#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,*
*மூலவர் : கயிலாசநாதர்.*
*அம்மன்/தாயார் : காமாட்சியம்மன்.*
*அண்ணாமலை நகர் அஞ்சல்,*
*சிதம்பரம் வட்டம்,*
*முத்தையா நகர்-சி.*
*கொத்தங்குடி,*
*கடலூர்-608002.*
*காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 94435 38084, 78715 85728.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗* 🌟
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052* 📱
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤!!* ✨
*சிறப்பு : சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம், நவராத்திரி உள்ளிட்டவை முக்கிய திருவிழாக்களாகும்.*
*கிழக்குப்பக்கம் வாயில் நுழைவு வாயில் முன் வேம்பு, அரசன் மற்றும் வில்வம் தல விருட்சம் மரம் உள்ளது. மகா மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சுவாமியை தரிசிக்கலாம். தெற்குப் பக்கம் பார்த்து அம்பாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் பலி பீடம் மற்றும் நந்தி மேற்கு பக்கம் தலை சாய்ந்த நிலையில் படுத்துள்ளது. கிரானைட் தரை தளம், வலது பக்கம் சுப்பிரமணியர், இடபக்கம் விநாயகர் அருள்பாலிக்கின்றனர். உள்பிரகாரத்தில் கயிலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஈசன் அருள்பாலிக்கின்றார். வெளிபிரகாரத்தில் தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் நந்தி வணங்கும் கோலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியும், வடக்கு பக்கம் பார்த்த வகையில் விஷ்ணு துர்க்கையும், தெற்கு பக்கம் பார்த்த வகையில் சண்டிகேஸ்வரரும், அவரை வணங்கி சென்று நவக்கிரகங்களை வணங்கி சென்றால் கோயில் நுழைவு வாயிலை சென்றடையலாம்.*
*கல்வி, திருமணத்தடை, புத்திர பாக்கியம் மற்றும் சகல நோய்களையும் போக்கும் தன்மை கொண்டவராக விளங்குவதால் பக்தர்கள் ஏராளமானோர் வந்து பிரார்த்திக்கின்றனர்.*
*நெய் தீபம் ஏற்றி, பக்தர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.*
*சிதம்பரம் நடராஜர், தில்லை காளி மற்றும் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அருகில் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, காயிலாயத்தில் இருந்து மூலவரை காணிக்கையாக வழங்கி 2010 ம் ஆண்டு ஜூன் 24 ம் தேதி கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சங்கராச் சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தியது பெருமைக்குரியதாக அமைந்துள்ளன.*
*நகரில் 1995ம் ஆண்டு புதியதாக கட்டப்பட்ட செல்வ முத்துவிநாயகர் கோயில் 2008 இல் கும்பாபிஷேகம் நடத்த நகர் வளர்ச்சிகுழுத் தலைவரும், ஊராட்சித் தலைவருமான கண்ணன் வேணுகோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அந்தக்கூட்டத்தில் தற்போதுள்ள விநாயகர் கோயில் தவிர சிவன் கோயில் அமைக்கவும், விநாயகர் கோயிலை புரணமைத்து கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒப்புக் கொண்டனர். அதன் பின் ரூ.16 லட்சம் செலவில் கைலாசநாதர், காமாட்சியம்மன், கஜலட்சுமி, வினாயகர், முருகன், பைரவர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் புதிய கோயில் கட்டப்பட்டது.*
*கோயில் கட்ட முதற்கட்டமாக பூஜ்ய ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்ரீசரணர்கள் அனைத்து தெய்வமூர்த்தி சிலைகளையும் இவலசமாக வழங்கி, பொருளாதார வசதி அமோகமாக வளர்சிக்க வேண்டுமாய் அருளாசி வழங்கினர். அவர்களின் ஆசிபடி வெகு விரைவில் கும்பாபிஷேகம் நடந்தேறியது. செல்வந்தர்கள் பலர் தானே முன்வந்து நன் கொடை வழங்கிய நிலையில், நிர்வாக குழுத்தலைவர் கண்ணன் வேணுகோபால் தன் சொந்த வருவாய் பல செலவிட்ட நிலையில், செயலர் பழனியப்பன் தன் பங்கிற்கு உதவியுள்ளார். கோயில் இதர செலவினங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் உரியத்தொகை இறைவன் ஈசன் அருளால் விரைவில் கிடைக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் 2010 ஜூன் 10ம் தேதி திரயோதசி திதியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும், சாத்யயோகமும் கூடிய சுபயோக தினத்தில் ஸ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர் ஸ்வாமிகள், ஸ்ரீவிஜயந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று நடத்தி வைத்தனர்.*
*💐இனிய காலை வணக்கம்.🙏*
*நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்*
*🌹★★★அன்புடன்★★★🌹*
*சோழ.அர.வானவரம்பன்*.
