலருக்கும் படிக்கும் ஆர்வம் இருப்பினும், புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற உண்மையான உந்துதல் குறைந்து வருகிறது. “தேவைப்படும் போது கைப்பேசியில் படித்தால் போதும்” என்ற மனநிலைக்கு நாம் பழகிவிட்டோம். கல்வி என்பது பள்ளி, கல்லூரி புத்தகங்களுக்குள் மட்டுமே அடங்கிய ஒன்றல்ல. பல்வேறு புத்தகங்களும், நாளிதழ்களில் வரும் செய்திகள் கூட ஒரு விதமான வாழ்க்கைக் கல்வியே. ஒருவர் எவ்வளவு நேரம் வாசிப்பில் தன் மனதை செலுத்துகிறாரோ, அந்த அளவிற்கு அவரின் மனச்சிந்தனை விரிவடைகிறது. அதோடு, வாசிப்பு மனிதனின் மனதை அமைதியடையச் செய்து, தெளிவான சிந்தனையை உருவாக்குகிறது. குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பைப் பழக்கமாக்க வேண்டும். அதற்காக, அவர்களின் பிறந்த நாள் போன்ற சந்தோஷமான தருணங்களில், அவரவர் வயதுக்கு ஏற்ற கதைப் புத்தகங்களை பரிசாக அளிப்பது மிகவும் சிறந்த வழியாகும். மேலும், தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அன்றைய நாளிதழ் செய்திகளை வாசிக்கச் செய்ய வேண்டும். அதிலிருந்து சிறுவர் சம்பந்தமான சில வினாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விடை காணச் செய்வதும் அவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும்போது, குழந்தைகளுக்குள் வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் இயல்பாகவே வளரத் தொடங்கும். சிறு வயதிலேயே வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்கள், கல்வியில் மட்டுமல்லாது பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார்கள். இதனால் அவர்களுக்குள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது. எனவே பெற்றோர்களே, குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் அனுப்பும் போது, அவர்களுக்கு நாளிதழ்களும் புத்தகங்களும் வாசிக்க தனியான நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். வாசிப்பை நேசிப்போம்… வாழ்வில் வெற்றி பெறுவோம். 🌹🌹🌹
virinthomal avasiyam. - ShareChat
#mark Dyvan ponnmoligal. *_மரணத்தை நினைத்து பயப்படுகிறீர்களா... மார்க் ட்வைன் சொன்ன இந்த ஒரு வரியை படித்துப் பாருங்கள்!_* * 🌹🌹🌹மரணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே நம்மில் பலருக்கும் உள்ளுக்குள் ஒருவிதமான நடுக்கம் வந்துவிடும். இந்த உலகத்தை விட்டு நாம் எப்போது செல்லப் போகிறோம் என்ற பயம் பலரையும் நிம்மதியாகத் தூங்க விடாமல் செய்கிறது. ஆனால், உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வைன் இதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அணுகுகிறார். மரணத்தைப் பார்த்துப் பயப்படுபவர்கள் உண்மையில் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழாதவர்கள் என்கிறார் அவர். அவர் சொன்ன ஒரு குறிப்பிட்ட பொன்மொழியைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் ஆழமான அர்த்தத்தைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க. 1835 ஆம் ஆண்டில் பிறந்த மார்க் ட்வைன், அமெரிக்க இலக்கிய உலகில் ஒரு மாபெரும் சகாப்தம் ஆவார். இவரது நாவல்கள் இன்றும் உலக இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன. அவர் ஒரு எழுத்தாளர் என்பதைத் தாண்டி, சமுதாயத்தை மிக நுட்பமாகக் கவனித்த ஒரு சிறந்த பேச்சாளரும், உலகப் பயணியும் ஆவார். "வாழ்க்கையைக் கண்டு பயப்படுபவர்களுக்குத் தான் மரணத்தைக் கண்டால் பயம் வரும். தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்து