
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோயில் (தேவநாதப் பெருமாள்),*
*மூலவர் : வரதராஜப்பெருமாள்.*
*உற்சவர் : தேவநாதப்பெருமாள், யோக ஹயக்ரீவர்.*
*செட்டிபுண்ணியம் 603 204.*
*செங்கல்பட்டு,*
*காஞ்சிபுரம் மாவட்டம்.*
*காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 8675127999.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*சிறப்பு : வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.*
*நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம் பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது.*
*கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது.*
*யோக ஹயக்கிரீவருக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*
*கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும் வந்து சென்ற மாணவ, மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டி புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது.*
*இத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை. தாடகைவதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள்.*
*செட்டி புண்ணியம் தலத்துக்குச் சென்று ஸ்ரீயோக ஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாத சுவாமியையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட குடும்பத்தில் அறிவும் ஞானமும் பெருகும் ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் பிரத்தியட்சமாகக் காட்சியளித்து, சகல கலையிலும் கல்வியிலும் மேன்மையடைய அருள்புரிந்தார்.*
*சுமார் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும் ஹயக்ரீவரும், மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.*
*யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது சிறப்பு.*
*இனிய காலை வணக்கம்.🙏💐*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்.* *+918072055052.*
🌻🌹🌻🌹🌻🌹🌻
#athaanango sari. ஆமையாக இருந்தாலும் என் வீட்டிலும் 3 அணில் குஞ்சுக இருக்கு*
*அதுங்க படம் பார்த்து அல்ல...இந்த பாட்ட கேட்டும்( ராவணன் மகண்டா),இந்த வசனத்த கேட்டும்,(ஓம் சக்தி பராசக்கி,னு) அரசியல் ரிவ்யூ யூடிப்ல பார்த்து அனிலாக மாருச்சுங்க...*
*அதுல மூத்த அனில் கேக்குது ,என்ன தீயசக்தியும்,தூயசக்தியும் ஒன்னா நிக்குதுனு...*
*2 வது அனில் சொல்லுச்சு சண்டைக்கு கூப்டுவாங்க யாரு ஜெயிப்போம்னு...*
*இது ல ஒரு கொடுமை என்னனு கேட்டா..?*
*என் மகன் 3 வது அனில் கேட்டுச்சு ,எம்மா இதுல யாருமா வி(ச)ஜய் ,னு...*
*சரி ஆமையாக ஒன்று சொல்கிறேன்....*
*நம்ம ~அனில்~ கடைசியா எல்லாரும் பனையூருக்கு வாங்கன்னு சொல்லாம*
*ஒரு வழியா வீடு தேடி போயிட்டாரு cm*
*இனி தேறிடுவார்*
*கொஞ்சம் கொஞ்சமா எதிர் பாருங்க*
*வந்த 2 நாள் லையே 2000 (ம்,₹) கேள்வி கேட்டா என்ன பன்னுவார்...*
*அதுவும் அவருக்கு ஓட்டு போடாதவன் தான் கேக்குறான் அது என்னாச்சி ..? இது என்னவாச்சினு..🤦🏼♂*
*முடிந்த அளவு மீடியாகாரர்களை நிராகரிப்பதே நல்லது..*
*ஒரு விஜயகாந்துடன் போதும்*
*ஆமையும் சரி அனிலும் சரி யாருக்கும் தொந்தரவு கொடுக்காது*
*ஒரு சில நரிகள் தான்*
*இதுல எதுக்கு ஆமை அனில் நரி னு சொல்றேனா...*
*இது அரசியல் பதிவு இல்ல*😁🤷🏼♂️
#innraya SINTHANAY சிந்தனை.*.( 12.05.2026)..
……………………………………………..........
*’சோம்பலை விரட்டுவோம்..'*
.......................................................
நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவு தான் என எண்ணி மூலையில் முடங்கிப் போய் விடுகினறோம்.
சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மா தான் இருக்கிறேன்” என்பான்.
“சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி இது அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
உற்சாகமுடையவர்கள் இவ்வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள்.
சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள்.
அப்படிக் காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே..
சோம்பல் தான் சுறுசுறுப்பின் எதிரி !சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள்.
சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக் கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.
இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள்.
வாழ்வின் பாதையில் முள் வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள்.
சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.
அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்..
ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.
அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.
அதற்கு அந்தப் பறவை,
""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.
தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,
அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...
மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது. கதையைச் சொல்லி முடித்த மகான்,
"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்.
சோம்பேறியாக இருந்தால் வறுமை தான் கிட்டும்'' என்றார்.
''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''.
சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!
*ஆம்,நண்பர்களே.,*
ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல் தான். சோம்பலாலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது.
எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...
(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி...)🌹🌹🌹🙏🏻💐💐💐*
#innraya SINTHANAY சிந்தனை*
🌷12.05.2026🌷
சூது வாது.
ஒரே மாதிரி இருக்காதீர்கள்.