*+918072055052*
🌻🌹🌻🌹🌻🌹🌻
#aalayam arivom. ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் ஈர்க்கும் அன்னை முத்தாரம்மன் அருள் 💕
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்!
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்!
⚜️ ஓம்சக்தி முத்தாரம்மா 🔱
🟨🟨 💐 🟥🟥
*சர்வம்*
*சிவமயம்*
*ஆன்மீக பயணம்*
🟨🟨 🙏 🟥🟥.
#innraya SINTHANAY *இன்றைய சிந்தனை.*.( 17..06.2026 )..
…………………………………………….....
*'’முழு ஈடுபாடு இல்லாமல் "...*
..................................................................
எந்தச் செயலை செய்தாலும், அதை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்வதால் தான் அது அழகு பெறும்.
நாம் என்ன வேலை செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல. துப்புரவுப்பணி செய்பவரா..? வாடகை வாகனம் ஓட்டுபவரா? செருப்பு தைக்கும் தொழில் செய்பவரா? முடி திருத்தும் பணி செய்பவரா? ஆக எந்தச் செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
செய்யும் அந்தச் செயலை இதயப்பூர்வமாக, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வேலை செய்வதே மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கும்.
உங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்வதற்கு போதுமான ஈடுபாட்டை நீங்கள் காட்டவில்லை என்றால், அது வெறும் வேலையாகத் தான் இருக்கும்.
ஒரு வேலையை நன்றாகச் செய்து முடித்த பிறகு கிடைக்கும் திருப்தி அலாதியானது.
வேலையை அனுபவித்து,, ஈடுபாட்டுடன், செய்யாமல், கடமைக்கு என ஈடுபாடின்றி செய்தால், அந்தத் திருப்தியை என்றைக்குமே உங்களால் உணர முடியாது.
ஆகவே, உயர்ந்த அளவுகோல்களை நிர்ணையுங்கள். முடிந்த அளவுக்கு நீங்கள் பார்க்கும் வேலையை,, அது எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக, தரமாக, இதயப்பூர்வமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
மற்றவர்கள் அப்படித் தான் செய்கிறார்கள் என்று நீங்களும் ஏனோதானோவென்று வேலை செய்யதீர்கள்.
நீங்கள் செய்யும் வேலையின் தரமானது உங்கள் மதிப்பை வெளிப்படுத்துகிறது.
ஈடுபாட்டுடன் ஒரு செயலில் இறங்கி விட்டால் நீங்கள் கவலைப்பட நேரம் இருக்காது..
வீட்டை அழகாக வைத்திருக்க விரும்பிய ஒருவர் நிறைய செடி கொடிகளை நட்டு வைத்தார். உரமிட்டார்.... நீர் பாய்ச்சினார்.. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செடிகள் பெரிதாக வளரவில்லை..
என்ன செய்வது என்று அவருக்கு புலப்படவில்லை. மற்றவர்களின் யோசனையின்படி, பக்கத்தில் ஒரு பூங்காவைப் பராமரிக்கும் வயதான முதியவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இரண்டே மாதங்களில் செடி கொடிகள் செழித்து தழைத்து நன்றாக வளரத் தொடங்கின.