முடித்த ஒருவன், எந்த நொடியிலும் மரணத்தைச் சந்திக்கத் தயாராகவே இருப்பான்" என்பது அவர் சொன்ன மிகவும் பிரபலமான ஒரு தத்துவமாகும். இந்த ஒற்றை வரி, ஒட்டுமொத்த மனித குலத்தின் மனநிலையையும் அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. பயத்தின் பின்னணி! இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் மிகவும் ஆழமானது. நாம் ஏன் மரணத்தை வெறுக்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்க்கையில் சாதிக்க நினைத்ததைச் செய்யாமல் விட்டது, பிடித்த விஷயங்களை அனுபவிக்காமல் தள்ளிப் போட்டது, தோல்விக்குப் பயந்து எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் முடங்கிக் கிடந்தது எனப் பலவிதமான ஏமாற்றங்களை மனதிற்குள் சுமந்துகொண்டு இருப்பவர்களுக்குத் தான் சாவு என்பது ஒரு பயங்கரமான முடிவாகத் தெரிகிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சமூகத்திற்காகவே பயந்து பயந்து வாழ்பவர்கள், தங்களது சொந்த ஆசைகளைக் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தான் மரணப் படுக்கையில் குற்ற உணர்ச்சி அதிகம் இருக்கும். வாழ்க்கையை ரசிக்கும் கலை! மறுபுறம், கிடைக்கிற ஒவ்வொரு நொடியையும் ரசித்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, பிடித்தவர்களோடு அன்பைப் பகிர்ந்து வாழும் ஒருவருக்கு, மரணம் என்பது ஒரு இயற்கையான சுழற்சி மட்டுமே. அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. இன்றைய அவசர உலகத்தில் நாம் எல்லோருமே அடுத்த நாள் என்ன நடக்கும் என்ற கவலையிலேயே இன்றைய நிம்மதியைத் தொலைத்து விடுகிறோம். இப்படி எல்லாவற்றிற்கும் பயந்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து முடிப்பதுதான் உண்மையான சோகம் என்று ட்வைன் நமக்கு உணர்த்துகிறார். எதற்கும் தயங்காமல் தைரியமாக அடித்து விளையாடும்போது, மரணம் குறித்த எந்தக் கவலையும் நம்மை அண்டாது. ஒவ்வொரு நாளையும் நமக்குக் கிடைத்த ஒரு புதிய வாய்ப்பாக நினைத்து, அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். இப்படி வாழப் பழகிவிட்டால், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் திரும்பிப் பார்க்கும்போது எவ்வித வருத்தமும் இருக்காது. வாழ்க்கையை முழுமையாக ரசிப்போம், மரணத்தை ஒரு புன்னகையோடு வரவேற்போம். 🌹🌹🌹
mark Dyvan ponnmoligal. - MARK TWAIN The Adventures of Huckleberr Finn MARK TWAIN The Adventures of Huckleberr Finn - ShareChat
#punniya kovil. தோஷம் போக்கும் புண்ணிய பூமி!_* * 🛕🛕🛕ராமாயணத்தில் தமிழகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முக்கியமான கோயில்களில் ஒன்று நவபாஷாணம் நவகிரகங்கள் கோயில், இது ராமேஸ்வரத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள தேவிபட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து கோயிலாகும். ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். ராமர் சீதையைத்தேடி பயணம் செய்தபோது அசரீரி வாக்காக மகிஷாசுரமர்த்தினி நவகிரக வழிபாடு செய்தால் சீதாவுடன் சேர்வீர்கள் என்று சொன்னதால் கிரகதோஷம் தீர 9 வகை மண்ணைப் பிடித்து வைத்து இராமர் வழிபட வந்த இடம்தான் தேவிபட்டிணம், அதன் கடற்கரையில் ராமர் பிடித்து வைத்த மண்ணை வைக்கும்போது சீற்றமுடன் கடல் இருந்ததால், அந்தமண் அலைகளால் அடித்துச் செல்லாமல் இருக்க அங்கு கரை மீது குடிகொண்டுள்ள பெருமாளை மனதிற்குள் வழிபட்டார். அங்கு ஆதி ஜெகநாதப் பெருமாள் எழுந்தருளி கடல் அரசனை அலைகளின்றி ஆரவாரமற்ற அமைதியுடன் இருக்க செய்தார். கடலடைத்த ஆதி ஜெகந்நாதர் கருணையால். கடல் நீரில் நிலைகொண்ட நவபாஷாணம்- நாளடைவில் இறுகி கற்களானது. அதனடிப்படையில் இங்குள்ள சுவாமி, ‘கடல் அலை அடைத்த பெருமாள்’ என பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கடலடைத்த பெருமாள்’ என மருவிவிட்டது. இன்றும் இங்கு அலை இல்லாமல் அமைதியாக கடல் காட்சியளிக்கிறது. ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவக்கிரகங்களை வழிபட்டால் தோஷம் நீங்கி கிரகங்களால் நன்மை ஏற்படும் என்பதால் பிதுர்கடன், தர்பணம், சிரார்த்தம் நவகிரக தோஷம் முதலிய நிவர்த்திக்கு பிரார்த்தனைத் தலமாக தேவிபட்டினம் மாறியது. ஒவ்வொருவரும் தாங்களே நவபாஷாணத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். நேர் எதிரில் சக்ர தீர்த்தம். காவல் தெய்வம் கருப்பர். அருகில் ஆதிஜகநாதப் பெருமாள் கோயிலும் உள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்ததாகக் கருதப்படும் நவக்கிரகங்களை வணங்கிய பின்னர், கடலை அடக்க உதவியதாகக் கூறப்படும் இந்த பெருமாளை வழிபடுவது சிறப்பு. பொங்கிப் பெருகி வந்த அலைகளை அடைத்தருளியதால், இங்கு நாராயணர், ``கடலடைத்த ஆதி ஜெகந்நாதப் பெருமாள்’’ என்று போற்றப்படுகின்றார். தேவிபட்டிணம் கடற்கரையில், ராமபிரானின் கரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட நவக்கிரகங்களை வணங்கி, வழிபட்டு, பின்னர் சற்று தூரம் நடந்தால், விமானத்துடன் கூடிய பெருமாள் கோயில் காணப்படுகின்றது. முதலில் முன்மண்டபத்தில் பலிபீடம் மற்றும் பெரிய திருவடிகளான கருடாழ்வார் தரிசனம். மகாமண்டபத்தின் வெளிப்புற சுவற்றில், ஆஞ்சநேயர் அருள் பாலிக்கின்றார். பின், நேராக அர்த்தமண்டபம் அடைந்து, தேவி பூதேவி உடனான கடலடைத்த ஆதி ஜெகந்நாத பெருமாளைக்கண்டு பரவசம் அடையலாம். தனது மேலிரு கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய - வரதம் காட்டி, பெரியதொரு திருமேனியராக, அமர்ந்தவண்ணம் அருட்சேவை சாதிக்கின்றார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள பெருமாள், நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்குபவராக கருதப்படுகிறார்; பக்தர்கள் பல்வேறு சர்ப்ப தோஷங்கள், திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள், கடல் அலைகளை அடக்கிய கருணையும், நவக்கிரகங்களின் சக்திக்கு காவலாக இருப்பதும், பக்தர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலிப்பதும் இவருடைய பெருமையாகும். பக்தர்களின் நாகதோஷங்களை நீக்கி புத்திரபாக்கியம், திருமண பாக்கியம் தரும் பெருமாளாக ஆதி ஜெகநாத பெருமாள் இருப்பதால் பலனடைந்தவர்கள் நேர்த்திக்கடனாக நாகர் உருவங்களை கோயிலுக்கு வழங்குகிறார்கள். அதனை கோயிலை சுற்றி வைத்து உள்ளனர். அதனை கோயிலில் இப்போதும் காணலாம். தேவிபட்டிணம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி செல்லும் பேருந்துகள் தேவிபட்டினத்தில் நிற்கும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம். கடலைடைத்த பெருமாள் கோயிலில் விசாலமான கார் பார்க்கிங் வசதி உள்ளது. தினமும் 12 மணிக்கு அன்னதானம் கோயில் சார்பாக வழங்கப்படுகிறது. 🍁🍁🍁
punniya kovil. - ShareChat