வாடிக்கையாக
வாலாயமாக,
ஒரே மாதிரி தான் உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நீங்களும் அதே மாதிரி இருந்தால் யாரும் உங்களைக் கவனிக்க மாட்டார்கள்.
மர்மமாக இருந்தால் உடனே கவனிப்பார்கள்.
எனவே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையோ,
என்ன செய்யப் போகிறார்கள் ? என்பதையோ பிறர் தெரிந்து கொள்ளும்படி தெளிவாக நடந்து கொள்ளாதீர்கள்.
கையில் இருக்கும் சீட்டு மொத்தத்தையும் காட்டாதீர்கள்.
உங்கள் நடவடிக்கையில்
ஒரு புதிர் இருக்கட்டும்.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் ? என்பதை ஆர்வத்துடன் மக்கள் கவனிக்கட்டும்.
😊😊😊
#vaalkkay payanam. வாழ்க்கைப் பயணத்தில்...
மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டே இருந்தால். நிம்மதியைக் கூட இழந்து விடுவோம். வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்வோம். மகிழ்ச்சி தானே தேடி வரும்.
யாரும் பாராட்டும் அளவுக்கு வாழணும்ன்னெல்லாம் எந்த அவசியமும் இல்லை, நமக்கு திருப்தியா வாழ்ந்தாலே போதும். திருப்தியா உங்களுக்குப் புடிச்ச மாதிரி இருக்கப் பழகுங்கள்.
காலந்தாழ்த்தாமல் செய்கின்ற ஒவ்வொரு செயலும், நமக்கு மன நிறைவையும், வெற்றியையும்
தேடித் தரும்.
எப்படி ஆரம்பித்தீர்கள் என்பது பற்றி யாரும் கண்டுக்கப் போறதே இல்ல. எப்படி முடிக்கிறீங்க என்பதில் தான் இருக்கு வெற்றி.
மனதுக்கு நெருக்கமாக இல்லாதவங்க தப்பா என்ன சொன்னாலும் மனதை காயப்படுத்த அனுமதிக்காதீங்க.
வாழ்க்கை என்பது...
ஒரு ரயில் பயணம் மாதிரி...
நிறைய நிறுத்தங்கள்....நிறைய வழித் தடம் மாற்றங்கள்....விதம்விதமான மனிதர்களுடன் பயணங்கள்....சில நேரம் விபத்துக்களும் கூட...
அனைத்தையும் ரசித்துக் கொண்டே பயணிக்கக் கற்றுக் கொள்வோம் வாழ்விலும் கூட...
அழகாய் அமையட்டும் இந்த வாழ்க்கைப் பயணம்..!!
வாழ்க்கைல எதுவும் சும்மா கிடைச்சிடல. கிடைச்ச எல்லாத்தையும் பாராட்டக் கத்துக்குவோம்.
நல்லதே நடக்கும்..!!!
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 ஒரு நல்ல வேலைக்காரன், ஆனால் மோசமான எஜமானன்.
உங்கள் எதிரிகளை கவனியுங்கள் அவர்களே உங்கள் பலவீனங்களை முதலில் கண்டுபிடிப்பவர்கள்.
நமக்கு தெரிந்தது எது? தெரியாதது எது? என்பதை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு.
சில சமயம் "இழப்புகள்" தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
அனுபவித்தக் காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
செய்து முடிக்கப்பட்ட மாபெரும் சாதனைகள் அனைத்தும் செய்ய முடியாதவர்கள் என்று முதலில் பலரால் நிராகரிக்கப்பட்டவை தான்.
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.
அறிவியல் துறையில் போட்டி வேண்டும், ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும், ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
வெற்றி என்பது நிரந்தரமல்ல, தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும்.
வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள். 😊😊😊
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁திருவாரும் மலைதன்னைச் சினந்தெடுத்த இலங்கைக்கோன்_
_🍁வெருவார மலர்ப்பாத விரலூன்றி நெரித்தவனே_
_🍁அருளாளா நெல்லாரும் அணிவயல்சூழ் ஆமாத்தூர்ப்_
_🍁பெருமானே என்றுதொழும் பெற்றியினோர் பெரியோரே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_திரு மிக்க கயிலைமலையைப் பெருங்கோபத்தால் பெயர்க்க முயன்ற இராவணனுக்கு அச்சம் மிகும்படி மலர்ப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனே !! அருளின் உறைவிடமே !! நெல் நிறைந்த அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூரில் உறைகின்ற பெருமானே என்று வழிபடும் குணம் உடையவர்கள் பெரியவர்கள் !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 #sitham siva mayam
#kelvi-pathil
அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
கேள்வி: சுவாமிஜி! 1. நாம் அதிகம் விரும்பியவர்கள் இறந்து விட்டால் அவர்களுடைய உயிர் நம்மோடு இணைய என்னென்ன செய்ய வேண்டும்?
2. வள்ளலாரை நான் அதிகம் நேசிக்கின்றேன். அவர் உயிர் என்னிடம்
இணைய முடியுமா?