வீட்டின் உரிமையாளருக்கு வியப்பு.அதே தண்ணீர்.
அதே உரம். அதே இடம். இது எப்படி சாத்தியமாயிற்று இவருக்கு? என்று எண்ணி,இதைப் பற்றி அந்த முதியவரிடம் கேட்டார்..
முதியவர் சொன்னார்: "அய்யா! நீங்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் நீர் பாய்ச்சுகிறீர்கள்..
நான், குழந்தைக்கு உணவு தரும் அன்னையின் மனநிலையில் இருந்து நீர் பாய்ச்சுகிறேன் என்றார்.
அப்பொழுது தான் உரிமையாளருக்கு புரிந்தது.முழு ஈடுபாடு இல்லாமல் செய்யும் எந்தச் செயலும்.. முழுப்பயன் தராது என்று..
*ஆம்.,நண்பர்களே..,*
எந்தச் செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
வேண்டா வெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல்.
எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையைக் காதலியுங்கள்.
ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..)💐💐💐💐💐💐💐💐💐*
#sirantha unnmay. பெருமைப்படுங்கள்..!!
ஏனெனில், போட்டியில் பங்கேற்பவனுக்கே வெற்றியும் தோல்வியும் சாத்தியம்!
வெறும் பார்வையாளனாக நின்று வேடிக்கைப் பார்ப்பதினும்,போட்டியிட்டுத் தோற்பது பன்மடங்கு உயர்வென்று நினையுங்கள்!
ஓட்டப்பந்தயத்தில் கூட, முதலில் வந்தவனை விட்டு மூன்றாமிடத்தில் வந்தவனுக்குத் தான் முதலில் பரிசு வழங்கப்படுகிறது
வீழ்வது தோல்வியென்று யார் சொன்னது தோழா?
வீழ்ந்த நீ எழுந்தோடாவிடில் அதுவன்றோ பெருந்தோல்வி?
பத்துபேர் பாய்ந்தோடினாலும் பதக்கம் ஒருவனுக்குத் தானே என்று ஒத்துக் கொண்டு ஒன்பது பேர் ஓடாமலா இருக்கக்கூடும் ?
புலியின் பதுங்கல், பாய்ச்சலுக்கன்றி, பயத்தினால் அல்ல!
உங்கள் தோல்வியும் கூட வெற்றிக்கான பாய்ச்சலாகவே இருக்கட்டும்!
வெற்றியைக் கொண்டாடும் வேளையிலும் உங்கள் தோல்விகளை நினைவில் கொள்ளுங்கள்! எதிர்பாராத பொழுதுகளில் அவற்றை என்றேனும் சந்திக்க நேரிடலாம்.
வெற்றியா? தோல்வியா? என்பதல்ல வாதம். ஆடுகளத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை மட்டும் அடிக்கடி உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்!
உயரே தொங்கும் மாங்காய்க்காக கல்லுயர்த்தும் சிறுவனைக் கவனித்துப் பாருங்கள்! கையெறியும் கற்கள் தோல்வியைத் தழுவுகின்றனவே என்று கைவிட்டுப் போவதில்லை எந்நாளும்!
கடைசியில் ஒரு காயாவது
அவன் கைகளில் விழும்; அதுவரை களைப்படைவதில்லை, அவன் கரமும் மனமும்.
உங்கள் தோல்விகளையே கற்களாக்கி, கவனம் சிதறாமல், வெற்றிக் கனியைக் குறி பார்த்து எறிய கற்றுக் கொள்ள்ளுங்கள் அவனிடம்!
எத்தனை முறை கல்லெறியப்படுகிறது
என்பதல்ல கணக்கு! கனி கைவசப்படுகிறதா என்பதில்
இருக்க வேண்டும் உங்கள் கவனம்!
