saravanan.
ShareChat
click to see wallet page
@60258885saravanan
60258885saravanan
saravanan.
@60258885saravanan
ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்
#sathaana unavu. மிளகுப் பொங்கல் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் சாமை அரிசி – 500 கிராம் பாசிப்பருப்பு – 250 கிராம் இஞ்சி (துருவியது) – இரண்டு தேக்கரண்டி நெய் – 3 மேசைக்கரண்டி முந்திரி – 10 கிராம் சீரகம் – 2 தேக்கரண்டி மிளகு – 3 தேக்கரண்டி கல் உப்பு – தேவையான அளவு செய்முறை பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார். பலன்கள்: எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சோளம் உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும். 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥
sathaana unavu. - GROY GROY - ShareChat
#sathaana Pazarasam. ஜூஸ் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் தேங்காய் பால் 1 கப் குருதிநெல்லி - 1 கப் செய்முறை குருதிநெல்லி தேங்காய் பால் சேர்த்து சேர்த்து நன்றாக அரைத்து குடிக்கவும். குருதிநெல்லியின் பண்புகள் பற்றி அறிந்திருக்கலாம். உடலில் உள்ள குளுக்கோஸை அகற்றுவதற்கான முக்கிய பொருள்களில் இதுவும் ஒன்றாகும். காலையில் ஒரு மிருதுவாக தயாரிக்கப்பட்ட பானத்தை அருந்தும் போது , அவை கொழுப்புகளை அகற்றுவதற்கு உதவுகின்றன. 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥
sathaana Pazarasam. - ShareChat
#sathaana Resam. ரசம் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் புளி - ஒரு லெமென் சைஸ் தக்காளி - ஒன்று அரைத்து கொள்ள இஞ்சி இரண்டு அங்குல துண்டு மிளகு - அரை தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி முழு தனியா - ஒரு மேசை கரண்டி காஞ்ச மிளகாய் - இரண்டு கொத்து மல்லி தழை - கால் கை பிடி அளவு கருவேப்பிலை - கால் கை பிடி அளவு தாளிக்க நெய் - ஒரு தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு செய்முறை 1. புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். 2.அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும். 3. தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 4. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும். 5. சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி. குறிப்பு: பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம். சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம். வீசிங் பிராப்ளம் உள்லவர்கலுக்கும் நல்லது. சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம். உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥
sathaana Resam. - சிலமயம் சரவம்  ஸஅபகுரூ சிலமயம் சரவம்  ஸஅபகுரூ - ShareChat
#mookkay tholaykkuthe saami. வெங்காய வறுவல் செய்வது எப்படி.... தேவையான பொருட்கள் சிக்கன் – 1/4 கிலோ சின்ன வெங்காயம் – 150 கிராம் இஞ்சிபூண்டு விழுது – 1 டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கரம் மசாலாத்தூள் – 1 டீ ஸ்பூன் மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிதளவு செய்முறை சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் சிக்கனை போட்டு வதக்கவும். பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும். (இடையில் கிளறி கொள்ளவும்.) சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும். 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥
mookkay tholaykkuthe saami. - சிவமயம்  சர்வம்  வாட் ஸஅப்குரூ ் சிவமயம்  சர்வம்  வாட் ஸஅப்குரூ ் - ShareChat
#enna oru Rusi saami. குழம்பு செய்வது எப்படி..... தேவையான பொருட்கள் கோழி துண்டுகள் - ஒரு கிலோ வெங்காயம் - பெரியதாக ஒன்று தக்காளி - இரண்டு பச்சைமிளகாய் - ஒன்று எண்ணெய் - 100 மிலி நெய்1 - தேக்கரண்டி பட்டை - 1 இன்ச் அளவு இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி கரம்மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி சோம்புத்தூள் - 1 தேக்கரண்டி மல்லி,புதினா தழை - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து உருளைகிழங்கு - ஒன்று அரைத்து கொள்ள தேங்காய் துருவல் - ஒரு கப் முந்திரி - 5 மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி சீரகத்தூள் - 2 தேக்கரண்டி மல்லித்தூள் - 3 தேக்கரண்டி செய்முறை கோழியை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது போட்டு நன்கு மூன்று நான்கு முறை கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம்.தக்காளி இவைகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளையை தோல் சீவி கழுவி விட்டு பெரியதாக இருந்தால் ஆறு துண்டுகளாகவும்,சிறியதாக இருந்தால் நான்கு துண்டுகளாகவும் வெட்டி கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். நன்கு பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி,பச்சைமிளகாயும்,அரிந்து கழுவிய மல்லி புதினா தழையையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் தூள் வகைகளை போட்டு கிளறி விட்டு சிக்கனையும்,ஒரு ஸ்பூன் உப்பையும் போட்டு நன்கு ஒன்று சேர கிளறி மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதங்க விடவும்.( எவ்வளவு நன்றாக வதங்க விடுகிறோமோ அவ்வளவு நன்றாக குழம்பு அமையும்) அதற்குள் அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு வதங்கிய சிக்கனில் அரைத்தவற்றை இரண்டு டம்ளரில் கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பும்,கிழங்கும் சேர்த்து மிகவும் தண்ணியாக இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் திட்டமாக இருக்கும்படி பார்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும். கோழி குழம்பு தயார். 🟨🟨🟨🟥🟥🟥 *சமையல் குறிப்புகள்* 🟨🟨🟨🟥🟥🟥
enna oru Rusi saami. - + + - ShareChat
#azagaana aangila UVAMAYGAL.
azagaana aangila UVAMAYGAL. - GONTROL YOUR LAZINESS, AND YOULL UNDERSTAND HOW MUCH SUCCESS YOUVE BEEI AVOIDING " 99 GONTROL YOUR LAZINESS, AND YOULL UNDERSTAND HOW MUCH SUCCESS YOUVE BEEI AVOIDING " 99 - ShareChat
#sinthanay thuligal. *சிந்தனை துளிகள்* 🤔 வாழ்க்கை நம்மிடம் உள்ள அனைத்தையும் பறித்துக்கொள்ளலாம், ஆனால் நாம் கொடுத்த அன்பையும், நாம் காட்டிய கருணையையும், நாம் பகிர்ந்த அமைதியையும் அதனால் ஒருபோதும் பறிக்க முடியாது. என்றென்றும் நிலைத்திருப்பது பொருள் சார்ந்த விஷயங்கள் அல்ல, மக்களின் இதயங்களில் நாம் விட்டுச் சென்ற நன்மையே. அக்கறை, பொறுமை, புரிந்துணர்வு போன்ற சிறிய செயல்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு மரபை உருவாக்குகின்றன. இறுதியில், மனிதனாக இருப்பது ஒரு பெரிய சாதனை அல்ல, ஆனால் நல்ல மனிதனாக இருப்பதே உண்மையில் முக்கியமானது. 🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
sinthanay thuligal. - ShareChat
#sinthippom thozargale..
sinthippom thozargale.. - Qav @ Coಬlarm (Ciied   Btesse/ Day] வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்லஃ ஆசைகள் அதிகரிப்பதால் தான்! Qav @ Coಬlarm (Ciied   Btesse/ Day] வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்லஃ ஆசைகள் அதிகரிப்பதால் தான்! - ShareChat