saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sitham siva mayam *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁பெரியனெவன் எனமிகவும் பிணங்கயன்மால் அறியாத_ _🍁எரியெனவன் றுயர்ந்தவனே எருதேறும் இறையவனே_ _🍁கரியமிட றுடையவனே கார்வயல்சூழ் ஆமாத்தூர்_ _🍁விரிசடையாய் என்றேத்த வெவ்வினைகள் மேவாவே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_யார் பெரியவன் என்று மிகவும் வாதிட்ட பிரமன் மால் இவர்களால் அறியப்படாத ஜோதியாகி அன்று ஓங்கியவனே !! இடப வாகனத்தை உடைய இறைவனே !! நீலகண்டனே !! நீர் நிறைந்ததும் பசுமை திகழ்வதுமான வயல்கள் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற, விரிசடையை உடைய பெருமானே என்று துதித்தால் கொடிய வினைகள் அடையா !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
sitham siva mayam - ShareChat
#innraya SINTHANAY சிந்தனை.*.( 13.05.2026).. ……………………………………………............ *முயன்றால் முடியும்"..* ...................................... ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். பல்வேறு உலகப் புகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் எனக் கருதி உழைத்தனர். இறுதியில் வெற்றி பெற்றனர்... தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார். முயன்றால் முடியும், இடியையும் தாங்கலாம். முயன்றால் முடியும், இருள் நீக்கி விடியலையும் காணலாம். முயன்றால் முடியும், முடிவில் புகழை அள்ளலாம். முயன்றால் முடியும், விண்ணையும் தொடலாம். முயன்றால் முடியும், மண்ணில் பொன்னையும் பார்க்கலாம். முயன்றால் முடியும், கறை படியும் கரங்களும் சரித்திரம் படைக்கலாம். ஆனால் முயற்சி இல்லாதவர் வீழ்ச்சி அடைகிறார். முயற்சித்தவர் மகிழ்ச்சி கொள்கிறார்.. முயற்சியை மூச்சு போல் நினைப்பவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். முயற்சியை அலட்சியம் செய்பவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் .. திருவள்ளுவரும் இதைத் தானே சொல்கிறார். ‘’முயற்சி திருவினை யாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’’ என்று. நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு, முயன்று செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். *ஆம்.,நண்பர்களே..,* முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். (ஆனால்) முயலாமை வெல்லாது எந்நாளும்... முயன்றால் முடியும் என்பவனுக்கு தடைக்கல் படிக்கல் போலே. முடிவில் வெற்றி தழுவும். முயன்றால் முடியும் என்பவனை முடிவில் நெருங்கும் நிலையான மதிப்பும் நிம்மதியான வாழ்வும்..... (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி......)💐💐💐🙏🏻🌹🌹🌹*
innraya SINTHANAY - முயன்றால் முடியாதது எதுவுமே உறுதியும் அயராத |6060)60.[060[ உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் முயன்றால் முடியாதது எதுவுமே உறுதியும் அயராத |6060)60.[060[ உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் - ShareChat
#thannambikkay thulirgal விருப்பமா அவமானப்படுங்கள். என்னை நானே யாரென்று புரிய எனக்கு தேவைப்படும் ஓர் ஆயுதம் தான் அவமானம்! இது உண்மை என்பது போல், அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவமானங்கள் தான், நம்மை திசை மாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்த அவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்பக் கட்ட அடித்தளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும். நம்மை அவமானப்படுத்துவோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும் போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும். நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. "அந்தக் குப்பையை தனக்கான உயிர்ச் சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளைத் தருவதில்லையா!" நாம் அந்தச் செடியைப் போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கிச் செல்ல வேண்டாமா?*ன உங்களுடைய குறைகளைச் சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியைப் பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப் படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். சோர்ந்து போகாதீர் அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றியாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தைக் கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகி விடுவது. மனித இனத்தைத் தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான். சாதிக்க விருப்பமா மனதை பக்குவபடுத்துங்கள் ( அவமானப்படுங்கள்)😊😊😊
thannambikkay thulirgal - சாதிக்க வேண்டுமா அவமானப்படுங்கள் சாதிக்க வேண்டுமா அவமானப்படுங்கள் - ShareChat
#Vaalga emm TAMIL Moli, Vaalga emm TAMIL INAM, valarga emm Thesam. தமிழின் நவீன சிறப்பு.. ! 💢▪️கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...! 01.டிஜிட்டல் மொழியாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் இந்திய மொழி நம் தாய்மொழி தமிழ்மொழி. 02. வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா எனக் கண்டறிய அனுப்பப்பட்ட விண்கலத்தில் அனுப்பியது தமிழைத் தான் இந்தியை அல்ல. 03. சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம். 04. ரஷ்யா நாடாளுமன்றத்தின் நான்கு வாயிலின் பெயர் நம் தமிழில் உள்ளது. 05.உலகம் அழிந்து விட்டால் அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் திருக்குறள் உள்ளது. 06.லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனித் துறை வழங்கப்பட்டுள்ளது. 07.ஆறு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி தமிழ். 08. இந்தியாவிலேயே முதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான். 09.முதன் முதலில் நிலவுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஓன்று. 10.ஆங்கிலத்துக்குப் பின் இணையதளங்களில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே. 😊😊😊
Vaalga emm TAMIL Moli, Vaalga emm TAMIL INAM, valarga emm Thesam. - தமிழின் சிறப்பும் ` கட்டாயம் தெரிந்ததொள்ளுங்களிய தமிழின் சிறப்பும் ` கட்டாயம் தெரிந்ததொள்ளுங்களிய - ShareChat