வெற்றியைக் கொண்டாட எவராலும் இயலும், தோல்வியை ஏற்றுத் துவளாதிருக்க ஒரு சிலரால் மட்டுமே முடியும்!
அந்தச் சிலரில் ஒருவராக நீங்கள் இருப்பின், வெற்றிக் கோப்பை விரைவிலேயே உங்கள் கையில் கிட்டும்; வெற்றிமுழக்கம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்...!
வாழ்க வளமுடன்.
#latchiyam vendum. இல்லா வாழ்க்கை.
"வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!" இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும், நமது லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது.
லட்சியம் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ, ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுவதோ அல்ல.
உண்மையான இலட்சியம், திட்டமிடுவது, அதை அடைய கடினமாக வேலை செய்வது ஆகியவை உட்படுகின்றன.
நாம் அடைய வேண்டிய எல்லையும், நாம் கடக்க வேண்டிய இடைவெளியும் தெரியாவிட்டால் நாம் குறிப்பிட்ட இலட்சியத்தை அடைய முடியாது.
நாம் ஒரு இலட்சியத்தை வைக்க வேண்டும், உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதை அடைய நாம் திட்டங்கள் தீட்டி வழி முறைகளை உருவாக்கிக் காலத்தைக் கணக்கிட்டுச் செயலில் இறங்க வேண்டும்.
உங்கள் இலட்சியத்தை இன்றே முடிவு செய்யுங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். காலம் கடந்து போனது போனது தான், இனி திரும்ப வரப்போவது இல்லை.
இனி இருக்கின்ற காலத்தையாவது சரியாகப் பயன்படுத்துவோம்.
இலட்சியத்தை முடிவு செய்வதை சாதாரணமாக நினைக்காதீர்கள்.
இலட்சியம் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனை. இலட்சியத்தை முடிவு செய்வதைத் தள்ளிப் போடப் போட நீங்கள் அடைய வேண்டிய வெற்றிகளும் அனுபவிக்க வேண்டிய சுகங்களும் தள்ளிக் கொண்டே போகும்.
இலட்சியத்தை ஒரே நாளில் முடிவு செய்ய முடியாது தான். ஆனால் ஒரு சில நாட்களில், ஓரிரு வாரங்களில் அல்லது ஓரிரு மாதங்களுக்குள் முடிவு செய்து விடலாம்.
தனி மனித,சமுதாய இலட்சியங்கள் ஆசைகளே இலட்சியங்களாக வளர்கின்றன. மலர்கின்றன. தனிமனிதன் தனக்கு என்று தேடிக் கொள்பவைகளும் இலட்சியங்கள் தாம்.
ஆனால் இந்த நாட்டில் வறுமை ஒழிய வேண்டும், ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகள் களையப்பட வேண்டும், ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும் என்று தன்னை மறந்து இந்த நாட்டுக்காகவும் உலகுக்காகவும் பாடுபடுகின்றவர்களின் ஆசைகளும் இலட்சியங்கள் தாம்.
தனிமனிதன் இலட்சியம் சிறப்பானவை என்றால் சமுதாய இலட்சியங்கள் மகத்தானவை என்று கூறலாம்.
ஒரு நாட்டிற்கு இந்த உலக சமுதாயத்திற்கு இந்த இரு வகையான இலட்சியங்களும் தேவை தான்.
உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ,டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாகக் கொள்ளாதீர்கள்.
அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். நீங்கள் இதை விடவும் பெரிய லட்சியத்தைக் கொண்டிருங்கள்.
ஏனெனில், பெரும்பாலும் கார், பங்களா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது. அளவு கடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும்.
வாழ்வின் இலட்சியத்தை அடைய முயலுகிறவர்கள் வாழ்வே நீண்டதாகும்.
லட்சியத்தை அடைய செயல்கள் செய்தால் மட்டும் போதாது.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு இலட்சியமாக இருத்தல் வேண்டும்.
வாழ்க வளமுடன்.













