saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#bathil dollungo. அரசியல் சண்டையில கருப்பு படம் எப்படி இருக்குனு யாருமே சொல்ல ..* *அரசியல விட்டு எப்ப சகஜ நிலமைக்கு வரபோறீங்க*
bathil dollungo. - by Bala g reated / led  by Bala , 4 Bala ated by ಫ9 క్డీ created BALA VETTAYAN by Bala g reated / led  by Bala , 4 Bala ated by ಫ9 క్డీ created BALA VETTAYAN - ShareChat
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"* *காலை சூரிய உதயத்தில்...* *கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||* *கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...* *இன்றைய கோபுர தரிசனம்.* *அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில்,* *மூலவர் : பால்வண்ணநாதர்.* *அம்மன்/தாயார் : வேதநாயகி.* *திருக்கழிப்பாலை-608002.* *சிவபுரி போஸ்ட்,* *அண்ணாமலை நகர்,* *சிதம்பரம் தாலுகா,* *கடலூர் மாவட்டம்.* *காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.15 மணி வரை திறந்திருக்கும்.* *+91-98426 24580.* *╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* *★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★* *சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* *╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝* *!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!* *சிறப்பு : தைப்பூசம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 4 வது தேவாரத்தலம் ஆகும்.* *கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜ கோபுரம். உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.* *இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது.* *கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.* *லிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது நம்பிக்கை.* *எல்லா செயல்களிலும் வெற்றிகிடைக்க இங்குள்ள விஜய விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியில் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.* *இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞானாக அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். காசியில் பைரவரை வடிவமைத்த சிற்பியே இங்குள்ள பைரவரையும் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.* *இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.* *அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று வால்மீகி முனிவர் இங்கு வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.* *இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.* *கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது.* *முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு,மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது.* *வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,"முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள்.* *காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள் என்றார்.* *இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.* *இனிய காலை வணக்கம்.🙏💐* *🌹★★★அன்புடன்★★★🌹* *சோழ.அர.வானவரம்பன்*. *+918072055052* ⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐
gopura tharisanam - DINAMA COM DINAMA COM - ShareChat
#innraya SINTHANAY சிந்தனை.*.( 19..05.2026).. …………………………………………….............. *‘’ தேவைப்படாத பொருட்களை..’’* .................................................................... அண்மைக் காலங்களில் தொலைக்காட்சிகளின் விளம்பரங்கள் பல நடுத்தர வர்க்க மக்களைக் கூடத் தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டு, ஆடம்பர பொருள்களை வாங்கிக் குவிக்கச் செய்கிறது! அதிலும் வங்கிகள் தந்த (Credit Cards) கடன் அட்டைகளை வைத்துக் கொண்டு ஆடம்பரப் பொருள்களை வாங்குவது தேவையைக் கருதி அல்ல ஆசையைக் கருதி,தன் தகுதியை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வெளிச்ச வியாதிக்கு பலர் பலியாகி, கண்டபடி குறிக்கோள் இன்றிச் செலவு செய்வதைப் பார்க்கின்றோம்.. தேவையில்லாத நேரத்தில் தேவைப்படாத பொருட்களை வாங்குவதால், தேவைப்படும் போது அதை வாங்க முடியாமல் தள்ளப்படுகின்றார்கள்.. கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும் கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்து விடுகிறார்கள். அதில் பாதிக்கு மேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக் கடைசியில் அவசர செலவுக்குக் கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டு இருப்பார்கள்.. ஆடம்பரத்திற்காக, கட்டாயமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை அனுபவிப்பதாலும் இது தங்களின் சுயமரியாதையை உயர்த்துவதாக நினைப்பதாலும், தங்களுக்குத் தேவையே இல்லாத, விருப்பம் அற்ற,பயன்படுத்த முடியாத பொருட்களை வாங்குவதற்கு ஆளாக்கப்படுகிறார்கள். அதனால் தான் ஆடம்பரக் காலணிகள், உடல் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை, இவர்களுக்குத் தேவை இருக்கின்றதோ, இல்லையோ இவர்கள் வாங்கும் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுகின்றன கிரேக்க நாட்டின் தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒரு முறை ஏதென்ஸ் நகரின் அங்காடித் தெருக்களில் சுற்றிக் கொண்டே வந்தார்.நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களை எல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டே வந்தாராம். மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார். இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்று விடுவார். ஏழாம் நாள் சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக் கண்ட ஒரு கடைக்காரர், "அய்யா நானும் கடந்த பல நாட்களாகப் பார்த்துக் கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள் , கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள், ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை! உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றால் நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார். அதற்கு சாக்ரடீஸ்,- அய்யா கடைக்காரரே., இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!. இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே! என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்", எனக் கூறினாராம். கடைக்காரர் வியந்து போய் விக்கித்து நின்று விட்டாராம்!வீண் செலவு செய்து தேவை அற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதால் ஒருவனின் பொருளாதாரம் மட்டும் அழிவது இல்லை. மாறாக இப்படிப்பட்ட மக்கள் பல ஆயிரம் பேர்கள் இருந்தால் ஒரு நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் *ஆம்.. நண்பர்களே.,* ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். தேவையற்ற பொருட்கள் உங்கள் பட்டியலில் இருந்தால் முதலில் அதை நீக்கி விடுங்கள்.. இன்று நீங்கள் தேவையற்ற ஒரு பொருளை வாங்கினால் நாளை தேவையான ஒரு பொருளை விற்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வரலாம்...... ( ஆக்கம் உடுமலை சு.தண்டபானி.........)💐💐💐💐💐💐*
innraya SINTHANAY - உங்களுக்கு எது தேவையோ அந்த பொருளை மட்டுமே வாங்குங்கள்.உங்கள் ஆசைக்கு வாங்காதீர்கள். உங்களுக்கு எது தேவையோ அந்த பொருளை மட்டுமே வாங்குங்கள்.உங்கள் ஆசைக்கு வாங்காதீர்கள். - ShareChat
#azagaana aangila UVAMAYGAL.
azagaana aangila UVAMAYGAL. - TF YOu BUY THNGS YOu DONT NEED , YOU WILL SOON SELL THINGS YOU NEED. TF YOu BUY THNGS YOu DONT NEED , YOU WILL SOON SELL THINGS YOU NEED. - ShareChat
#veerukonndu Elu. இன்று வலிமையோடு இருக்கிறேன் ஏன் என்றால் அன்றொரு நாள் வலுவிழந்து வாடி வதங்கி மோசமான நிலையைக் கடந்து வந்து உள்ளேன். இன்று நான் பயமற்றவனாக இருக்கிறேன், ஏன் என்றால் அன்று பலமுறை பயந்து பயந்து பயம் பழகி பயமறியாதவனாக மாற்றி விட்டது என்னை. பல முறை அறிவிலித்தனமாகி பலரை நம்பி ஏமாற்ற அனுபவமே இன்று எம்மை அறிவாளியாக இல்லை என்றாலும் நிலைமையை சட்டென்று உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு செயல்படும் புத்திசாலியாக மாற்றியுள்ளது அனுபவம். இவை யாவும் நிகழக் காரணம் என் விதியே. ஆனால் நிகழ்ந்தவை என் வாழ்வை வளப்படுத்த, பலப்படுத்தக் காரணம் நேர்மறை சிந்தனையே, approach anything and everything with a positive attitude. 😊😊😊
veerukonndu Elu. - JUSIRONG BECAUSEIEBEEN UEI IfEARESS BECAUSEIUEBEEIUAFRDID IIISE BEUAUSEIVE BEEIFDOUISH JUSIRONG BECAUSEIEBEEN UEI IfEARESS BECAUSEIUEBEEIUAFRDID IIISE BEUAUSEIVE BEEIFDOUISH - ShareChat
#💪 தன்னம்பிக்கை to solve a problem? நிறைய தன்னம்பிக்கை புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் படிச்சாச்சு. Core point, more or less same. மகரிஷி அவர்களின் சிந்தனை சற்று வித்தியாசமான கோணத்தில் இருக்கும். Just a glance. 1) பிரச்னை குறுக்கிடும் போது மனம் தளரக் கூடாது. 2) நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும். 3) திறக்க முடியாத பூட்டே கிடையாது. சரியான சாவியைத் தான் கண்டு பிடிக்க வேண்டும். 4) ஒரு பிரச்னையால் தவிர்க்க முடியாத துன்பம் வந்தால், தேவையற்ற வினைப் பதிவு கழிகிறது என்ற மனப்பக்குவம் தேவை. 5) பிரச்னை மனதில் எழும் ஆசைகளால் இருந்தால்,மனதில் எழும் ஆசைகனை யாராலும் அடியோடு ஒழிக்க முடியாது. மாறாக அதை சீரமைத்துக் கொள்வதே சரியான வழி. 6) பிரச்னை மற்றவர்களால் இருந்தால், அவர்களைக் குத்திக் காட்டுவது போல் அறிவுரை சொல்லக் கூடாது.தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும். 6) பிரச்னைக்காக, பிறர் மீது கோபம் கொள்ளும் போது, அந்தக் குறை தம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும். 7) அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழி வகுக்கும். தெளிவான சிந்தனைத் துளிகள். 😊😊😊
💪 தன்னம்பிக்கை - 66 Only YOU & yOU change Alone can Your Situation Don't blame it On Others Or ony one! Leonardo DiCaprio '2 IIIESUNE ND 66 Only YOU & yOU change Alone can Your Situation Don't blame it On Others Or ony one! Leonardo DiCaprio '2 IIIESUNE ND - ShareChat
#😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் என்பதற்கு எந்த வேலியுமில்லை.. Just numbers அவ்வளவு தான்... வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்! 20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான்.எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ணக் கத்துக்குவோம். 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டுப் போகக் கத்துக்குவோம். 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான். குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க. 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும். 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான். 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான். மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும். 80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..!அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும். 90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ ஒண்ணு தான் !ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கிப் போயிருக்கும். 100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் !நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது. என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்... அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்.. என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்படக் கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப்படுறத விட்றுவோம்... நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்... தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார். தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார். பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார். கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார். வந்தவரோ “என் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்தத் துண்டு காகிதத்தை வாங்கினார். சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது. இப்போது பீலே சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார். அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே என்று கூறினார். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார். தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” எனக் கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார். எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார். உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார். இப்படி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க கேட்க கோட்டின் வலப்புறம் நிரம்பியிருந்தது. இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது. கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. அது போல முழுக்க முழுக்க துன்பமயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை. இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...! ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்... கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது... அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும். என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்... மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்... வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்துக் கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...? மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்.... Age does not matter at every stage of Life ! வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!", On my journey மனதைக் கவர்ந்தது.... நன்றிகளும் பிரியங்களும். 😊😊😊
😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் - வயது வரைக்கும் 30 எப்படி எதிர்காலத்தை அனுபவிக்க போகிறோம்று கவலைப்படுகிறோம் வயதுக்கு  மேல் கடந்த 30 காலத்தை அனுபவிக்காம விட்டுடோமேறு கவலைப்படுகிறோம் வயது வரைக்கும் 30 எப்படி எதிர்காலத்தை அனுபவிக்க போகிறோம்று கவலைப்படுகிறோம் வயதுக்கு  மேல் கடந்த 30 காலத்தை அனுபவிக்காம விட்டுடோமேறு கவலைப்படுகிறோம் - ShareChat
#nadappathu nadakkattum. வாழ்வதும், பூனைகள் வாழ்வதும் ஒரே வீட்டில் தான்... புலிகள் வாழ்வதும், புள்ளிமான்கள் வாழ்வதும் ஒரே காட்டில் தான்... சிறுமீன்கள் வாழ்வதும், சுறாமீன்கள் வாழ்வதும் ஒரே கடலில் தான்... இல்லாதவனுக்கும், இருப்பவனுக்கும் பூமி ஒன்று தான்... வாழ்க்கை என்பது... ஏழை, எளியோர்க்கு போராடி வெற்றி கொள்வது... ஏமாற்று அரசியல்வாதிக்கோ அடித்துப் பிடுங்கி சாப்பிடுவது... கொள்கை என்பார், கூட்டணி என்பார், அடித்தக் கொள்ளையில் ஆளுக்குப் பாதி பிரித்துக் கொள்வார்... ஏழைகள் முன்னேற ஒரே வழி கல்வி கற்பது தான்... அதிலும் கூட நுழைவுத்தேர்வு என்ற பெயரில் நுழைய விடாமல் தடுப்பதும்... புதியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் ஏழைகளின் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதும்... எதுவென சிந்திப்பீர், செயல்படுவீர், வெற்றி காண்பீர். 😊😊😊
nadappathu nadakkattum. - செய்யும் செயலை முழு மனதோடு செய் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும் செய்யும் செயலை முழு மனதோடு செய் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும் - ShareChat
#sariya thaan sonneengo pongo.
sariya thaan sonneengo pongo. - [ood IJJOTTITJC கோடி, கோடியாக பொருளை சேர்த்திருந்தாலும்,  இறைவன் விதிப்படி தான் அனுபவிக்க முடியுமே தவிர நம் இஷ்டப்படி அனுபவிக்க முடியாது [ood IJJOTTITJC கோடி, கோடியாக பொருளை சேர்த்திருந்தாலும்,  இறைவன் விதிப்படி தான் அனுபவிக்க முடியுமே தவிர நம் இஷ்டப்படி அனுபவிக்க முடியாது - ShareChat