பதில்: நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். யாரிடம் ஒத்த பதிவுகள் உள்ளனவோ அவர்களிடம் இறந்தவர்களுடைய உயிர் தானாகவே இணைந்து கொள்ளும்.
உங்கள் உயிரைவிட வள்ளலார் உயிர் சிறந்த நுட்பம் வாய்ந்தது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது போல் இன்னும் 1000 பேர் 10,000 பேர் ஏற்றுக் கொள்ள விருப்பமுற்று முயன்று கொண்டிருப்பர்.
எந்த உயிர் பொருந்துமோ, எந்த உயிரின் அறிவு பொருந்துமோ அவ்வுயிருடந்தான் அவரின் உயிர் இணையும். விரும்புகிற எல்லோருடைய உயிரோடும் இணைய முடியாது. எப்பொழுதும் அவரையே நினைத்துக் கொண்டிருந்தால் – இயல்பூக்க நியதியின்படி – அவருடைய அறிவைப் பெறலாம்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹
#anubava vaakkiyam 12: வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.
இறையோடு இணைந்த செயல்:
.
"நாம் வாழ்த்தும் போது முதலாவது நமது மனம் இறை உணர்வோடு அதாவது அறிவின் இயக்கத்தில் நுண்ணிய பகுதியை அடைகிறது. 'வாழ்க' என்று சொல்லும்போதே குளிர்ச்சியாக நல்ல எண்ணத்தோடு சொல்லும்போது நாமே முதலில் நம்மை வாழ்த்திக் கொள்ள வேண்டும். அந்த அலை எழும் போதும் அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. இப்படி வாழ்த்தி வாழ்த்திச் சிறிது காலத்தில் நீங்கள் தானாகவே இறை உணர்வில் கலந்திருக்கும் நிலை உருவாகும்.
இவ்வாறு வாழ்த்திப் பழகிக் கொண்டவர்களுக்கு எல்லாச் செயலும் அந்த இறையோடு இணைந்த செயலாக நற்செயலாக இருக்க முடியும். அதே போல நீங்கள் ஒரு வாழ்த்துச் சொல்கிறீர்கள் பல தடவை சொல்கிறீர்கள், ஆயிரம் தடவை சொல்லும் போது ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு நினைவுக்கும் அந்த வாழ்த்துக்கும் ஆயிரம் தடவை வாழ்த்திவிட்ட பிறகு ஆயிரத்தோராவது தடவை வாழ்த்தினால் என்ன பலன் என்றால் ஆயிரம் தடவை வாழ்த்தினால் என்ன பலனோ அந்த அளவுக்கு அழுத்தம் பயன்பெறும். ஆகவே ஓய்வு இருக்கும் நேரத்தில் எல்லாம் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
தவம் செய்த பிறகு இருக்கும் நேரத்தில் என்ன செய்வது, அதற்கு எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்பார்கள். அதற்குத் தேவையே இல்லை வாழ்த்து என்கிற மந்திரம் எப்பொழுதும் இருக்கிறது. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? ஐம்பது பேர், நூறுபேர், என்று சொல்கிறீர்கள் அல்லவா? அதிலே ஒருவரை எடுத்துக் கொண்டு நூறு தடவை வாழ்த்துங்கள். பிறகு இன்னொருவரை நூறு தடவை வாழ்த்துங்கள். தீமை செய்தவரை முதலில் வாழ்த்துங்கள். நன்மை செய்தவரை பின்னால் வாழ்த்துங்கள். அதன் பிறகு நேரம் இருக்கிறதா என்று பார்த்தால் நேரமே இருக்காது.
நீங்கள் வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க, உயிர்க் கலப்பு வர வர தீமை செய்யக் கூடியவர்கள், தீமையான எண்ணம் உடையவர்கள் எல்லாம் நாம் நினைக்கும் போது அவர்களுக்கும் ஒரு திருப்பம் வந்து விடும்.
இவரோடு போராட்டம் செய்தேனே இவருக்குப் போய் தீமை செய்தோமே, தவறாக நினைத்தோமே என்ற எண்ணம் வரும். இந்த உயிரோட்டம் (interaction) அவர்கள் உள்ளத்திலே தானாகவே அவர்களுடைய நிலைமையை மாற்றி குணத்தை மாற்றி நன்மையே செய்வதற்குப் பலன் கொடுக்கும்.
ஆகவே நல்லவர்களை வாழ்த்துவதனால் நன்றி தெரிவித்துக் கொள்கின்றீர்கள். பொல்லாதவர்களை வாழ்த்துவதனால் இரண்டு பலன் கிடைக்கிறது. தீமையை முதலில் விலக்கிக் கொள்கிறோம், அது மாத்திரம் இல்லை அவனை வாழ்த்திக் கொண்டே இருக்க இருக்க அந்தத் தீமை செய்தது போக நன்மை செய்கிறான்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி




![athaanango sari. - [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV - ShareChat athaanango sari. - [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV [TPULHINIhAI] PLUS JAY/ Polimer' THANTHI TV - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_653696_c98cf61_1778569652240_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=240_sc.jpg)