#aalaya athisiyam. மாறும் ஈசன்: பக்தர்களை வியக்க வைக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் அதிசயம்!_* * 🛕🛕🛕தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ளது கல்யாணசுந்தரர் திருக்கோயில். இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் மலை அருள்பாலிக்கிறார். இத்தல சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாது அற்புதமான அமைப்பைக் கொண்டுள்ளது. காலையில் சூரியன் உதிப்பதற்கும் மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை மூலவர் ஈசன் வண்ணம் மாறுகிறார். அதனால் இத்தல இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன் லிங்க வடிவில் காட்சி தருகின்றார். காலை 6 முதல் 8.15 வரை தாமிர வண்ணத்திலும், 8.15 முதல் 11.30 மணி வரை இளஞ்சிவப்பு வண்ணத்திலும் 11.30 முதல் மதியம் 2.30 மணி வரை உருக்கிய தங்க வண்ணத்திலும் 2.30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை வண்ணத்திலும் 5 முதல் 6 மணி வரை செம்மை வண்ணத்தில் காட்சி தருவதாக தல புராணம் கூறுகின்றது. மாடக்கோயில் வகையை சேர்ந்த இந்த ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டியது. யானை உள்ளே போக முடியாதவாறு கோயில் அமைந்திருக்கிறது. முதன்மையான வாயிலும் அடுத்தடுத்த வாயிலும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்காமல் சில படிக்கட்டுகளை கடந்து ஏறிச் சென்று மூலவர் சன்னிதியை அடைய முடியும். பாண்டவர்களின் தாய் குந்தி தேவி பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றதாலும் கர்ணனை ஆற்றில் விட்டதாலும் அவளுக்கு தோஷம் பற்றிக் கொள்கிறது. இந்த தோஷம் நீங்க குந்தி இறைவனிடம் முறையிட்டாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடினால் மன நிம்மதி கிடைப்பதோடு, செய்த பாவமும் நீங்கும் என்று அறிந்தாள். அது எப்படி சாத்தியம் என அவள் கலங்கியபோது ஏழு கடல் தீர்த்தமும் ஒரே இடத்தில் கலக்கும் சப்த சாகர தீர்த்தம் தென்னகத்தின் நல்லூர் எனப்படும் இத்தலத்தில் உள்ளதை அறிந்தாள். இத்தலம் வந்து சிவ பூஜை செய்து இங்கு வந்து சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி மன நிம்மதி அடைந்தாள். மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி இத்தலத்தில் நீராடி தனது தோஷம் நீங்கப் பெற்றாள். இதை மெய்ப்பிக்கும் வகையில் குந்தி சிவ பூஜை செய்யும் சிற்பம் இங்கு இருக்கிறது. பிரம்ம தேவன் திருக்குளத்தின் கீழ் திசையில் ரிக் வேதத்தையும், தென்திசையில் யஜுர் வேதத்தையும், மேற்கு திசையில் சாம வேதத்தையும், வட திசையில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்த கோடி மகா மந்திரங்களையும், பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தல புராணம் கூறுகிறது. பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவு கூறும் விதத்தில் சடாரியை தலையில் சூட்டுவது வழக்கம் சிவாலயங்களில் இந்த வழக்கமில்லை என்றாலும், நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் சிரசில் சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. 🍁🍁🍁
aalaya athisiyam. - ShareChat
#nalla natppu kadavull kodutha varam saami. நண்பர்கள் ஏன், எதற்காகத் தேவை ? தடுமாறும் போது தாங்கிப் பிடிக்க ஒரு நண்பன் தேவை ! தடம் மாறும் போது தடம் மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை ! ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை ! அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை ! அவ்வப்போது அரவணைத்துச் செல்ல சில நண்பர்கள் தேவை ! அதட்டி உருட்டி மிரட்டி நம்மைக் காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை ! துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை ! ஊர் சுற்றி வர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை ! நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன் அப்படியே ஏற்றுக் கொள்ள சில நண்பர்கள் தேவை ! எதிர்த்துப் பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில நண்பர்கள் தேவை ! இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய் உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை. அந்த சிலரைத் தேடுங்கள் ! கிடைத்தால் அவருடன் காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் ! 😊😊😊
nalla natppu kadavull kodutha varam saami. - ShareChat
#🚹உளவியல் சிந்தனை சிந்தனை. இந்த உலகில் எதை எதையோ தேடி அலையும் மனதிற்கு.... இறுதியில் தேவைப்படுவது அமைதி மட்டுமே....!!!! தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்று இருந்தாலும்..... சரி பரவாயில்லை.... உடனே திரும்பி வாருங்கள்.....!!!!! வேண்டாம் என்று அடிக்கடி சொல்லத் தெரிந்தவன் தான்..... வாழ்நாள் பூராவும் மனத்தாலும் உடலாலும் வலிமை உள்ளவனாக இருப்பான்.....!!!!! வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட.... உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம்....!!!!! எண்ணம் உறுதியாக இருந்தால்..... எண்ணியபடி உயரலாம்....!!!! நமது எண்ணம் தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது..,.!!! நடப்பவை எல்லாம் உன் நன்மைக்கே என்பதை எப்போது நீ உணர்கின்றாயோ..... அப்போதிலிருந்து ..... உனக்கு இந்த வாழ்க்கை குறையில்லாத வாழ்க்கையாகத் தெரியத் துவங்கும்...!!!! அம்பினால் பட்ட காயம் ஆறும்...... அன்பினால் பட்ட காயம் ஆறாது....!!!! சூழ்நிலைக்கு ஏற்ற மனிதனாக உன்னை மாற்றிக் கொள்...!!! ஆனால் சூழ்நிலைக் கைதியாக எந்தச் சூழ்நிலையிலும் மாறி விடாதே.......!!!!! வாய்ப்புகளே அதிர்ஷ்டம்.... அதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களே அதிர்ஷ்டசாலிகள்...!!!! உன் துன்பத்தில் கை விட்டவர்களுக்கு நன்றிக் கடன் படு..... அவர்கள் அன்று கை விட்டதால் தான்..... உன்னையே நீ அடையாளம் கண்டு கொண்டாய்.....!!!! நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும்..... காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப் பெறும்..... என்ற மூடநம்பிக்கையோடு கனவு காண்பதும்...... ஒருபோதுமே வாழ்க்கைக்கு உகந்தது அல்ல....!!!! வாழ்க வளமுடன். 🌹🌹🌹
🚹உளவியல் சிந்தனை - ShareChat
#innraya SINTHANAY 🙏🏻 💐💐🌹🌹 *இன்றைய சிந்தனை* (28.02.2026) .......................................................................... *"ஒவ்வொரு விநாடியும் ...!"* ............................................................... சில மணித்துளிகள் தானே என்று, மணித்துளிகள் அல்லது விநாடிகள் (நிமிடங்கள்) வீணாவதைக் கவனமின்றி விட்டு விடக்கூடாது. மணித்துளிகளை வீணாக்குவது என்பது சிறிது சிறிதாக நமக்கான நேரத்தை வீணாக்கிக் கொள்கிறோம் என்பது பொருள்... மணித்துளிகள் தாம் யுகங்களாக மாறுகின்றன. ஒவ்வொரு விநாடியும் வாழ்நாளில் விலைமதிக்க முடியாத ஒரு சிறு பகுதி என்பதை உணர வேண்டும். அந்த மணித்துளிகளை பயனுள்ள வழியில் கழிக்க வேண்டும் (Every minute counts).அவசரமாக அல்ல, விரைவாகச் செயல்பட வேண்டும்... சிலர் சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் சுற்றி வளைத்துப் பேசும் போதும், சூழ்நிலை அறியாமல் மிகவும மெத்தனமாகப் பேசும் போதும் கேட்பவர்கள் எரிச்சல் அடைவார்கள்.. சில நேரங்களில் பொறுமை இழந்து நீங்கள் சொல்ல வந்தது என்ன...? அதை மட்டும் சொல்லுங்கள் என்று நேரடியாகக் கேட்டு விடுவார்கள். தமது தேவையை ஒரு வரியிலோ ஒரு சொல்லிலோ சொல்லத் தெரியாதவர் – என்ன சாதிக்கப் போகிறார்...? அத்தோடு இத்தகையவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் நேரமும் வீணாகின்றது... நேரம் வீணாகின்றதே என்ற உணர்வால் உந்தப் படுகிறார்கள். இவரோடு வீணாக்கிய நேரத்தைச் சரிக்கட்டப் பணிகளை விரைவுபடுத்தி உழைக்க வேண்டியுள்ளது... தெளிவான எண்ணமுடைய மனிதன் காலத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறான். தெளிவில்லாதவன் வாழ்வில் திசை தெரியாமல் அல்லல்படுகிறான்... நேரத்தின் பெறுமதியை பின்வரும் வாய்ப்புகளைச் சந்தித்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 🔹 தேர்வில் தோற்ற மாணவருக்கு ஒரு ஆண்டில் பெறுமதி என்னவென்று புரியும்...! 🔹 குறைப்பிரசவம் செய்த தாய்க்கு ஒரு மாதத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...! 🔹 வாராந்திர நாளிதழ் வெளியிடும் ஆசிரியருக்கு ஒரு வாரத்தின் பெறுமதி என்னவென்று புரியும்...! 🔹 காத்திருந்த காதலருக்கு ஒரு மணித்தியாலத்தின் பெறுமதி என்னவென்று புரியும்..! 🔹 தொடருந்தைத் தவற விட்டப் பயணிக்கு ஒரு விநாடியின் பெறுமதி என்னவென்று புரியும்...! 🔹 விபத்திலிருந்து தப்பியவருக்கு ஒரு வினாடியின் பெறுமதி என்ன என்று புரியும்...! 🏀ஓட்டப் பந்தயத்தில் தோல்வி அடைந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள், ஒரு வினாடியின் அருமையை.. குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய பணியை நீட்டித்துச் செய்பவர்கள், ஒரு மணி நேரத்தில் செய்ய வேண்டியதை இரண்டு மணி நேரம் வரை செய்து கொண்டிருப்பவர்கள்... இவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது மட்டுமல்ல, இவர்கள் வாழ்க்கை சரிந்து கொண்டே போய் பின்னர் அழிந்தும் போய் விடும்... இத்தோடு மறதி, சோம்பல், அளவுக்கு விஞ்சிய தூக்கம் இவை மூன்றும் சேர்ந்து கொண்டால் போதும் பின்னர் அந்த மனிதன் மீளவே முடியாது... *ஆம் நண்பர்களே...!* 🟡 வளர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது தான். இந்த வாரத்திற்குள் நமக்கு இறுதி முடிவு காத்து இருக்கிறது என்று நமக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வோம்...? முதன்மையான வேலைகளை எல்லாம் வரிசைப்படுத்தி விரைந்து விரைந்து செய்து முடிப்போம் அல்லவா...?!, ஆனால்!, உண்மை என்னவென்றால் நமக்கு முடிவு ஒரு வாரத்தில் இல்லை,ஒரு நாளில் இல்லை, ஒவ்வொரு மணித்துளியிலும் காத்து இருக்கிறது...! 🔴 ஒவ்வொரு விநாடியிலும் காத்திருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம். அதனால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில், சமுதாயத்திற்கு நன்மை தரும் வகையில் கழிப்பது கடமையாகும். வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்ய வேண்டும்...!! ⚫ இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாம். இன்று!, உங்கள் கையில் ஒரு நாளைய 24 மணிகள் – 1440 நிமிடங்கள் -86,400 வினாடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை வீணாக்காமல் பயனுள்ள வகையில் செலவிடத் தயாராகுவோம்...!!! - உடுமலை சு. தண்டபாணி✒️ 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
innraya SINTHANAY - குளிக்கும் ஓடும் நநி நீரில் அதே நீரில் மறுபடியும் குளிக்க முடியாது. அதுபோல்தான் வினாடிக்கு வாழ்க்கையும் வினாடி மாறிக்கொண்டே ருக்கும்  குளிக்கும் ஓடும் நநி நீரில் அதே நீரில் மறுபடியும் குளிக்க முடியாது. அதுபோல்தான் வினாடிக்கு வாழ்க்கையும் வினாடி மாறிக்கொண்டே ருக்கும் - ShareChat
Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam. #kaalay vanakkam.
kaalay vanakkam. - இப்ுபேரி 28 4 28 ஆஆணீடு இத்தினத்தில மகப் பகழிவாம்ந்த இந்திற அறிவியலாளரீ சிவி ராமனி ரோமனீ விளைவு0 எனிபதை கணீடுபிடித்ததினம் G2a தேசிய அறிவியல் தினம் வாழ்த்துக்களூன் Sediz SPeoto 2 சனிக்கிறறை காலை வணக்கம்! இப்ுபேரி 28 4 28 ஆஆணீடு இத்தினத்தில மகப் பகழிவாம்ந்த இந்திற அறிவியலாளரீ சிவி ராமனி ரோமனீ விளைவு0 எனிபதை கணீடுபிடித்ததினம் G2a தேசிய அறிவியல் தினம் வாழ்த்துக்களூன் Sediz SPeoto 2 சனிக்கிறறை காலை வணக்கம்! - ShareChat
#naalaya TV nigalchi இன்றைய சினிமா*
naalaya TV nigalchi - ShareChat
#agathiyar manthiram. எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர் அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் மோகனம் எட்டு உட்பிரிவுகளைகொண்டது, அது மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான் 1)சர்வ மோகனம் 2)இராஜ மோகனம் 3)புருஷ மோகனம் 4)ஸ்திரி மோகனம் 5)மிருக மோகனம் 6)சொர்ண மோகனம் 7)சத்துரு மோகனம் 8)லோக மோகனம் என்பனவாகும். இம்மோகனம் எட்டும் சித்திசெய்யும் முறையை இன்றைய பதிவில் காண்போம். மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர் பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய் நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே. சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால் பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய் பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும் கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால் கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே. பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால் நேரடா சகலசெந்து மிருகமெல்லாம் நேர்மையுடனுன் முகங்கண்டபோது வீரடா தானொடுங்கி மோகமாகும் வேதாந்த பூரணமே தான்தானானால் ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ அப்பனே மோகனத்தை யறிந்துதேரே. -அகத்தியர் பரிபூரணம் 1200 பொருள்: வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை சொல்கிறேன் கேள், ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில் நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும், அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும். பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில் தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன் "ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் இம்மோகனம் எட்டும் சித்தியாகும். மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும், மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர். மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள் வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை. 🟨🟨. 🕉️. 🟥🟥🟥 *சர்வம் சிவமயம்* *ஆன்மீக பயணம்* 🟨🟨. 🕉️ 🟥🟥
agathiyar manthiram. - றீங் றீங் - ShareChat